Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

Monday, January 23, 2012

புரட்சி நினைவு தினம்: எகிப்தில் 1959 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

imagesCA33ZQ2T
கெய்ரோ:எகிப்தில் 1959 சிறைக் கைதிகளுக்கு ராணுவ கவுன்சில் தலைமையிலான அரசு பொது மன்னிப்பு வழங்கியுள்ளது.
சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் பதவி விலகிய பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ராணுவ கவுன்சில் தலைவர் ஹுஸைன் தன்தாவி ராணுவ நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்களுக்கு மன்னிப்பு வழங்கி உத்தரவிட்டார். எகிப்து நாட்டில் புரட்சி வசந்தம் வீசத்துவங்கி ஒரு வருடம் நிறைவுறுவதையொட்டி இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி25-ஆம் தேதி எகிப்து புரட்சியின் முதல் நினைவு தினமாகும்.

Sunday, January 22, 2012

லிபியாவில் ஷரீஅத் சட்டத்தை அமுல்படுத்தக்கோரி பிரம்மாண்ட பேரணிகள்

Libyan Islamists rally to demand sharia based law
திரிபோலி:எதிர்கால லிபியா அரசியல் சட்டத்தின் அடிப்படை இஸ்லாமிய சட்டமாக இருக்கவேண்டும் என கோரி லிபியாவில் பிரம்மாண்ட பேரணிகள் நடைபெற்றன. தலைநகரான திரிபோலி, ஸபா மற்றும் கிழக்கு நகரமான பெங்காசியிலும் பேரணிகள் நடைபெற்றன.
திருக்குர்ஆனை உயர்த்திப் பிடித்தவாறு மக்கள் இப்பேரணிகளில் கலந்துகொண்டதாக எ.எஃப்.பி கூறுகிறது. இஸ்லாத்தை நாட்டின் அதிகாரப்பூர்வ மார்க்கமாக(religion) மாற்ற அரசியல் சாசனத்தில் பிரத்யேக பிரிவை இணைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பெங்காசியில் தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்ட மக்கள் மத்தியில் பிரபல முஸ்லிம் தலைவர் கைதுல் ஃபக்ரி உரை நிகழ்த்தினார். லிபியாவை ஃபெடரல் ஸ்டேட்டாக மாற்றுவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திரிபோலியில் அல்ஜீரியா சதுக்கத்தில் போராட்டம் நடத்தியவர்கள் முன்னாள் அதிபர் முஅம்மர் கத்தாஃபியின் க்ரீன் புத்தகத்தின் நகல்களை எரித்தனர்.
கத்தாஃபி கொல்லப்பட்டு மூன்று தினங்கள் கழிந்த பிறகு நடந்த சுதந்திர பிரகடன நிகழ்ச்சியில் லிபியாவில் தற்காலிக அரசை நடத்தி வரும் தேசிய மாற்றத்திற்கான கவுன்சிலின் தலைவர் முஸ்தஃபா அப்துல் ஜலீல்,ஷரீஅத்(இஸ்லாமிய)சட்டத்தின் அடிப்படையிலான இஸ்லாமிய நாடாக லிபியா திகழும் என அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி தூது ஆன்லைன் 

ஈரானை தாக்கக் கூடாது – பிரான்சு எச்சரிக்கை

French President Nicolas Sarkozy
பாரிஸ்:ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு எதிரான ராணுவ நடவடிக்கை போரையும், அராஜகத்தையும் உருவாக்கும் என பிரான்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுக்குறித்து அவர் கூறியது: ராணுவ நடவடிக்கையை தவிர்க்க எங்களால் இயன்ற அளவு முயற்சிப்போம். ராணுவ நடவடிக்கை என்பது பிரச்சனைக்கு தீர்வு ஆகாது. மாறாக, பிரச்சனையை மேலும் சீர்குலைக்கும்.
வளைகுடா பகுதியை மட்டுமல்ல, உலகம் முழுவதையும் போரை நோக்கி தள்ளும் என்று சர்கோஸி கூறினார்.
ஈரான் மீது தாக்குதல் நடந்தால் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகில் எண்ணெய் வர்த்தகத்தின் 20 சதவீதமும் இவ்வழி மூலமாகத்தான் நடக்கிறது. இதனை கவனத்தில் கொண்டுதான் சர்கோஸி ஈரான் மீதான ராணுவ தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என கருதப்படுகிறது.
ராணுவ நடவடிக்கைக்கு பதிலாக பொருளாதார தடையை வலுப்படுத்த வேண்டும் என சர்கோஸி கருத்து தெரிவித்துள்ளார்.
நன்றி புதிய தூது 

எகிப்தின் வரலாற்றில் முதல் தடவையாக ஹிஜாபுடன் தொலைகாட்சி நிகழ்சி நடத்த அனுமதி



 எகிப்து அரச தொலைகாட்சிகளில் பெண்கள் ஊடகவியலாளர்கள்  நிகழ்சிகளை நடத்தும்போது ஹிஜாப் அணிய பல ஆண்டுகளாக இருந்து வந்ததடைக்கு எதிராக எகிப்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பெண்கள் ஹிஜாப்புடன் தொலைகாட்சிகளில் நிகழ்சிகளை நடத்த உரிமை பெற்றவர்கள் என்று  எகிப்தின் வரலாற்றில் முதல் தடவையாக நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது.

எகிப்தில் எழுதப்படாத சட்டமாக இருந்தாலும் எந்த பெண்ணும் ஹிஜாபுடன் நிகழ்சிகளை நடத்த அனுமதி மறுக்கப்பட்டு வந்துள்ளது இதனால் பல பெண்கள் தமது வேலைகளை தூக்கி எறிந்துள்ளனர்.சிலர் தடைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தாலும் வழக்குக்கான தீர்ப்பு வழங்கப்படாமல் காலம் கடத்தும் கைங்கரியம் மக்கள் எழுச்சி ஏற்படும் வரையில் இருந்து வந்துள்ளது .

ஹிஜாப் தடைக்கு எதிரான முதல் தீர்ப்பு கடந்த டிசம்பர் மாதம் வழங்கப்பட்டுள்ளது. எகிப்தில் கடந்த 1965 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த தடை இருந்து வந்துள்ளது. தொலைகாட்சி நிலையங்களில் தொழில் புரியும் பெண்கள் இஸ்லாமிய உடைகளை அணிவது தொடர்ந்தும் அதிகரித்து வந்துள்ளது. தற்போது ஊடகத் துறையில் பட்டம் பெரும் 95 வீதமான பெண் ஊடகவியலாளர்கள் இஸ்லாமிய உடைகளைத்தான் அணிவதாக எகிப்திய தகவல்கள் தெரிவிக்கிறது.
தீனா சகரியா என்ற பெண் ஊடகவியலாளர் பல ஆண்டுகளுக்கு முன்னர் தொடுத்த வழக்கின் தீர்ப்பே தற்போது வழங்கபட்டுள்ளது. சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் பதவியில் இருந்தால் இந்த தீர்ப்பு வழங்கப்படாமலே காலம் கழிந்து கொண்டிருக்கும் என்று எகிப்து மக்கள் கருத்துரைத்துள்ளனர்.
நன்றி புதிய தூது 

Saturday, January 21, 2012

டெஹ்ரானில் மர்மமான முறையில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் கொலை


Tehran, Iran: Iran has accused the US and Britain of being behind the assassination of an Iranian nuclear scientist this week in Tehran. Iran’s foreign ministry has sent a diplomatic letter to the US saying that it has “evidence and reliable information” that the CIA provided “guidance, support and planning” to assassins “directly involved” in Mostafa Ahmadi-Roshan’s killing, the IRNA state news agency reported yesterday (Saturday).

இந்தவாரம் தலைநகர் டெஹ்ரானில் மர்மமான முறையில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் கொலையில், அமெரிக்க பிரிட்டிஷ் உளவுத்துறைகள் நேரடியாகச் சம்மந்தப் பட்டுள்ளதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக ஈரான் நேற்று (சனிக்கிழமை) குற்றம்சாட்டியுள்ளது. ஈரானிய வெளியுறவு அமைச்சு இது தொடர்பான ராஜதந்திர கடிதம் ஒன்றை அமெரிக்காவிடம் சேர்ப்பித்துள்ளது.

எகிப்து பாராளுமன்ற தேர்தல் : இஸ்லாமிய சகோதரத்துவ கட்சி மாபெரும் வெற்றி


அமெரிக்காவில் மனநலபாதிப்பு உடையவர்கள் அதிகம்!














அமெரிக்காவில் வசிக்கும் 5 பேரில் ஒருவருக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் அந்நாட்டின் மனநல சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

ஏறத்தாழ ஐந்து கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளர்கள், இதில் 23 சதவிகிதம் பேர் பெண்கள் 16.8 சதவிகிதம் பேர்  இளைஞர்கள் ஆவர்,அதிலும் 50 வயது கடந்தவர்களை விட இளைஞர்கள் தான் இரண்டு மடங்கு அதிகம் என்றும் சுமார் 1 கோடியே 14 லட்சம் இளைஞர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், 12 வயது முதல் 17 வயது வரையில் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 19 லட்சம் என்றும் இந்த தகவல் தெரிவிக்கிறது. 

மேலும் 87 லட்சம் இளைஞர்கள் கடந்த ஆண்டுகளில் தற்கொலை திட்டம் குறித்து மோசமான நினைப்புக்கு ஆளானார்கள், இவர்களில் 25 லட்சம் பேர் தற்கொலைக்கு திட்டமிட்டுள்ளனர். 11 லட்சம் பேர் தற்கொலை முயற்சிகளிலும் ஈடுபட்டனர். மன உளைச்சலில் இருந்து மீள முடியாத தன்மை மற்றும் போதைப் பழக்கத்தின் அடிமை ஆகியவற்றால் தான் பெரும்பான்மையான இளைஞர்கள் பாதிக்கபடுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல, இந்த ஆய்வின் படி 12 வயது முதல் முதியவர் வரையில் 67,500 பேர் சிறைச்சாலைகளில் இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

நன்றி 
 

நான்கு பிரஞ்சு ராணுவ பயிற்சியாளர்களை சுட்டுக்கொன்ற ஆப்கான் ராணுவீரன் – நேட்டோவுக்கு பின்னடைவு

rench soldiers carry the coffin of comrades shot dead by a man wearing an Afghan army uniform in eastern Kapisa province. Four French soldiers died.
காபூல்:நான்கு பிரான்சு நாட்டு பயிற்சியாளர்களை ஆஃப்கான் ராணுவ வீரன் சுட்டுக்கொன்றதை தொடர்ந்து ராணுவ பயிற்சியை நிறுத்தி வைக்க பிரான்சு நாட்டு அதிபர் நிகோலஸ் சர்கோஸி அறிவித்துள்ளார்.

ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய தாலிபான்: ஆறு அமெரிக்க படையினர் பலி

ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய தாலிபான்
காபூல்:ஆப்கானிஸ்தானில் தாலிபான் போராளிகளின்  தாக்குதலில் ஹெலிகாப்டர் தகர்ந்து வீழ்ந்ததில் ஆறு அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

ஃபலஸ்தீன் பாராளுமன்ற சபாநாயகரை கைதுச்செய்த இஸ்ரேல்

Abdel Aziz Dweik
டெல்அவீவ்:ஃபலஸ்தீன் பாராளுமன்ற சபாநாயகரும், ஹமாஸ் தலைவர்களில் ஒருவருமான அப்துல் அஸீஸ் துவைக்கை இஸ்ரேல் கைது செய்துள்ளது. தெற்கு மேற்கு கரை நகரமான ஹெப்ரானுக்கு செல்லும் வழியில் துவைக்கை இஸ்ரேல் ராணுவம் கைது செய்துள்ளது. இதனை அவரது உதவியாளர் எ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
துவைக்குடன் பாராளுமன்ற உறுப்பினர் காலித் தாஃபிஷும் கைது செய்யப்பட்டுள்ளார்.
துவைக்கின் கண்களை துணியால் கட்டி ரகசிய இடத்திற்கு இஸ்ரேல் ராணுவம் கொண்டு சென்றதாக நேரடி சாட்சிகளை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துவைக்கின் கைதை இஸ்ரேல் உறுதிச்செய்துள்ளது. துவைக்கை உடனடியாக விடுதலைச்செய்ய வேண்டும் என ஃபலஸ்தீன் கோரிக்கை விடுத்துள்ளது.
துவைக்கின் கைது அமைதிக்கான முயற்சிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் என்றும், ஜனநாயக நடைமுறைகளை பலவீனப்படுத்தும் என்றும் ஃபலஸ்தீன் பாராளுமன்ற துணைத்தலைவர் அஹ்மத் பஹர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
ஃபத்ஹுடன் நடைப்பெற்றுவரும் நல்லிணக்க பேச்சுவார்த்தையை சீர்குலைப்பதற்காகவே இக்கைது நடவடிக்கை என ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேலுடன் நடத்தும் அமைதிக்கான பேச்சுவார்த்தைகளை வாபஸ் பெறுமாறு ஹமாஸ் தலைமை மஹ்மூத் அப்பாஸிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
துவைக்கை 2006-ஆம் ஆண்டிலும் இஸ்ரேல் ராணுவம் கைது செய்தது. கிட்டத்தட்ட 20 ஃபலஸ்தீன் பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போதும் இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.
நன்றி தூது ஆன்லைன் 


ஈரான் விவகாரம்:அமெரிக்க ராணுவ தலைமை தளபதி இஸ்ரேலில்

USO Honors Military Heroes And Volunteers At 50th USO Armed Forces Gala & Gold Medal Dinner
ஜெருசலம்:ஈரானின் அணு சக்தி திட்டத்தை தடுப்பது தொடர்பாக விவாதிக்க அமெரிக்காவின் ராணுவ தலைமை தளபதி மார்டின் டெம்ப்ஸெ இஸ்ரேலுக்கு சென்றுள்ளார்.

Thursday, January 19, 2012

எகிப்திய பாராளுமன்ற சபாநாயகராக கலாநிதி முஹம்மத் ஸஅத் கதாதினி



Katatny
எகிப்திய பாராளுமன்ற சபாநாயகராக கலாநிதி முஹம்மத் ஸஅத் கதாதினியை நியமிப்பதென சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி தீர்மானித்துள்ளது. இவர் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார். பாராளுமன்றத்தில் சமநிலையான அணுகுமுறையைப் பின்பற்றியமைக்காக இவர் பெரிதும் மதிக்கப்பட்டார்.

இஹ்வான்களின் அரசியல் கட்சியான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி எகிப்திய தேர்தலில் அமோக வெற்றி


புதன்கிழமை, 18 ஜனவரி 2012 15:02
வாசிப்புக்கள்: 144
பகுதி: செய்திகள் - 
உலக செய்திகள்

  • PDF
Muslim brotherhood
எகிப்தின் பாராளுமன்றத் தேர்தல் ஏறத்தாழ ஒன்றரை மாத காலமாக இடம்பெற்று,ஒருவழியாக இப்போது அதன் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. கடைசி நேரத்தில் கூட மறுவாக்குப் பதிவு இடம்பெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டன. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவின் பின்னர்மேன்முறையீடு காரணமாகவே இந்த புதிய இழுபறி ஏற்பட்டது.

சர்ச்சையை கிளப்பிய குடியரசு வேட்பாளரின் துருக்கி விமர்சனம்

Texas Gov. Rick Perry speaks in Houston
அங்காரா:அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான குடியரசு கட்சியின் வேட்பாளர் பதவிக்காக மிட் ரும்னியுடன் மோதும் டெக்ஸாஸ் ஆளுநரின் துருக்கி குறித்த விமர்சனம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. துருக்கி ‘இஸ்லாமிய தீவிரவாதிகளின் ஆட்சியின் கீழ் உள்ளது’ என்ற மோசமான விமர்சனம் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.

ஈரானையும், சிரியாவையும் தாக்கக்கூடாது – ரஷ்யா எச்சரிக்கை

Russian Foreign Minister Sergey Lavrov speaks at a news conference in Moscow, Russia, Wednesday, Jan. 18, 2012. A military attack on Iran would destabilize the region while new sanctions against Tehran would "stifle" the Iranian economy and hurt its population, Russia's foreign minister said Wednesday. Sergey Lavrov said that Russia is seriously worried about the prospect of a military action against Iran and is doing all it can to prevent it. (AP Photo/Mikhail Metzel)
மாஸ்கோ:ஈரான்,சிரியா பிரச்சனைகள் தொடர்பாக அந்நாடுகள் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடும் மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானை தாக்குவது பெரும் துயரத்தை உருவாக்கும் என கூறியுள்ள ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் ஸெர்ஜி லாவ்ரோவ் பிராந்தியம் முழுவதும் அகதிகள் பிரச்சனையால் நெருக்கடியுல் ஆழ்ந்துவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் சமாதான வாய்ப்பிற்கு முட்டுக்கட்டையாக மாறியுள்ளது என கூறிய ஸெர்ஜி லாவ்ரோவ், தடைகளை கடுமையாக்கும் முயற்சிக்கு தனது அதிருப்தியை தெரிவித்தார்.
சிரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை கண்டிக்கும் தீர்மானத்தின் வரைவை கடந்த திங்கள் கிழமை பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு ரஷ்யா வழங்கியது குறிப்பிடத்தக்கது.
நன்றி தூது ஆன்லைன் 

Thursday, January 12, 2012

ஈரானியர்களை ரிக்ரூட் செய்யும் மொஸாத்

imagesCA5KALOM
பாரிஸ்:ஈரானின் அணுசக்தி திட்டத்தை தகர்க்கவும், அணு விஞ்ஞானிகளை படுகொலைச் செய்யவும் ஈரானில் இருந்து நாடு கடத்தப்பட்டு ஈராக்கின் குர்திஸ்தானில் வசிக்கும் நபர்களை இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாத் தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஈரான் மீதான தடையை ஆதரிக்கமாட்டோம் – சீனா அறிவிப்பு

China defends Iran oil trade despite U.S. push
பீஜிங்:ஈரான் மீதான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கொண்டுவந்துள்ள தடைகளை ஆதரிக்க மாட்டோம் என சீனா அறிவித்துள்ளது.