Labels

Showing posts with label சாமானியனின் பதில்கள். Show all posts
Showing posts with label சாமானியனின் பதில்கள். Show all posts

Monday, October 28, 2019

உறங்காத விழிகளாய்


சிறுவன் சுர்ஜித் என்னை மன்னித்துவிடு
என் நாட்டை டிஜிடல் இந்தியா என்றார்கள்
மேக்கின் இந்தியா என்றார்கள்
செவ்வாய்க்கு விண்கலம் அனுப்புகிறேன் என்றார்கள்
அணுகுண்டு வைத்திருக்கும் நாடு என்றார்கள்
நம்பி இருந்துவிட்டேன் என்னை மன்னித்துவிடு
சென்னை கடலில் எண்ணெயை வாளியால் அள்ளியதை
நான் மறந்து விட்டேன் என்னை மன்னித்துவிடு
நான் அப்துல் காலம் பிறந்த மண்ணை சார்ந்தவன்
என்பதை மறந்துவிட்டேன் என்னை மன்னித்துவிடு
இனி இதுபோல் தவறு நடக்காது
உறங்காத விழிகளாய் சாமானியன்

-    சாமானியன் போகலூர்

Friday, October 18, 2019

சாமானியனின் பதில்கள்


மனைவி : மச்சான் மல்லிகை கடைக்கு போனைங்களே  
கணவன் : கடையை மூடி பல வாரங்கள் ஆச்சாம்
மனைவி : என்ன மச்சான் சொல்லுரிக்க
கணவன் : நாடு போர போக்க பாத்தா பிச்சை கூட எடுக்க முடியாது                 போல
மனைவி : அப்படியா மச்சான்
கணவன் : ரேசன் கார்டு, ஆதர் கார்டு, ஒட்டைடி பத்திரமாக இருக்கா
மனைவி : மச்சான் எல்லாம் அடகுகடையில் இருக்கே
கணவன் : போச்சே நம்மை இந்தியன் இல்லைனு சொல்லிடுவன்களே
மனைவி : நல்லவேளை எனக்கு தமிழ் மட்டுமே தெரியும்.                           இல்லேன்னா  என்னை வெளிநாட்டுகாரினு சொல்லி                     இருப்பாங்க
கணவன் : அடியே இந்தி தெரியாதவர்கள் எல்லாம் வெளிநாட்டு                     காரர்கலாம்
மனைவி : நம்ம தலைவர் எங்கே சென்றலும் தமிழில் யாதும் ஊரே                 யாவரும் கேளிர் எல்லாமே சொல்லுறாரு
கணவன் : அவர் எல்லா ஊரையும் சுத்திபார்க்க வரேன்னு தமிழில்                   சொல்லுறாரு
மனைவி : தமிழ்நாடு அவ்வளவுதானா மச்சான்
கணவன் : தமிழ்நாட்டை அடகுவச்சி பல வருடங்கள் ஆய்விட்டது.
-    சாமானியன் போகலூர்