Sunday, November 13, 2011

முஸ்லிம்களுக்கு மட்டும் குற்றம் செய்யாமலேயே சிறைச்சாலையா?



மாலேகான்: கடந்த 2006ஆம் ஆண்டு மாலேகானில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் போது கைது செய்யப்பட்ட 9 அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கடந்த 6ஆம் தேதி அன்று நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த 2006ஆம் ஆண்டு சபே-பராத் இரவு அன்று மாலேகானில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 30ற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாயினர். மஹாராஷ்டிரா மாநில தீவிரவாத எதிர்ப்பு படை காவல்துறையினர் குண்டு வெடிப்பு நிகழ்ந்த பிறகு 9 முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தனர். குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது எந்த ஒரு ஆதாரமும் இல்லாதிருந்தும் தீவிரவாதி முத்திரை குத்தப்பட்டு அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


முஸ்லிம் இளைஞர்கள் எப்படி தங்களுடைய உறவினர்களையும் தன் சமூக மக்களையும் குண்டு வைத்து கொல்வார்கள் என மனித உரிமை ஆர்வலர்கள் காவல் துறையினரிடம் கேள்வி எழுப்பினர். கடந்த சில வருடங்களாக முஸ்லிம் சமூகத்தின் மீது அவப்பெயரை ஏற்படுத்தும் செயல்பாடுகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. ஒட்டு மொத்த இந்திய ஊடகங்களும் இஸ்லாமோஃபோபியா என்ற கிருமியினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றே சொல்லலாம். தற்போது குண்டு வெடிப்பு நிகழ்ந்தால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது காவல்துறையினருக்கு மிக இலகுவாக ஆகிவிட்டது. எங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் அந்த குண்டுவெடிப்பில் யார் உயிரிழந்தாலும் முதலில் சில முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டு பின்னர் அவர்களுக்கு எதிராக போலீயான ஆதாரங்களை திரட்டுவது போன்ற அக்கிரமமான வேலையைத்தான் காவல்துறையினர் சில காலமாக செய்து வருகிறார்கள்.





இதே போன்ற நிலைதான் ஹைதரபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பின் போதும் நிகழ்ந்தது. கடந்த 2007 ஆம் ஆண்டு மக்கா மஸ்ஜித் பள்ளிவாசலில் ஜும்மா தொழுகை நேரத்தின் போது சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில பல அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த சம்பவம் நிகழ்ந்த பிறகு உடனே 27 முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தின் விசாரணைக்கூட நேர்மையாக நடைபெறவில்லை. இரயில் எரிப்பு சம்பவத்திற்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் என்று குற்றம்சாட்டப்பட்ட மெளலானா ஹாஜி உமர் அவர்களுக்கு எதிராக எந்த ஒரு ஆதாரமும் இதுவரை சமர்பிக்கப்படவில்லை என்ற போதிலும் சில முஸ்லிம் இளைஞர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணை அதிகாரிகள் தாங்கள் ஏற்றுக்கொண்ட பதிவிக்கு எதிராகவே செயல்படுகிறார்கள்.


கடந்த 2006ஆம் ஆண்டு நந்தித்தில் பஜ்ரங்தளைச்சேர்ந்த இரு தீவிரவாதிகள் ஆர்.எஸ்.எஸ். ஊழியனான ராஜ்கொந்தவார் என்பவனின் வீட்டில் வைத்து வெடிகுண்டு தயாரிக்கும்போது வெடித்துச்சிதறி பலியானார்கள். இத்தகைய செயலில் ஈடுபட்டது இந்துத்துவ இயக்கங்களைச்சார்ந்தவர்கள் தான் என்று தெளிவாக தெரிந்திருந்த பின்னரும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதில் நேர்மையாக நடந்து கொண்ட ஹேம்ந்த் கர்கரே என்ற காவல்துறை அதிகாரி புலன் விசாரணையில் ஈடுபட்டு மாலேகான் குண்டுவெடிப்பை நிகழ்த்திய உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்தார். ஆர்.எஸ்.எஸ்-ன் பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர், சுவாமி தயானந்த பாண்டே, முன்னால் இராணுவ அதிகாரி என பல ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளை கைது செய்தார். ஆனால் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட மும்பை தாக்குதலின் போது ஹேமந்த் கர்கரே படுகொலை செய்யப்பட்டார்.

இது நாள் வரை நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்படுவதனால் உண்மை குற்றவாளிகள் சுதந்திரமாக திரிந்து கொண்டு தொடர்ந்து தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் தான் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் இருப்பினும் அவர்களெல்லாம் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திலிருந்து என்றோ விலகிவிட்டார்கள் என்றும் அவர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்-ற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஆர்.எஸ்.எஸ் தலைமை மறுத்துவருகிறது. குண்டுவெடிப்பிற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று என்னதான் ஆர்.எஸ்.எஸ் கூவினாலும் அசிமானந்தாவின் வாக்குமூலம் அவர்களுக்கு செருப்படியாய் விழுந்திருக்கிறது. அசிமானந்தாவ் ஆர்.எஸ்.எஸ்-ன் தீவிர ஊழியன் என்றும், வி.ஹெச்.பி.காக பல ஆண்டுகளாக பணியாற்றிக்கொண்டிருந்தவர் என்ற உண்மையை அவர்களால் மறைக்கமுடியவில்லை. தாமே மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பிலும் இன்ன பிற சம்பங்களிலும் ஈடுபட்டதாக நீதிபதியிடமே வாக்குமூலம் அளித்தார் அசிமானந்தா. இன்னும் சில ஆர்.எஸ்.எஸ்-ன் ஊழியர்களையும் காட்டிக்கொடுத்தார்.


ஒரு குற்றமும் செய்யாமல் கிட்டத்தட்ட 6 வருடங்களாக சிறையில் தனது இளமையை துலைத்துவிட்டு தற்போது ஜாமீனில் வெளியாகியிருக்கும் அந்த 9 முஸ்லிம் இளைஞர்களின் வாழ்க்கை நிலை என்னவாகும்?


தொடர்ந்து நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் இந்துத்துவ தீவிரவாதிகள் தான் ஈடுபட்டுவருகிறார்கல் என்பது தெளிவாக தெரிந்திருந்த பின்னரும் எங்கு குண்டுவெடித்தாலும் முஸ்லிம் இளைஞர்களையே குறி வைத்து கைது செய்வது சரியான் முறைதானா? 


எப்போது இத்தகைய நிலை மாறும்? 


சமூக நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டும் என்று அரசு வெறும் வாய்ஜாலத்தை மட்டுமே பயன்படுத்தி வருகிறது. இதற்காக எத்துனை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறது? வெறும் பேச்சளவில் மட்டுமே இருக்கக்கூடிய "சமூக நல்லிணக்கம்"  என்று செயல்வடிவம் பெறும்?


தாங்கள் ஈடுபட்டு வரும் இந்த ஒரு தலைபட்சமான செயல்பாடுகளினால் உண்மை குற்றவாளிகள் தப்பித்துக்கொண்டே வருகிறார்கள். இதனால் தேசத்திற்கே ஆபத்து என்பதை எப்போது இந்த காவல்துறை அதிகாரிகள் உணர்ந்து கொள்ள்போகிறார்கள்?


மதத்தின் பெயரால் அப்பாவி இந்துக்களை மூளை சலவை செய்து தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் என்ற தீவிரவாத இயக்கத்தின் அட்டூழியங்களை முடக்கப்போவது யார்?

இத்தகைய கேள்விகளுக்கு யாரிடத்தில் பதில் இருக்கிறது......?

கட்டுரை : முத்து

Friday, November 11, 2011

ஹாஜி அபு அப்துல்லாஹ் முஹம்மது இப்னு பதுதா

கொலம்பசையும் ,மார்கோ போலவையும் தெரிந்த பலருக்கு இந்த பெயர் தெரியுமா என்பது சந்தேகத்திற்குரியதே.ஆனால் இவரின் சாதனைகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
இவர் தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதியை பிரயங்களிலேயே செலவிட்டவர்.
1304 ஆம் ஆண்டு மொரோக்காவில் பிறந்தவர் தான் இப்னு பதுதா இவரது இயற்பெயர் 
ஹாஜி அபு அப்துல்லாஹ் முஹம்மது இப்னு பதுதா என்பதாகும்.இவரின் பயணக் 
குறிப்புக்கள் "rihla" என்ற என்ற நூலில் இவர் எங்கெல்லாம் பயணம் செய்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.தன்னுடைய பயணத்தில் வட ஆப்ரிக்கா முதல் மேற்கு ஆப்ரிக்கா ,
 தெற்கு ஐரோப்பா ,கிழக்கு ஐரோப்பா ,மத்திய கிழக்கு நாடுகள் ,இந்தியா துணைகண்டம் ,
மத்திய ஆசியா, தெற்கு ஆசியா ,சீனா என கிட்டத்தட்ட 121000 கிலோமீட்டர் அதாவது 75000
 மயில்கள் பயணம் செய்துள்ளார் அதுவும் எந்தவிதமாக வகான வசதிகளும் இல்லாத அந்த
 நாளிலும் கூட குதிரை மற்றும் கப்பல் மூலமாக தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார்.
தன்னுடைய இளம் வயதில் மார்க்க கல்வியை முடித்த இவர் 1325 ஆம் ஆண்டு தன்னுடை
 21 ஆம் வயதில் மக்காவிற்கு புனிதப்பயணம் மேற்கொள்ள தீர்மானித்தார்.மக்காவிற்கு
செல்வது என்பது இப்பொழுது நாம் செல்வதை போல விமான வசதிகள் எல்லாம் கிடையாது.
மொரோக்காவில் இருந்து மக்கா செல்லவேண்டும் என்றால் அந்த கால கட்டத்தில் கிட்டத்தட்ட
 பதினாறு மாதங்கள் ஆகும்.ஆனால் இப்னு பதுதா தான் மக்கா சென்று தனது நாடான
 மொரோக்கவிர்க்கு திரும்ப கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் ஆகியது.உலகின் இஸ்லாமிய
 ஆட்சி எங்கெல்லாம் இருந்ததோ மேலும் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்ற இப்னு
 பதுதா 1348 ஆம் ஆண்டு தனது முதல் நீண்ட ஹஜ் பயணத்தை முடித்து சிரியா வந்து சேர்ந்தா
ர் அப்பொழுது தான் அவருக்கு தெரியும் தனது தந்தை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே
 இறந்தது.இந்த சோகத்தின் காரணமாக தனது நாடான மொரோகவிர்க்கு திரும்ப தீர்மானித்தார்.
சிரியாவிலிருந்து பாலஸ்தீனம் வழியாக கிட்டத்தட்ட ஒரு வருட பயணத்திற்கு பின்னர் 
மொரோக்கோ வந்து சேர்ந்தார்.தந்தை இறந்த சோகத்தில் இருந்த இப்னு பதுதாவிர்க்கு 
மேலும் ஒரு அதிர்சியாக மொரோக்கோ வந்து சேருவதற்கு ஆறு மதத்திற்கு முன்பே தனது
 தாயும் இறந்த செய்தி மேலும் அதிர்சியை உண்டாக்கியது.சில நாட்கள் தனது சொந்த ஊரான
 தன்ஜிரில் தங்கி இருந்த இப்ன் பதுதா பின்னர் தனது பயணத்தை ஸ்பைனில் இஸ்லாமிய
 ஆட்சியை நடத்திக் கொண்டிருந்த மூர் வம்சத்தின் அல் அந்தலூஸ் அல்ஹம்ரா உள்ளிட்ட 
அனைத்து பகுதிகளையும் தனது பயணத்தை தொடர்ந்தார்.இப்படியே கிட்டத்தட்ட தனது
 வாழ்நாளின் பெரும்பகுதியை பயணத்தில் செலவழித்த இபின் பதுதா 1368 ஆம் ஆண்டு
 மரணமடைந்தார்.
வரலாற்றில் பல தியாகங்களை செய்த சமூகம் இஸ்லாமிய சமூகம் ஆனால் இன்
று
 நமது வரலாறே நமக்கு தெரிவதில்லை.மருத்துவம் புவியியல் கணிதவியல் அறிவியல்
 இன்னும் எத்தனையோ தளங்களில் கண்டுபிடிப்புகளை நிகழ்திய இஸ்லாமிய சமூகத்தின்
 நிலை மிக வருத்தத்திர்க்குரியதாகவே உள்ளது.ஐரோப்பா உலகின் இருண்ட கண்டம் என
 அழைக்கப்பட்ட அந்நாளில் உலகிற்கு அறிவியல் கண்டுபிடிப்புகள் உருவாக்கியவர்கள்
 முஸ்லிம்கள்.பல நூறு ஆண்டுகள் முஸ்லிம்களின் கண்டுபிடிப்புக்களுக்கு பின்னர்
 தான் ஐரோப்பியர்கள் அறியவிலில் கால் பதித்தனர் என்பது வரலாற்று உண்மை.
வரலாற்றை மறந்த சமூகம் நிட்சயம் வாரலாற்றை படைக்க முடியாது.நாம் 
வரலாற்றிலிருந்து பாடம் கற்க வேண்டியது பல உள்ளன.