Tuesday, November 11, 2014

மவுலானா எனும் மகத்தான இந்தியர்

4

நவீன இந்தியாவின் சிற்பிகளில் ஒருவரான மவுலானாவைப் பற்றிய நினைவுகூரல்
பிஹாரின் ராம்கர் நகரில் 1940-ல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்துப் பேசிய மவுலானா அபுல் கலாம் ஆஸாத், தனது உரையில் இப்படிக் குறிப்பிட்டார்: “நான் ஒரு முஸ்லிம். அதற்காகப் பெருமைப் படுகிறேன். 1,300 ஆண்டு பாரம்பரியமிக்க செழுமையும் புகழும் கொண்ட மார்க்கத்துக்குச் சொந்தக்காரன் நான். அதில் அணுவளவுகூடப் பங்கம் ஏற்படுவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். நான் ஒரு இந்தியன் என்பதிலும் அதே அளவு பெருமை கொள்கிறேன்.” ஆம், ஆஸாத் ஒரே நேரத்தில் உண்மையான முஸ்லிமாகவும், சிறந்த இந்தியனாகவும் விளங்கினார்.
பள்ளிப் பருவத்திலேயே அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தார் ஆஸாத். 1906-ல் டாக்காவில் நடைபெற்ற முஸ்லிம் லீக் தொடக்க மாநாட்டில் கலந்துகொண்டார். எனினும் முஸ்லிம் லீக்கின் மிதவாதப் போக்கு அவரை ஈர்க்கவில்லை. எனவே, 1907-ல் புரட்சிகரக் கட்சியில் சேர்ந்தார். இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து ஆங்கில ஆட்சிக்கு எதிராகப் போராட வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். 1913-ல் ஹிஸ்புல்லா என்ற அமைப்பைத் தொடங்கினார்.
1920-ல் மகாத்மா காந்தியைச் சந்தித்த பின்னர்தான், காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார். ஒத்துழையாமை இயக்கத்திலும், கிலாபத் இயக்கத்திலும் முகம்மது அலி ஜவுகருடன் இணைந்து செயல்பட்டார். இவ்விரு தலைவர்களும் நாட்டு மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டனர். காங்கிரஸ் இயக்கம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் ஆஸாத் பங்குகொண்டார். ஆறு முறை கைது செய்யப்பட்ட அவர், தன்னுடைய வாழ்நாளில் 10 ஆண்டுகள் 7 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தவர்.
நீதிமன்றத்தில் கர்ஜனை
1922-ல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தின்போது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் மீது அலிப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. 11.01.1922 அன்று அலிப்பூர் நீதித் துறை நடுவர் முன்னிலையில் ஆஜரான அவர், ஆக்ரோஷமான வார்த்தை களில் வாக்குமூலம் அளித்தார். ஆஸாத் பேசியதிலிருந்து சில வரிகள்:
“நீங்கள் எனக்கு உச்சபட்சத் தண்டனை அளியுங்கள். அது எவ்வளவு பெரிய தண்டனையாக இருந்தாலும் நான் பதற மாட்டேன். தீர்ப்பை எழுதும்போது உங்கள் கரங்கள் நடுங்கலாம். ஆனால், உங்கள் தீர்ப்பைச் செவிமடுக்கும்போது எனது இதயம் நடுங்காது. இது உறுதி. எனக்குக் கிடைக்கவிருப்பது சிறைக்கொட்டடி எனில், உங்களுக்கு நீதித் துறையின் உயர் பதவிகளும் மரியாதைகளும் கிடைக்கும். இதே நிலை தொடர என்னை அனுமதியுங்கள்; நீங்கள் நீதிபதியாகவும் நான் குற்றவாளி யாகவும். இந்த நிலை சில காலம் தொடரும். அதன் பிறகு நாம் மற்றொரு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவோம். அங்கே இறைவனே நீதிபதியாக வீற்றிருந்து தீர்ப்பு வழங்குவான். அதுதான் இறுதித் தீர்ப்பாகும்.” அவரது வாக்குமூலத்தைக் கேட்டு நீதித் துறை நடுவர் நடுநடுங்கிப்போனதாகக் கூறப்படுவதில் ஆச்சரியம் இல்லை.
1942-ல் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் கலந்துகொண்டதற்காகக் கைதுசெய்யப்பட்டு, அஹமத் நகர் சிறையில் அடைக்கப்பட்டார் ஆஸாத். அவருடன் நேருவும் இருந்தார். 3 ஆண்டுகள் நீடித்த இந்தச் சிறைவாசத்தின்போது அவரது மனைவி சுலைஹா பீவியும், சகோதரி ஹனீபா பேகமும் அடுத்தடுத்த ஆண்டு களில் மரணமடைந்தார்கள். இந்த இருவரின் இறுதிச் சடங்குகளிலும் கலந்துகொள்ள ஆங்கில அரசு அவருக்கு அனுமதி வழங்கவில்லை. 1945-ல் விடுதலை பெற்ற பின்னரே இருவரின் கல்லறைகளுக்கும் சென்று மலர் தூவி ஃபாத்திஹா ஓதினார் ஆஸாத்.
எழுச்சியூட்டும் எழுத்து
மேடைகளில் எழுச்சியுடன் உரையாற்றும் வல்லமை பெற்றிருந்த ஆஸாத் சிறந்த எழுத்தாளரும்கூட. ‘சமந்தார்’, ‘மதீனா’, ‘முஸ்லிம் கெஜட்’, ‘ஹம்தர்த்’ ஆகிய உருது இதழ்களில் ஆங்கில அரசின் கொள்கைகளைக் கண்டித்துக் காரசாரமாக எழுதினார். பின்னர், ‘அல்ஹிலால்’ என்ற பத்திரிகையைத் தொடங்கி, அதில் கட்டுரைகள் எழுதிவந்தார். இந்த இதழைத் தொடர்ந்து நடத்தவிடாமல் ஆங்கில அரசு அவருக்குக் கடுமையான நெருக்கடிகளைக் கொடுத்தது. பத்திரிகைக்கு அதிகப் பிணைத்தொகை செலுத்துமாறு அரசு அவருக்கு ஆணையிட்டது. இதே காலகட்டத்தில் ‘அல்பலாக்’ என்ற பெயரில் மற்றொரு பத்திரிகையையும் தொடங்கினார் ஆஸாத். அவரது எழுத்தும் பேச்சும் உணர்ச்சிபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் அமைந்திருந்தது.
பிரிவினையை ஏற்காதவர்
1940-ல் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக ஆஸாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் எம்.என்.ராய்) 1946 இறுதி வரை அப்பதவியில் இருந்தார். இறுதி வரை பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்தார். எனினும், காந்தி உள்ளிட்ட தலைவர்களால்கூடப் பிரிவினையைத் தடுக்க முடியாமல் போனபோது, செய்வதறியாது கை பிசைந்து நின்றார்.
பிரிவினைக்குப் பின்னர் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களில் முஸ்லிம்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள். நூற்றுக் கணக்கான முஸ்லிம்கள் அவரது இல்லத்திலேயே தஞ்சம் அடைந்திருந்தார்கள். அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் பட்டேல் இந்தக் கலவரங்களை ஒடுக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என ஆஸாத் கருதினார். இதுபற்றி தனது மனக்குமுறல்களை ‘இந்திய விடுதலை வெற்றி’ என்ற நூலில் பதிவுசெய்திருக்கிறார் ஆஸாத். அந்தப் புத்தகத்தின் சமர்ப்பணத்தில் இப்படி எழுதியிருப்பார்: ‘நண்பரும் தோழருமான ஜவாஹர்லால் நேரு அவர்களுக்கு’.
பாகிஸ்தான் எதிர்ப்பு
சிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞராகத் திகழ்ந்தார் ஆஸாத். ராஞ்சி சிறையில் இருந்தபோது திருக்குர்ஆனை உருது மொழியில் மொழிபெயர்த்தார். பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கையால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, ஜின்னாவின் தலைமையின் கீழ் அணி திரண்டிருந்த பெரும்பான்மையான முஸ்லிம்கள் அவரை முஸ்லிம் விரோதி எனத் தூற்றியபோதிலும் அவர் கலங்கவில்லை. தனது பாகிஸ்தான் எதிர்ப்பு நிலைப்பாட்டில் கடைசி வரை உறுதியாகவே இருந்தார்.
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற ஆஸாத், கல்வி முறையில் பல அடிப்படை சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். கிராமப்புற ஏழை மக்களுக்குக் கட்டாய இலவசக் கல்வி வழங்கிட முன்னுரிமை அளித்தார். முதியோர் கல்விக்கு வித்திட்டார்.
பல்கலைக்கழகக் கல்விக்குழு, இடைநிலைக் கல்விக் குழு, பல்கலைக்கழக மானியக்குழு, இந்திய அறிவியல் கழகம், தொழில்நுட்பக் கல்லூரிகள் ஆகியவை அவரது பதவிக் காலத்தில்தான் உருவாக்கப்பட்டன. கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றைப் பாதுகாத்து ஊக்குவிக்கும் பொருட்டு சாகித்ய அகாடமி, சங்கீத அகாடமி, லலிதகலா அகாடமி, நாடக அகாடமி ஆகிய அமைப்புகளை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார். தேசிய ஆவணக் காப்பகம் உருவாக்கப்பட்டதும் அவரது பதவிக் காலத்தில்தான்.
2.2.1958-ல் அவர் மரணமடைந்தபோது, அரசு கடனில் வாங்கிய கார் ஒன்றைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லும் படியான வேறு எந்தச் சொத்தும் அவரிடம் இல்லை. சொத்துக்கள் என்று அவர் எதையும் விட்டுச் செல்லவில்லை. வங்கிக் கணக்கு இல்லாமல், அசையும், அசையாச் சொத்துக்கள் எதுவும் இல்லாமல் ஆஸாத் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.
இந்து-முஸ்லிம் ஒற்றுமையை நிலைநாட்டுவதில் மிகுந்த அக்கறையும் கவனமும் செலுத்திவந்தவர் ஆஸாத். ‘அல்பலாக்’ இதழில் அவர் இப்படி எழுதினார்: “சுதந்திரம் கிடைப்பதற்குத் தாமதமானாலும் பரவாயில்லை. இந்தியத் தாய்க்கு ஒரு நிமிடம்கூட வேற்றுமையின் பாரத்தைத் தாங்கும் சக்தியில்லை.” சாதி, மத, இன மோதல்கள் இல்லாததும், அறிவில் உயர்ந்து விளங்குவதுமான ஒரு இந்தியாதான் ஆஸாதின் கனவு இந்தியா. அந்த இந்தியாவை நோக்கி நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஆஸாதை நாம் பெருமைப்படுத்துகிறோம்.
- சேயன் இப்ராகிம், அஞ்சல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (ஓய்வு).

Thursday, April 10, 2014

ஜாலியன்வாலாபாக்: மதச்சார்பின்மையின் முன்னோடி !

 10.4.2014 dinamani

மோடி அலைக்கு இனி வேகமிருக்காது

10.4.2014 dianamani


முஸ்லிம்களாக மதம் மாறியவர்களுக்கும் பிற்படுத்திப்பட்டோர் சான்றிதழ்

dinamani 10.4.2014


முஸ்லிம்களாக மதம் மாறியவர்களுக்கும் பிற்படுத்திப்பட்டோர் சான்றிதழ்  

தொகுதி வாரியாக போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் 

ஜாலியன்வாலாபாக்: மதச்சார்பின்மையின் முன்னோடி !

மௌனம் ஏன், ஆங் சான் சூ கீ ?

 மோடி அலைக்கு இனி வேகமிருக்காது 

Thursday, March 20, 2014

அரசியலில் இஸ்லாமியர்களின் நிலை என்ன?


    2014இல்   இந்தயாவின் 16வது பாராளுமன்ற தேர்தல் உலகமே  இந்தியாவை பார்த்துகொண்டிருடிருக்கிறது அடுத்து பிரதமர் யார் என்று ?

   கடந்த காலங்களில் இஸ்லாமிய சமூகம் தங்களுக்கு எதிரியான் பா.ஜ.க வந்துவிட கூடாது என்ற காரணத்தால் காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களித்து வந்தார்கள். ஆனால் 1992 பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது ஆட்சியில் காங்கிரஸ்தான் இருந்தது. காங்கிரஸ் நினைத்திருந்தால் பாபரி மஸ்ஜிட்தை இடிப்பதிலிருந்து தடுத்திருக்கலாம். இடிக்கப்பட்ட பின் பாபரி மஸ்ஜித் பள்ளியை கட்டித்தருவதாக வாக்களித்து இதுவரைக்கும் தனது வாக்குறுதியை நிலைநாட்டவில்லை .

      முஸ்லிம்கள் கல்வி, வேலை வாயய்ப்பு  போன்ற நிலைகளை ஆராய அமைத்த சச்சார் கமிட்டி அளித்த  பரிந்துரைகளில்  முஸ்லிம் இடஒதிக்கீடு தொடர்பான  பரிந்துரைகளை  பாராளுமன்றத்தில் அணனத்து கட்சிகளும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே நிறைவேற்றுவதாக காங்கிரஸ் கூறுகிறது. பா.ஜ.க போன்ற கட்சிகள் இருக்கும்போது எப்படி ஆதரவு கிடைக்கும். ஆனால் தனக்கு தேவை என்றுள் அவசர சட்டம் கொண்டுவந்து நிரைவேற்றும் அனைத்து கட்சிகள் எதிர்த்தாலும் கூட நிறைவேற்றியே தீரும் .
     
      இது ஒரு புறம் இருக்க முஸ்லிம்களை அழித்தொழிப்பதையே குறிக்கோளாக செயல் பட்டுக்கொண்டிருக்கும் பா.ஜ.கவை பொறுத்தவரை தனது முதல் தேர்தலில் 1980 ல்  ஒரு பாராளுமன்ற  உறுப்பினர் கூட வெற்றிபெறவில்லை. அடுத்தடுத்து தேர்தல்கள் முறையே 2,85,120,161,182,144,116 இடங்களை பிடித்தது. 1998,1999 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்தது. அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி 2002 இல் குஜராத் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு இனப் படுகொலையை அரங்கேற்றியது. 2000 த்திற்கும் மேற்ப்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டர்கள். பல ஆயிரம் கோடி மதிபிப்லான சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன. நூறுக்கும் மேற்ப்பட்ட பெண்கள் கர்ப்பளிக்கப்பட்டனர்.
    
     இதனை தெஹல்கா பத்திரிகையின் ஆசிரியர் குற்றவாளிகள் தங்கள் வாயினாலே உண்மையை கூறிய வீடியோ வெளியிட்டும், அவர்கள் சுதந்திரமாக உலாவிகொண்டிருக்கிறர்கள். இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அழிக்க அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் போது அநீதியால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவதை கடமையாக கொண்ட முஸ்லிம் சமுகம் தனது வரலாறு தெரியாமல் சிறுமையடைந்தது .                                                                                                                                                          
   வருகின்ற பாராளுமன்ற தேர்தல் உலகமே  இந்தியாவை பர்த்துகொண்டிருடிருக்கிறது அடுத்து பிரதமர் யார்? என்று பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் நமது இஸ்லாமிய சமுகத்தின் நிலைமையை சற்று பார்க்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு போன்ற விகிதாச்சாரத்தில் தலித்களை விட பின்தங்கியுள்ளதாக நீதியரசர் சச்சார் அறிக்கையில் குறிப்பிடுகிறார். இந்திய பாராளுமன்றத் தேர்தலில் மிகவும் பின்தங்கிய நிலையில் 1,2  பாராளுமன்ற  உறுப்பினர்கள் தான் முஸ்லிம் உறுப்பினர் உள்ளனர். அதற்கு மேல் முஸ்லிம் பெயர் தாங்கீகலாகத்தான்  உள்ளனர்.

       இந்திய மக்கள் தொகையில் 13% அரசு கணக்கின் படி மொத்தம் உள்ள 543 முஸ்லிம்கள் தங்கள் விகிதாச்சாரம்  71 பாராளுமன்ற  உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இது ஒரு புறம் இருக்க மக்கள் செறிவு மற்றும் தலித், பிற்படுத்தப்பட்டோர் ஆதரவுடன் 120  பாராளுமன்ற  உறுப்பினர்களை பெற முடியும். மேற்கு வங்கத்தில் 25%, உ.பி 18%, அஸ்ஸாம்  30%, லச்சதிவு  95%, கேரளத்தில் 24%, பீகார் 16% போன்ற மாநிலங்களில் ஆட்சியை கூட பிடிக்கமுடியும். ஆனால் முஸ்லிம் சமுகம் தனது பலம் தெரியாமல் சிறுபான்மை என்ற எண் ணத்துடன் சிருமையடைந்துள்ளது.

        1998 பா.ஜ.க  அதிமுக  கட்சி 18 பாராளுமன்ற  உறுப்பினர் ஆதரவு பெற்று ஆட்சி அமைத்தது. 13 நாட்களே ஆன நிலையில்   அதிமுக தனது ஆதரவை வாபஸ் வாங்கியது.  இதனால் பா.ஜ.க ஆட்சி இழந்தது. 2004,2009 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆதரவு கொடுத்து முறையே 16,18 இடங்களை பெற்ற திமுக கட்சி தனக்கு தேவையான துறைகளை மந்தரிகளாக தனது பாராளுமன்ற  உறுப்பினர் இடம் பெற செய்தது. 


      இப்படி இருக்கையில் முஸ்லிம்கள் 71க்கும் மேற்பட்ட பாராளுமன்ற  உறுப்பினர் முஸ்லிம்கள் பெற்றால் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் தலித், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் எதிராக நடைபெறும் அனிதிகளை தடுப்பது மட்டுமல்லாமல் அன்னத்து மக்களுக்கும் சமநீதியை பெற்று தரமுடியும்.  

   காந்தியடிகள் இந்தியாவில் உமர்(ரலி) போன்று ஆட்சியாலார்த்தான் தேவை என்று கூறியுள்ளார். உமர்(ரலி) போன்று ஆட்சி செய்ய வேண்டும் என்றால் உமர்(ரலி) போன்று இஸ்லாத்தை கடைபிடிக்கும் முஸ்லிம்கள் மட்டும்தான் அதனை செய்யமுடியும். 

    முஸ்லிம் சமுகம் தனது சக்தியை உணர்ந்து செயல்படும் காலகட்டத்தில் உள்ளது. 
                                                                                                                                                                                                                                                                          - சாமானியன் 







        
        







                                                                                                                      
      

Saturday, November 2, 2013

இன்றைய முஸ்லிம்களிடையே மிக பரபரப்பாக உச்சரிக்கப்படும் பெயராக ஜனநாயகம் மாறி விட்டது என்றால் அது மிகையானதல்ல.
ஒவ்வொரு இயக்கத்தை சார்ந்தவர்களும் தங்கள் சிந்தனைக்கு ஏற்றவாறு ஜனநாயகத்துக்கு விளக்கம் கொடுத்தாலும் அனைவரும் ஜனநாயகம் என்பது நிராகரிப்பாளர்களால் உருவாக்கப்பட்டது என்றும் இஸ்லாத்துக்கு முரணானது என்பதிலும் கருத்தொற்றுமை கொள்கின்றனர்.
வேறு சிலரோ ஜனநாயகத்தில் இஸ்லாத்தின் ஷூரா அமைப்பை போன்ற ஆலோசனைகள், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தல் போன்ற சில அம்சங்கள் இருப்பதால் ஜனநாயகம் இஸ்லாத்துக்கு முரணானதல்ல என்று கருதுகின்றனர்.



ஜனநாயகம்  என்பது வறுமையில் செத்துக் கொண்டிருக்கும் மக்கள் கையிலும் இல்லை ; மெத்தப்படித்தவர்கள் கையிலும் இல்லை. யாருக்கு எவ்வளவு கமிஷன் பேச வேண்டும் என்று தீர்மானிக்கும் அரசியல்வாதிகளிடம் இருக்கிறது இந்த ஜனநாயகம் என்ற அதிகார நாயகம் .

ஜனநாயகம் என்பதற்கு மக்கள் என்ன பொருள் கொள்கிறார்கள் என்பதற்கு இன்னும் எத்தனையோ விளக்கங்கள் தரமுடியும். என்னைப் பொறுத்தவரையில் ஜனநாயகம் என்பதற்கு வேறுபட்ட முறையில், ஸ்தூலமான முறையில் பொருள் கொள்கிறேன். "ஜனநாயகம் என்பது இரத்தம் சிந்தாமல் மக்களின் பொருளாதார, சமூக வாழ்க்கையில் புரட்சிகர மாற்றத்தைக் கொண்டுவரும் ஒரு வடிவம் என்பதுதான் ஜனநாயக‌த்து‌க்கு நா‌ன் அ‌ளி‌க்கு‌ம் ‌விள‌க்கமாகு‌ம். இ‌வ்வாறுதா‌ன் ஜனநாயகத்தை 
ஜனநாயகம் என்றால் என்ன?

ஜனநாயகம் என்றால் என்ன?



ஆதி மனிதன் தனக்கு தேவையான விடயங்களை தானாகவே உற்பத்தி செய்து வாழ்ந்தான். பின்னர் மனித தேவைகளும் விருப்பங்களும் அதிகரித்துச் சென்றதன் காரணமாக மனிதன் ஏனையோருடன் இடைத்தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டான். மனிதனின் தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு அரசு தேற்றம் பெற்றது. இன்றைய அரசுகளில் ஜனநாயகம் மிகவும் முக்கிய ஒரு விடயமாக மாறியுள்ளது. ஜனநாயகம் என்பது மக்கள் ஆட்சி என கூறலாம். ‘டிமொகிரசி’ என்ற சொல் கிரேக்க வார்த்தைகளிலிருந்து பெறப்படுகின்றது. ‘டிமோ’(DEMO) என்பது மக்கள் என்பதையும் ‘கிரேசி’ (CRACY) என்பது இறைமை அல்லது அதிகாரம் என்பதையும் குறிக்கின்றது. ஜனநாயகம் நேரடி ஜனநாயகம், மறைமுக ஜனநாயகம் 2 வகையாக பிரிக்கப்பட்டடுள்ளது. ஜனநாயகமானது 3 முக்கிய விடயங்களை கொண்டுள்ளது. அவையாவன:- 

1. சமத்துவம்
2. மக்கள் இறைமை
3. சுய ஆட்சி


என்பவையாகும். மக்கள் இறைமை என்பதன் பொருள் யாதெனில் ஜனநாயகமானது ஒரு அரசியல் முறை என்பதும் அதில் மக்கள் தமக்குள்ள அதிகாரத்தைத் தம்மைத் தாங்களே ஆளும் அளவுக்குச் செயற்படுத்தாது தம்மை ஆளுவோரை மாற்றியமைக்கும் அளவுக்கே செயற்படுத்துகிறார்கள் என்பதுமேயாகும். ஜனநாயகம் குறித்து அறிஞர்கள் பலவித வரைவிலக்கணங்களை கூறியுள்ளனர். அந்த வகையில் ‘ரூசோ’ குறிப்பிடுகையில், 

‘சமூக ஒப்பந்தத்தின் ஊடாக மக்களின் இறைமையை அரசு பெறுகின்றது. அதனடிப்படையில் பெறும் ஆட்சியே ஜனநாயகம் எனப்படும்’ என குறிப்படுகின்றார். 

மேலும் இது குறித்து ‘அரிஸ்டோட்டில்’ குறிப்பிடுகையில்,

‘வழிதவறி இருந்த அதிகாரம் சிறப்பான வடிவத்தை பெற்றுக் கொண்டது’ என கூறுகின்றார்.

 ‘தோமஸ் ஸ்கூப்’ ‘ஜனநாயகம் என்பது மக்களுடைய மக்களுக்கான ஆட்சி’ என குறிப்படுகின்றார். 

ஜனநாயகம் சுதந்திரத்துடன் சட்டத்துக்கான அவசியத்தையும் அதனை அமுலாக்குவதையும் இணைக்கப்படுவதற்கான ஒரு முயற்சியேயாகும். இது பெரும்பான்மையினரின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்று ஓர் உடன்பாடு அல்லது கட்டுப்பாடு இருப்பதாகவும் கருதுகிறது. மற்றும் அது தனிப்பட்டவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும் முயல்கின்றது. ஜனநாயகத்தை கட்டியெழுப்பும் பல காரணிகளில் இனத்துவமும் இனத்துவ அடையாளங்களும், இன வேறுபாடுகளும் மிகவும் முக்கிய விடயங்களாகும். ஜனநாயகம் சுதந்திரத்துடன் சட்டத்துக்கான அவசியத்தையும் அதனை அமுலாக்குவதையும் இணைக்கப்படுவதற்கான ஒரு முயற்சியேயாகும். 

ஜனநாயகமும் ஜனநாயகமயப்படுத்தலும்

  1990களில் ஜனநாயக வளர்ச்சி பாய்ச்சலாக காணப்படுகின்றது. ‘சாமுவேல் ஹன்டிங்டன்’ கருத்துப்படி, உலகில் ஜனநாயகம் என்பது எந்த ஆட்சி முறையினதும் கடைசி கட்டமாக இருக்கும் அத்துடன் ஜனநாயகம் என்பது எப்பொழுதும் மாற்றமடையாது என கூறப்பட்டது. மேலும் 3ம் அலை ஜனநாயகமயப்படுத்தலின் போது இனத்துவம் மற்றும் இனத்துவ வேறுபாடு ஜனநாயகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது என கூறலாம். ஜனநாயகத்தை ஸ்திரப்படுத்துவதிலும் ஜனநாயகமயப்படுத்தலிலும் அன்று முதல் இன்று வரை இனத்துவ வேறுபாடுகள் பாரிய தாக்கத்தை செலுத்தி வருகின்றன.

ஜனநாயகம் என்றால் என்ன?

இதுவே மிகவும் உன்னதமான சமூக அமைப்பாக, ஜனநாயகமாக காட்டப்பட்டு போற்றப்படுகின்றது.  ஜனநாயகம். இதை நிலைநாட்டும் உரிமையைத் தான் சுதந்திரம் என்கின்றனர்.
இந்த ஜனநாயகம் பெரும்பான்மை மக்களின் அரசியல் பொருளாதார விருப்பங்களை மறுதலிக்கின்றது. 

உதாரணமாக வாக்குபோட்டு தெரிவு செய்யப்படும் எந்த உறுப்பினரும் சுரண்டல் கட்டமைப்பை இல்லாதாக்க முடியாது. சுரண்டல் அமைப்பை மாற்றுவதை விடுவோம், முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளிக்கு சார்பாக சட்டங்களை கொண்டுவர முடியாது. இங்கு பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை சட்டமாக்க முடியாது. இதை ஜனநாயகம் அனுமதிக்காது. இந்த ஜனநாயக அமைப்பு சாதியை ஒழிக்க முடியாது. ஆணாதிக்கத்தை கூட ஒழிக்க முடியாது. நிற வெறியை ஒழிக்க முடியாது. இனப்பாகுபாட்டை ஒழிக்க முடியாது. இதற்குள் அங்குமிங்குமாக சீர்திருத்தம் செய்து செயல்படலாமே ஒழிய, அதை ஒழிக்க முடியாது. இதை ஜனநாயகம் அனுமதிக்காது. ஜனநாயகத்தின் இருப்பே இதன் மேல் தான் உள்ளது.
இந்த ஜனநாயகத்தை மக்களிடமிருந்து பாதுகாக்கும் பொலிஸ் என்ற அடக்குமுறை இயந்திரம், பெரும்பான்மை மக்களின் விருப்பை நிறைவு செய்வதில்லை. எந்த முதலாளிக்கும் எதிராக, தொழிலாளிக்கு சார்பாக பொலிஸ் செயல்பட ஜனநாயகம் அனுமதியாது. இதுவே சமூகத்தில் அனைத்துத் துறையிலும் காணப்படுகின்றது. ஜனநாயகம் என்பது ஒரு வர்க்கத்தின் சர்வாதிகார ஆட்சியாகும்.

 இயற்கையில் மனிதனுக்கு இடையில் இல்லாத முரண்பாட்டை, செயற்கையில் பாதுகாக்க முற்படும் போது ஜனநாயகம் தோன்றுகின்றது. மனித முரண்பாட்டை உருவாக்கி அதை பாதுகாக்கும் அமைப்புத்தான் ஜனநாயகம்.
வாக்கு போட்டு தெரிவு செய்யும் உறுப்பினர்கள், பெரும்பான்மை மக்களை பிரதிநிதித்துவம் செய்வதில்லை. மாறாக சிறுபான்மை வாக்குகளை பெற்று ஆளும் வர்க்கமாக மாறி, பெரும்பான்மை மக்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். பொதுவாக இந்த ஜனநாயக அமைப்பில் ஆளும் வர்க்கங்களாக உள்ளவர்கள், 20 சதவீதத்துக்கு உட்பட்ட மக்களின் வாக்கைப் பெற்றே பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகளாக உள்ளனர். அவர்கள் தான் சட்டங்களை இயற்றுகின்றனர். உலகில் பொதுவாக 40 முதல் 50 சதவீதமான மக்கள், இந்த ஜனநாயக தேர்தலில் நம்பிக்கை வைத்து வாக்களிப்பதில்லை. வாக்களிக்கும் 50 முதல் 60 சதவீதமான மக்கள் வாக்கில், ஆளும் வர்க்கம் 20 சதவீதமான வாக்குகளைப் கூட பொதுவாக பெரும்பான்மை நாடுகளில் பெற முடிவதில்லை. இப்படி இந்த ஜனநாயகம் நிர்வாணமாகி, மக்களுக்கு எதிராகவே நிற்கின்றது.