Tuesday, March 22, 2022

ஜனநாயகம்

 ஜனநாயகம் நான்கு தூண்களால்  அமைந்தது.

1. சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம்

2. நிர்வாகத்துறை

3. நீதித்துறை

4. ஊடகத்துறை



இந்திய அரசியலமைப்பு சட்டம் மூன்று தூண்களாக 

1. சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம்

 2.நிர்வாகத்துறை 

3. நீதித்துறை

மக்களால் நான்காவது துறையாக ஊடகத்துறை நடைமுறையிலுள்ளது.

1. மக்களுக்கான  திட்டங்களை இயற்றுவதற்கு சட்டமன்றமும் பாராளுமன்றமும் உள்ளது 

2. சட்டமன்றம் பாராளுமன்றம் இயற்றிய சட்டங்களை செயல்படுத்த நிர்வாகத்துறை உள்ளது.

3. கண்காணிப்பு மற்றும் நீதி வழங்க  நீதித்துறை உள்ளது  

4. மேற்கண்ட துறைகளில் செயல்பாடுகளை மக்களுக்கு கொண்டு செல்ல ஊடகத்துறை உள்ளது.

இந்திய தேசத்தில் 3% குறைவாக உள்ள உயர் ஜாதி சமூகம் இந்தியாவை ஆட்சி செய்கிறது அது எப்படி ஜனநாயகத்தின் தூண்களாக போற்றப்படுகின்ற நான்கு தூண்களிலும் இந்த ஆதிக்க ஜாதியினர் தங்கள் பங்களிப்பை ஆதிகமாக ஆற்றுகிறார்கள்.

மற்றொரு சமூகமான தலித் சமூகம் இந்திய தேசத்தில் ஏறக்குறைய 35 விழுக்காடு மேலாக உள்ளனர். அவர்களால் கல்வி வேலைவாய்ப்பில் மட்டுமே தற்போது முன்னேற முடிய உள்ளது நீதித்துறை, ஊடகத்துறை,அரசியல் அதிகாரத்தில் மற்ற கட்சிகளை நம்பி உள்ளது. இதன் காரணமாக அந்த சமூகம் பின்தங்கியுள்ள சமூகமாகவே உள்ளது.

நமது சமூகத்தைப் பொறுத்தவரையில் மேற்கூறப்பட்ட அனைத்து ஜனநாயக தூண்களிலும் சச்சார் கமிட்டி அறிக்கையின் படி தலித் சமூகத்தை விட பின்தங்கி தான் உள்ளது. அரசுத் துறையில் எந்த அளவுக்கு கவனம் செலுத்த வேண்டுமோ அதேபோன்று அரசியலிலும் நம் சமூகம் தன்னிறைவு பெற வேண்டும் நீதித்துறையும் நமது பங்களிப்பை அளிக்க வேண்டும் ஊடகத்துறையில் நமது பங்களிப்பை அளிக்க வேண்டும்.

இதனை கவனம் செலுத்தவில்லை என்றால் ஆட்சியாளர்கள் இஸ்லாத்துக்கு எதிரான சட்டத்தை கொண்டு வருவார்கள். நிர்வாகத்தில் உள்ள நபர்களோ அதனை தங்குதடையின்றி செயல்படுத்துவார்கள். நீதிமன்றத்திற்கு நாம் சென்றோம் என்றால் நமக்கு எதிரான தீர்ப்புகளை வரும். ஊடகத்துறையில் மேற்கண்ட அனைத்து துறையினரும்  செய்த தவறுகளை சரி என்று பிரச்சாரம் செய்வார்கள். மற்ற துறையின் முயற்சி செய்பவர்களை குறை சொல்வதை விட்டுவிட்டு என்னால் இந்த துறையில் நமது சமூகத்தை முன்னேற்றம் என்று சபதம் ஏற்க வேண்டும். யார் யாருக்கு என்ன துறை பிடிக்கிறதோ அந்த துறையில் சமுதாயத்தை முன்னேற்ற உழைத்தாலே போதும் சமூகம் அனைத்து துறையிலும் முன்னேறும். ஒருவன் அரசுத்துறை மட்டும் தான் சிறந்தது அல்லது அரசியல் மட்டும் தான் சிறந்தது என்று யாரோ ஒருவர் கூறுகிறார் என்றால் உரல் உடலிலுள்ள ஒரு கை ஒரு கால் ஊனமா இருந்தால் அந்த மனிதன் எப்படி நான் பார்ப்போமா  அதே போன்று தான் இந்த சமூகமும் பாதிக்கப்படும். அல்லாஹ் ஒரு மனிதனின் உள்ளத்தை மட்டும் தான் பார்க்கின்றான் செயலை பார்க்கவில்லை அதனால் தங்களின் செயலை நல்லது செய்தால் இம்மியும் அந்நிய மறுமையிலும் வெற்றி பெறலாம்.


நமது நிருபர்

சாமானியன்

போகலூர்

நமது ஊர் கடைசி விவசாயி

முஸ்லிம்கள் விவசாயம் செய்வார்களா என்று சமூக வலைத்தளத்தில் ஒரு நபர் கேள்வி  கேட்டிருந்தார். இந்தக் கேள்வி நம்மை பொருத்தவரை ஒரு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் நகர்ப்புற மக்களுக்கு விவசாயம் பற்றியோ விவசாயி பற்றியோ எந்த ஒரு புரிதலும் இல்லை. அதனால் அவர்கள் பெருவாரியாக திரைப்படங்களில் விவசாயம் விவசாயிகள் பற்றி தெரிந்து கொண்டிருக்கிறார்கள். எந்த திரைப்படங்களிலும் இஸ்லாமியர்களை ஒரு விவசாயிகளாக காண்பிப்பதில்லை. அதனால்தான் இப்படி ஒரு கேள்வியை எழுப்பப்படுகிறது.

 நமது ஊர் பெரியவர்கள் கூறுவார்கள் அந்த காலத்தில் பல வீடுகளில் ஒவ்வொரு வீடுகளும் 50க்கும் மேற்பட்ட எருமை மாடுகளும் ஒரு சில பசு மாடுகள் இருந்தன. இந்தக் கூற்றை கேட்கும்போது நமக்கு ஆச்சரியமாக இருக்கும் ஏனென்றால் நமது காலகட்டத்தில் நமது போகலூர்  ஒன்றியத்தில் எருமை மாடுகள் என்று ஒன்று இல்லை.  தற்போது நமது சமுதாயத்தில்  ஒரு சில வீடுகளில் பசுமாடுகளை காணமுடிகிறது. ஆனால் அந்த காலத்தில் உள்ள மக்கள் எருமை  மாட்டு பாலை வியாபாரம் செய்து உள்ளார்கள். எருமை மாடுகளைப் பராமரிப்பதற்கு என்றே வேலையாட்களை வைத்து இருந்தார்கள்.  அதுமட்டுமில்லாமல் அப்போது உள்ள மக்கள் விவசாயம் சார்ந்த தொழிலை செய்துள்ளார்கள்.

 விவசாய நிலங்களை வைத்துக் கொண்டு விவசாயம் செய்வார்கள் மற்றும்  விவசாய தொழிலாளிகளாக இருப்பார்கள். இன்று குறிப்பிட்ட  நபர்களிடம் மட்டுமே விவசாய நிலங்கள் உள்ளது. ஒரு சில நபர்கள் விவசாய கூலிகளாக இருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால் யாதவ குடியிருப்பு பகுதியில் இருந்த நமது அனைத்து விவசாய  நிலங்களும் ஏறக்குறைய விற்பனை செய்துவிட்டார்கள். அதேபோன்று தோட்டகாட்டில் உள்ள விவசாய நிலங்களை விற்க ஆரம்பித்து விட்டார்கள். 

 தற்போது நமது வீடுகள் இருக்கக்கூடிய பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். நமது பகுதியில் உள்ள நிலங்களில் ஆவது நமது மக்களுக்கு விற்பனை செய்வார்கள் என்றால் அதில் ஒரு நடைமுறைச் சிக்கல் உள்ளது. நமது சொத்தில் உள்ள இடத்தை  முதலில் நமது சொந்தம் பந்ததற்கு தான் விற்பனை செய்வோம்  அல்லது மற்றவரிடம் விற்பனை செய்வோம் . ஆனால் விவசாய நிலங்கள்  பொருத்தவரையில் அப்படியல்ல இது ஒரு எழுதப்படாத ஒரு சட்டம் நடைமுறையில் உள்ளது. யார் நமது நிலத்தை ஒத்தி  அல்லது பங்குக்கு வாங்கி விவசாயம் செய்கிறார்களோ  அவரிடம்தான் விற்பனை செய்ய வேண்டும் மாறாக எந்த காரணத்தை கொண்டும் சொந்தம் பந்தது கூட விற்பனை செய்ய முடியாது. இதன் காரணமாக நமது நிலங்கள் மற்ற மாற்றுமத சகோதர்களுக்கு செல்லக் கூடிய அவல நிலை ஏற்படுகிறது.

 ஒரு சில நபர்களை விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பின் அந்த விவசாய நிலங்களை அவர்களுடைய சந்ததியினர் விவசாயம் செய்ய எந்த ஒரு முயற்சியும் தற்போது எடுப்பதில்லை. நெல், மிளகாய், பருத்தி போன்ற விவசாயம் செய்யத் தெரியவில்லையா அதற்கு மாற்றாக மாற்று விவசாயத்தை கையாளலாம். இதனை தவிர்த்து விட்டு விவசாய நிலத்தை விற்றாள். முஸ்லிம் சமூகம் விவசாயிகள் செய்தார்களா என்ற கேள்விக்கு நமது ஊரே எடுத்துக்காட்டாக அமைந்துவிடும். விவசாயத்தை காப்போம் பாரம்பரியத்தை பாதுகாப்போம்.


                                                                                   நபது நிருபர்

                                                                                    சாமானியன்

                                                                                  போகலூர்

Monday, October 28, 2019

உறங்காத விழிகளாய்


சிறுவன் சுர்ஜித் என்னை மன்னித்துவிடு
என் நாட்டை டிஜிடல் இந்தியா என்றார்கள்
மேக்கின் இந்தியா என்றார்கள்
செவ்வாய்க்கு விண்கலம் அனுப்புகிறேன் என்றார்கள்
அணுகுண்டு வைத்திருக்கும் நாடு என்றார்கள்
நம்பி இருந்துவிட்டேன் என்னை மன்னித்துவிடு
சென்னை கடலில் எண்ணெயை வாளியால் அள்ளியதை
நான் மறந்து விட்டேன் என்னை மன்னித்துவிடு
நான் அப்துல் காலம் பிறந்த மண்ணை சார்ந்தவன்
என்பதை மறந்துவிட்டேன் என்னை மன்னித்துவிடு
இனி இதுபோல் தவறு நடக்காது
உறங்காத விழிகளாய் சாமானியன்

-    சாமானியன் போகலூர்

Friday, October 18, 2019

சாமானியனின் பதில்கள்


மனைவி : மச்சான் மல்லிகை கடைக்கு போனைங்களே  
கணவன் : கடையை மூடி பல வாரங்கள் ஆச்சாம்
மனைவி : என்ன மச்சான் சொல்லுரிக்க
கணவன் : நாடு போர போக்க பாத்தா பிச்சை கூட எடுக்க முடியாது                 போல
மனைவி : அப்படியா மச்சான்
கணவன் : ரேசன் கார்டு, ஆதர் கார்டு, ஒட்டைடி பத்திரமாக இருக்கா
மனைவி : மச்சான் எல்லாம் அடகுகடையில் இருக்கே
கணவன் : போச்சே நம்மை இந்தியன் இல்லைனு சொல்லிடுவன்களே
மனைவி : நல்லவேளை எனக்கு தமிழ் மட்டுமே தெரியும்.                           இல்லேன்னா  என்னை வெளிநாட்டுகாரினு சொல்லி                     இருப்பாங்க
கணவன் : அடியே இந்தி தெரியாதவர்கள் எல்லாம் வெளிநாட்டு                     காரர்கலாம்
மனைவி : நம்ம தலைவர் எங்கே சென்றலும் தமிழில் யாதும் ஊரே                 யாவரும் கேளிர் எல்லாமே சொல்லுறாரு
கணவன் : அவர் எல்லா ஊரையும் சுத்திபார்க்க வரேன்னு தமிழில்                   சொல்லுறாரு
மனைவி : தமிழ்நாடு அவ்வளவுதானா மச்சான்
கணவன் : தமிழ்நாட்டை அடகுவச்சி பல வருடங்கள் ஆய்விட்டது.
-    சாமானியன் போகலூர்

டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பால் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம் ?


    இந்தியா நாடு தற்போது பொருளாதர சரிவில் சென்று கொண்டிருக்கும் வேளையில் பல நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை குறைத்துக் கொண்டிருக்கிறது. கடந்த 45 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு வேலையின்மை கடுமையான அளவிற்கு உயர்ந்து வருகிறது. இந்தியா சந்தித்துவரும் பாதிப்புகள் தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. தமிழகத்தில் வேலைவயிப்பு அலுவலகத்தில் சுமார் 90 லட்சத்திற்கும் மேற்ப்பட்டோர் பதிந்துவைதுள்ளனர். சமிபத்தில் டி.என்.பி.எஸ்.சி 9351 இடங்களுக்கான நடத்திய குரூப் 4 தேர்வில்  20 இலட்சத்து அதிகமானோர் வின்னப்வித்திருந்தனர். தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரம்பேர் கல்வியை முடித்து வெளிவருகின்றனர். தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு  வேலையின்மைனரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது .
     டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, தேர்வில் புதிய பாடதிடத்தின் படி முதல் நிலைத்தேர்வில் மொழித்தாள் நீக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.  டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, பிரிவுக்கான தேர்வில் தமிழ்தாள் (மொழியறிவு) மற்றும் ஆங்கலம்தாள் (மொழியறிவு) கேள்விகளை நீக்கிவிட்டு தமிழ் சமுகத்தின் வரலாறு, அகல்வரயிச்சிகளின் கண்டுபிடிப்பு, சங்ககாலம் வரையிலான தமிழ் இலக்கியம் மற்றும் திருக்குறளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக அறிவித்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, மொழித்தாள் நீக்கப்படுள்ளத்தால் தேர்வில் வினாக்கள் பொதுஅறிவு வகையில் கேள்விகள் கேட்கப்படும் வயிப்புள்ளது. அணைத்து வினாக்களும் தமிழ் மற்றும் ஆங்கலத்தில் இருக்கும். டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, பிரிவுக்கான தேர்வில் புதிய பாடத்திட்டத்தில் படி உள்ள அணைத்து கேள்விகுக்கும் ஆங்கிலத்தில் படித்து தேர்ச்சிபெறலாம். தமிழ்தாள் இருந்த மொழியறிவு மற்றும் இலக்கணம் சார்ந்தவை. தமிழ் இலக்கணத்தில் கேட்கப்படும் கேள்விகவிகளுக்கு    தமிழை தாய் மொழியாக கொண்டவர்களால் மட்டுமே தேர்ச்சி பெறமுடியும் மாறாக தற்போது அறிப்பானது வெளிமாநில சார்ந்த நபர்களை தமிழக அரசு வேலைக்கு அமர்த்த வழிவகைக்கும் அதற்க்கு முன்னோட்டமாக தமிழக அதிமுக அரசால் 2016 ஆண்டு தமிழ்நட்டை சாராத நபர்கள் தமிழக அரசு வேளைகளில் சேரலாம் என்று அறிவித்தது. 2016 ஆண்டிற்கு முன் தமிழக அரசால் நடத்தப்படும் நிறுவனங்களுக்கு வேலைவாயிப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் அரசு வேலை என்று இருந்ததை தமிழக அதிமுக அரசு ரத்து செய்து. வெளிமாநில சார்ந்த நபர்கள் தமிழக அரசால் நடத்தப்படும் தேர்வு எழுத வகை செய்யப்பட்டது.
2014 இல் மத்தில் ஆட்சியில் அமர்ந்த பா.ஜா.க. தமிழகத்தை மற்றான்தாய் மனப்பன்பையுடன் நடத்தி வாருகிறது. ஒரு மாநிலம் சார்ந்த மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாயிப்பில் அந்தந்த மாநில மொழி பேசுபவர்களுக்கு அதிக முன்னுரிமைகள் அளிக்கப்படவேண்டும் என்ற விதி இருக்கிறது. ஆனால்  மோடி தலைமையில் ஆனால் மத்திய அரசு அமைந்தலிருந்து மத்திய அரசு பணிகளுக்கு ஆங்கிலம் மற்றும் இந்தியில் தான் தேர்வு எழுதவேண்டும் என்று தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. இந்தி மொழியை தாய் மொழியாக கொண்ட வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் எளிதில் வெற்றி பெறுகிறார்கள் இதனால் தமிழகத்தில் மத்திய அரசு வேளைகளில் வடமநிலத்வர்கள் அதிகள் சேர்கிறார்கள்.
தமிழகத்தில் மத்திய அரசின் கீழ் உள்ள தபால்துறை, ரயில்வே துறை, வங்கிகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சமுக செயல்பட்டார்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்திய அரசின் தமிழகதிற்கு எதிரான நிலைபாட்டை எதிர்த்து போரடிகொண்டிருக்கிரர்கள். ஆனால் தமிழக மக்களுக்கு எதிராக மத்திய மோடி அரசு கொண்டுவரும் அனைத்து திட்டங்களுக்கும் தனது ஆதரவை வளங்கிகொண்டிருக்கிறது தமிழக அதிமுக அரசு. நீட் தேர்வு, 8 வழிசளைகயாக இருக்கட்டும், புதிய கல்வி கொள்கை, இந்தி திணிப்பு போன்ற திட்டங்களை எந்த எதிர்ப்பு தெரிவிக்காமல் செயல்படுத்துகிறது அதிமுக அரசு.
    1965 இல் மத்திய அரசு தமிழத்தில் இந்தி மொழியை திணிக்க முனைந்தார்கள் முடையவிலை. பல வழிகளிலும் இந்தியை திணிக்க முனைந்தார்கள் தமிழகத்தில் எதிர்த்தது. புதிய யுக்திகை பயன் படுத்தி தமிழ் மொழியை அழிக்க முயல்கிறார்கள். தமிழை வளர்க்கிறோம் என்பது, எங்கு சென்றலும் திருக்குறள் குறுவது அனால் தமிழ் மக்களுக்கு எதிரான  மக்கள் திட்டங்களை கொண்டுவருவது, ஒரு மொழியின்  இலக்கணம்(மொழியறிவு) இருக்கும்வரை அந்த மொழியை அழிக்க முடியாது. இந்தியாவில் நடந்த மக்கள் எழுச்சி போராட்டங்களின் முன்னோடி தமிழகம் என்பதை இந்த ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ளவேண்டும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, தேர்வில் புதிய பாடதிடத்தின் படி முதல் நிலைத்தேர்வில் மொழித்தாள் நீக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பை திரும்ப பெறவேண்டும் என்பதே தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் கல்வியாளர்கள் வேண்டுகோளாக உள்ளது.
  
                                                                                                                           -  சாமானியன்
                                                                                                                                  போகலூர் 

Friday, October 12, 2018

தாடி ஏன்? என்று முஸ்லிமல்லாத அன்பர்களால் கேட்கப்படும் கேள்விக்கு பதிலளிக்கும் சிறுகதை!

தாடி ஏன்? என்று முஸ்லிமல்லாத அன்பர்களால் கேட்கப்படும் கேள்விக்கு பதிலளிக்கும் சிறுகதை!

நேர்முகத் தேர்வுக்காக காத்திருந்த அன்வரின் மொபைல் போன் ஒலித்தது. போனை ஆன் செய்த அன்வர் 'சொல்லுடா..' என்றான்.
'எங்கடா இருக்க... இண்டர்வியூ போனியே என்னாச்சு..' என்றான் எதிர் முனையில் பேசிய அன்வரின் நண்பன் ரமேஷ்.

'மூணு ரவுண்ட் கிளியர் பண்ணிட்டேன்டா.. கடைசி ரவுண்ட் ஹெச்.ஆர். ரவுண்டுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்...' என்றான் அன்வர்.
'ஓ.. ஓ.கே.டா.. நல்லா பண்ணு.. ஆல் தி பெஸ்ட்... நான் அப்பறமா கால் பண்றேன்' என்று ரமேஷ் கூறியதும், 'தேங்க்யூடா..' என்ற பதிலளித்துவிட்டு போனை கட் செய்தான் அன்வர்.

ஹெச்.ஆர். (HR) அறைக்கு வெளியே காத்திருந்த அன்வருக்கு உள்ளே இருந்து அழைப்பு வந்ததும் எழுந்து அறையினுள் சென்றான்.
'மேய் ஐ கம் இன் சார்...'
'எஸ்.. கம் இன்.. ப்ளீஸ் டேக் யுவர் சீட்...'

'தேங்க்யூ சார்...'
'குரூப் டிஸ்கஷன்ல ரொம்ப நல்லா இங்கிலீஷ்ல பேசுனீங்க... இந்த ரவுண்ட்லையும் இங்கிலீஷ்லையே பேசி உங்க இங்கிலீஷ் நாலேஜை டெஸ்ட் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. சோ.. நாம தமிழ்லையே பேசலாம்..' என்றார் ஹெச்.ஆர்.
'சரிங்க சார்...' என்றான் அன்வர்.

'உங்களோட சர்டிபிகேட் எல்லாம் பார்த்தேன்.. நல்ல மார்க் வாங்கியிருக்கீங்க...உங்களோட ப்ராஜக்ட்டும் ரொம்ப நல்லா இருந்தது. கிட்டத்தட்ட உங்களுக்கு இந்த வேலை கிடைச்ச மாதிரிதான். நீங்க எதிர்பார்க்கிற சம்பளமும் கிடைத்துவிடும்..'

'தேங்க்யூ சார்...'
'ஆனால் கம்பெனி ரூல்ஸ் படி *தாடி வைக்கக் கூடாது.* தாடியை எடுக்குறதுக்கு உங்களுக்கு ஓகேன்னா இப்பவே அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை வாங்கிக்கலாம்...' என்றார் ஹெச்.ஆர்.

'சாரி டூ ஆஸ்க்.. எதற்காக சார் தாடியை எடுக்கணும்...' என்றான் அன்வர்.
'இது கம்பெனி ரூல்ஸ்... ஏன் எதற்கு என்றெல்லாம் கேள்வி கேட்க முடியாது...'

'ரூல்ஸா இருந்தாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்குமே சார்... தாடியால என்னோட வேலை ஏதும் தடைப்படுமா..? தாடி வைக்கிறதுனால என்னோட திறமையோ, கற்கும் திறனோ குறையப் போகுதா..? ஏதாவது நியாயமான காரணம் இருந்தால்தானே எதையும் செய்ய முடியும்..?'
'ஓ.. ஓகே.. நீங்க எதற்காக தாடி வச்சுருக்கீங்க.. அதுக்கு என்ன காரணம்...?' என்று ஹெச்.ஆர் கேட்ட கேள்விக்கு,

'தாடி வைக்கிறதுனால நிறைய நன்மை இருக்குது சார்.. அதனாலதான் வச்சுருக்கேன்..' என்று பதிலளித்தான் அன்வர்.

'நன்மையா..? தாடி வைக்கிறதுனாலையா..? சும்மா ஏதாவது சொல்லணும் என்பதற்காக நன்மை அது, இதுனு சொல்லாதீங்க..' என்று நக்கலாய் சிரித்தார் ஹெச்.ஆர்.
'இல்லை சார்.. அப்படி இல்லை..'
'தெரியும் மிஸ்டர் அன்வர்.. நீங்க ஒரு முஸ்லிம், உங்களோட மத வழக்கப்படி தாடி வச்சுருக்கீங்க இதுதானே உண்மை..?'

'இஸ்லாமிய வழக்கப்படி தாடி வைக்க வேண்டும் என்று இருந்தாலும் அது ஏதோ மூட நம்பிக்கையாலோ, அர்த்தமற்றோ சொல்லப்பட்டது இல்லை சார். விஞ்ஞானப் பூர்வமாக பார்த்தால் உடல் ஆரோக்கியத்தில் தாடி முக்கியப் பங்கு வகிக்கிறது. அதன் காரணமாகத்தான் தாடி வைக்கும்படி இஸ்லாம் சொல்லுது...'
'வாட் யூ ஆர் டாக்கிங் அன்வர்.. அழகா ஷேவ் பண்ணி முகத்தை பளபளப்பா வச்சுக்காம அசிங்கமா தாடி வளர்க்கிறதுல என்ன ஆரோக்கியமான விஷயம் இருக்கு..?'

'நிறைய இருக்கு சார்.. தாடி நமது முகத்திற்கு ஒரு கவசம் மாதிரி.. தாடி வைக்கிறதுனால முகம் எப்பொழுதும் குளிர்ச்சியா இருக்கும்.. கன்னமும், தாடையும் பாதிக்காமல் தாடி பாதுகாக்குது... தாடி முகத்துல படர்ந்து இருக்குறதுனால SABACEOUS என்ற சுரப்பி சுரக்கிறது. இந்த சுரப்பி கரும் புள்ளிகள், முகப் பருக்கள் ஏற்படாமல் பாதுகாக்குது. தாடி வளர்க்கிறதுனால சூரிய ஒளிக் கற்றைகள் நேரடியாக சருமத்தை அடைவதை தடுத்து தொண்டை, பற்களின் ஈறுகள் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். பல் வலி வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஒளிக் கற்றைகள் நேரடியாக முக சருமத்தை அடையும் போது தோல் வலுவிழந்து முகத்தில் சுருக்கம் ஏற்பட ஆரம்பிக்கும். தாடி வைத்தால் சின்ன வயதிலேயே முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றம் ஏற்படாது. முக்கியமா சுவாசக் கோளாறுகள் இருக்காது. இது எல்லாமே விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைகள் சார். அதனால் தான் முஸ்லிம்கள் தாடி வைக்திறதுக்கு முக்கியத்துவம் கொடுக்குறாங்க...'

'வாவ்.. தாடி வைக்கிறதுல இவ்வளவு நல்ல விஷயம் இருக்கா.. கிரேட்.. எனக்கு எவ்வளவோ முஸ்லிம் பிரண்ட்ஸ் இருக்காங்க.. அவங்களிடம் ஏன் தாடி வைக்கிறீங்கனு கேட்டா.. சும்மா.. இஸ்லாத்துல தாடி வைக்க சொல்லீருக்கு.. அதனால வச்சுருக்கோம்னு சொல்லுவாங்க.. இந்த அளவுக்கு தாடியைப் பத்தி யாரும் விளக்கிச் சொன்னது இல்ல.. தேங்க்யூ.. எல்லாம் சரிதான்.. ஆனால் தாடி வைக்கிறது பார்க்க அசிங்கமா இருக்குமே...?'

'அது உங்களோட பாய்ண்ட் ஆஃப் வியூ சார்.. உங்களோட தனிப்பட்ட ரசனை. என்னைப் பொறுத்த வரை தாடி வைக்கிறதுதான் எனக்கு அழகா இருக்கு.. உங்களோட ரசனையும், மத்தவங்களோட ரசனையும் ஒண்ணா இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.. எப்படிப் பார்த்தாலும் உங்களோட கருத்து தவறு சார்.. ஆண்களுக்கு தாடிதான் சார் அழகு.. Robert J. Pelligrini என்ற கலிபோர்னிய யுனிவர்சிட்டி மனோதத்துவ நிபுணரின் ஆராய்ச்சியில் தாடி வைத்திருப்பவர்கள் தான் தோற்றத்தில் கம்பீரமாகவும், அழகாகவும், கவர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதாக கண்டுபிடிச்சுருக்காரு.. சொல்லப்போன நிறைய அறிஞர்களும், சாதித்தவர்களும் தாடி வச்சுருக்காங்க.. சாக்ரடீஸ், சார்லஸ் டார்வின், ஆபிரகாம் லிங்கன், தாகூர், பெரியார் இப்படி மற்ற மதத்தினரும், கடவுளே இல்லைனு சொன்னவங்களும் தாடி வச்சுருக்காங்க.. அவங்களெல்லாம் அழகா இல்லையா..? ஏதும் சாதிக்கலையா..? தாடிக்கும், மதத்திற்கும் முடிச்சு போடுவதும், தாடியை அலங்கோலமாகப் பார்ப்பதும் சரியான அணுகுமுறை இல்லை சார்.. மோர் ஓவர் தாடி வைக்கிறது என்னோட தனிப்பட்ட உரிமை.. என்னோட உரிமையை விட்டுக் கொடுத்தால்தான் இந்த வேலை எனக்குக் கிடைக்கும்னா அப்படிப்பட்ட வேலையே எனக்கு தேவையில்லை சார்..'

'எஸ்.. நவ் ஐ அக்ரி.. புரிஞ்சுக்கிட்டேன்.. தாடிக்கு பின்னால் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது இப்பதான் எனக்குத் தெரியுது. தேங்ஸ் அன்வர். உங்களோட தைரியமான பேச்சும், பரந்த அறிவும், நல்ல சிந்தனையும் தான் எங்க கம்பெனிக்குத் தேவை. வேலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, தனி மனித உரிமைதான் முக்கியம் என்று பேசிய உங்களோட மன தைரியமும், துணிச்சலும், கொள்கையும் ரொம்பப் பிடிச்சுருக்கு.. யூ ஆர் செலக்டட்.. இன்னும் ரெண்டு வாரத்தில் வேலையில் ஜாயிண்ட் பண்ணிடுங்க..'

'தேங்க் யூ சார்..' என்ற அன்வரின் முகத்தில் மகிழ்ச்சி நிரம்பியிருந்தது.
இருவரும் கைகுலுக்கி விடை பெற்றனர். வேலை கிடைத்த மகிழ்ச்சி அன்வரின் மனதிலும், தாடியே முகத்திற்கு வசீகரம் சேர்க்கிறது என்ற உண்மையைப் புரிந்து கொண்டதன் மகிழ்ச்சி ஹெச்.ஆரின் மனதிலும் நிரம்பியது.
இரண்டு வாரங்கள் கழித்து அன்வர் வேலையில் ஜாயிண்ட் பண்ண வந்த போது ஹெச்.ஆரின் முகத்தில் தாடி அரும்பத் தொடங்கியிருந்தது. 
- onthisday

Friday, March 6, 2015

விமான பைலட் உரிமம் பெற்றுள்ள முதல் இந்திய முஸ்லிம் பெண்

விமான பைலட் உரிமம் பெற்றுள்ள முதல் இந்திய முஸ்லிம் பெண். இந்த சிறகு முளை
த்த பெண்ணை வாழ்த்துவோம்...
பர்தா எங்கள் உடலுக்கு தான் சிந்தனைக்கு அல்ல என்பதை நிருபித்த சகோதரி செயிதா பாத்திமாவை வாழ்த்துவோம்.