Saturday, November 2, 2013

இன்றைய முஸ்லிம்களிடையே மிக பரபரப்பாக உச்சரிக்கப்படும் பெயராக ஜனநாயகம் மாறி விட்டது என்றால் அது மிகையானதல்ல.
ஒவ்வொரு இயக்கத்தை சார்ந்தவர்களும் தங்கள் சிந்தனைக்கு ஏற்றவாறு ஜனநாயகத்துக்கு விளக்கம் கொடுத்தாலும் அனைவரும் ஜனநாயகம் என்பது நிராகரிப்பாளர்களால் உருவாக்கப்பட்டது என்றும் இஸ்லாத்துக்கு முரணானது என்பதிலும் கருத்தொற்றுமை கொள்கின்றனர்.
வேறு சிலரோ ஜனநாயகத்தில் இஸ்லாத்தின் ஷூரா அமைப்பை போன்ற ஆலோசனைகள், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தல் போன்ற சில அம்சங்கள் இருப்பதால் ஜனநாயகம் இஸ்லாத்துக்கு முரணானதல்ல என்று கருதுகின்றனர்.



ஜனநாயகம்  என்பது வறுமையில் செத்துக் கொண்டிருக்கும் மக்கள் கையிலும் இல்லை ; மெத்தப்படித்தவர்கள் கையிலும் இல்லை. யாருக்கு எவ்வளவு கமிஷன் பேச வேண்டும் என்று தீர்மானிக்கும் அரசியல்வாதிகளிடம் இருக்கிறது இந்த ஜனநாயகம் என்ற அதிகார நாயகம் .

ஜனநாயகம் என்பதற்கு மக்கள் என்ன பொருள் கொள்கிறார்கள் என்பதற்கு இன்னும் எத்தனையோ விளக்கங்கள் தரமுடியும். என்னைப் பொறுத்தவரையில் ஜனநாயகம் என்பதற்கு வேறுபட்ட முறையில், ஸ்தூலமான முறையில் பொருள் கொள்கிறேன். "ஜனநாயகம் என்பது இரத்தம் சிந்தாமல் மக்களின் பொருளாதார, சமூக வாழ்க்கையில் புரட்சிகர மாற்றத்தைக் கொண்டுவரும் ஒரு வடிவம் என்பதுதான் ஜனநாயக‌த்து‌க்கு நா‌ன் அ‌ளி‌க்கு‌ம் ‌விள‌க்கமாகு‌ம். இ‌வ்வாறுதா‌ன் ஜனநாயகத்தை 
ஜனநாயகம் என்றால் என்ன?

ஜனநாயகம் என்றால் என்ன?



ஆதி மனிதன் தனக்கு தேவையான விடயங்களை தானாகவே உற்பத்தி செய்து வாழ்ந்தான். பின்னர் மனித தேவைகளும் விருப்பங்களும் அதிகரித்துச் சென்றதன் காரணமாக மனிதன் ஏனையோருடன் இடைத்தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டான். மனிதனின் தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு அரசு தேற்றம் பெற்றது. இன்றைய அரசுகளில் ஜனநாயகம் மிகவும் முக்கிய ஒரு விடயமாக மாறியுள்ளது. ஜனநாயகம் என்பது மக்கள் ஆட்சி என கூறலாம். ‘டிமொகிரசி’ என்ற சொல் கிரேக்க வார்த்தைகளிலிருந்து பெறப்படுகின்றது. ‘டிமோ’(DEMO) என்பது மக்கள் என்பதையும் ‘கிரேசி’ (CRACY) என்பது இறைமை அல்லது அதிகாரம் என்பதையும் குறிக்கின்றது. ஜனநாயகம் நேரடி ஜனநாயகம், மறைமுக ஜனநாயகம் 2 வகையாக பிரிக்கப்பட்டடுள்ளது. ஜனநாயகமானது 3 முக்கிய விடயங்களை கொண்டுள்ளது. அவையாவன:- 

1. சமத்துவம்
2. மக்கள் இறைமை
3. சுய ஆட்சி


என்பவையாகும். மக்கள் இறைமை என்பதன் பொருள் யாதெனில் ஜனநாயகமானது ஒரு அரசியல் முறை என்பதும் அதில் மக்கள் தமக்குள்ள அதிகாரத்தைத் தம்மைத் தாங்களே ஆளும் அளவுக்குச் செயற்படுத்தாது தம்மை ஆளுவோரை மாற்றியமைக்கும் அளவுக்கே செயற்படுத்துகிறார்கள் என்பதுமேயாகும். ஜனநாயகம் குறித்து அறிஞர்கள் பலவித வரைவிலக்கணங்களை கூறியுள்ளனர். அந்த வகையில் ‘ரூசோ’ குறிப்பிடுகையில், 

‘சமூக ஒப்பந்தத்தின் ஊடாக மக்களின் இறைமையை அரசு பெறுகின்றது. அதனடிப்படையில் பெறும் ஆட்சியே ஜனநாயகம் எனப்படும்’ என குறிப்படுகின்றார். 

மேலும் இது குறித்து ‘அரிஸ்டோட்டில்’ குறிப்பிடுகையில்,

‘வழிதவறி இருந்த அதிகாரம் சிறப்பான வடிவத்தை பெற்றுக் கொண்டது’ என கூறுகின்றார்.

 ‘தோமஸ் ஸ்கூப்’ ‘ஜனநாயகம் என்பது மக்களுடைய மக்களுக்கான ஆட்சி’ என குறிப்படுகின்றார். 

ஜனநாயகம் சுதந்திரத்துடன் சட்டத்துக்கான அவசியத்தையும் அதனை அமுலாக்குவதையும் இணைக்கப்படுவதற்கான ஒரு முயற்சியேயாகும். இது பெரும்பான்மையினரின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்று ஓர் உடன்பாடு அல்லது கட்டுப்பாடு இருப்பதாகவும் கருதுகிறது. மற்றும் அது தனிப்பட்டவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும் முயல்கின்றது. ஜனநாயகத்தை கட்டியெழுப்பும் பல காரணிகளில் இனத்துவமும் இனத்துவ அடையாளங்களும், இன வேறுபாடுகளும் மிகவும் முக்கிய விடயங்களாகும். ஜனநாயகம் சுதந்திரத்துடன் சட்டத்துக்கான அவசியத்தையும் அதனை அமுலாக்குவதையும் இணைக்கப்படுவதற்கான ஒரு முயற்சியேயாகும். 

ஜனநாயகமும் ஜனநாயகமயப்படுத்தலும்

  1990களில் ஜனநாயக வளர்ச்சி பாய்ச்சலாக காணப்படுகின்றது. ‘சாமுவேல் ஹன்டிங்டன்’ கருத்துப்படி, உலகில் ஜனநாயகம் என்பது எந்த ஆட்சி முறையினதும் கடைசி கட்டமாக இருக்கும் அத்துடன் ஜனநாயகம் என்பது எப்பொழுதும் மாற்றமடையாது என கூறப்பட்டது. மேலும் 3ம் அலை ஜனநாயகமயப்படுத்தலின் போது இனத்துவம் மற்றும் இனத்துவ வேறுபாடு ஜனநாயகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது என கூறலாம். ஜனநாயகத்தை ஸ்திரப்படுத்துவதிலும் ஜனநாயகமயப்படுத்தலிலும் அன்று முதல் இன்று வரை இனத்துவ வேறுபாடுகள் பாரிய தாக்கத்தை செலுத்தி வருகின்றன.

ஜனநாயகம் என்றால் என்ன?

இதுவே மிகவும் உன்னதமான சமூக அமைப்பாக, ஜனநாயகமாக காட்டப்பட்டு போற்றப்படுகின்றது.  ஜனநாயகம். இதை நிலைநாட்டும் உரிமையைத் தான் சுதந்திரம் என்கின்றனர்.
இந்த ஜனநாயகம் பெரும்பான்மை மக்களின் அரசியல் பொருளாதார விருப்பங்களை மறுதலிக்கின்றது. 

உதாரணமாக வாக்குபோட்டு தெரிவு செய்யப்படும் எந்த உறுப்பினரும் சுரண்டல் கட்டமைப்பை இல்லாதாக்க முடியாது. சுரண்டல் அமைப்பை மாற்றுவதை விடுவோம், முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளிக்கு சார்பாக சட்டங்களை கொண்டுவர முடியாது. இங்கு பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை சட்டமாக்க முடியாது. இதை ஜனநாயகம் அனுமதிக்காது. இந்த ஜனநாயக அமைப்பு சாதியை ஒழிக்க முடியாது. ஆணாதிக்கத்தை கூட ஒழிக்க முடியாது. நிற வெறியை ஒழிக்க முடியாது. இனப்பாகுபாட்டை ஒழிக்க முடியாது. இதற்குள் அங்குமிங்குமாக சீர்திருத்தம் செய்து செயல்படலாமே ஒழிய, அதை ஒழிக்க முடியாது. இதை ஜனநாயகம் அனுமதிக்காது. ஜனநாயகத்தின் இருப்பே இதன் மேல் தான் உள்ளது.
இந்த ஜனநாயகத்தை மக்களிடமிருந்து பாதுகாக்கும் பொலிஸ் என்ற அடக்குமுறை இயந்திரம், பெரும்பான்மை மக்களின் விருப்பை நிறைவு செய்வதில்லை. எந்த முதலாளிக்கும் எதிராக, தொழிலாளிக்கு சார்பாக பொலிஸ் செயல்பட ஜனநாயகம் அனுமதியாது. இதுவே சமூகத்தில் அனைத்துத் துறையிலும் காணப்படுகின்றது. ஜனநாயகம் என்பது ஒரு வர்க்கத்தின் சர்வாதிகார ஆட்சியாகும்.

 இயற்கையில் மனிதனுக்கு இடையில் இல்லாத முரண்பாட்டை, செயற்கையில் பாதுகாக்க முற்படும் போது ஜனநாயகம் தோன்றுகின்றது. மனித முரண்பாட்டை உருவாக்கி அதை பாதுகாக்கும் அமைப்புத்தான் ஜனநாயகம்.
வாக்கு போட்டு தெரிவு செய்யும் உறுப்பினர்கள், பெரும்பான்மை மக்களை பிரதிநிதித்துவம் செய்வதில்லை. மாறாக சிறுபான்மை வாக்குகளை பெற்று ஆளும் வர்க்கமாக மாறி, பெரும்பான்மை மக்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். பொதுவாக இந்த ஜனநாயக அமைப்பில் ஆளும் வர்க்கங்களாக உள்ளவர்கள், 20 சதவீதத்துக்கு உட்பட்ட மக்களின் வாக்கைப் பெற்றே பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகளாக உள்ளனர். அவர்கள் தான் சட்டங்களை இயற்றுகின்றனர். உலகில் பொதுவாக 40 முதல் 50 சதவீதமான மக்கள், இந்த ஜனநாயக தேர்தலில் நம்பிக்கை வைத்து வாக்களிப்பதில்லை. வாக்களிக்கும் 50 முதல் 60 சதவீதமான மக்கள் வாக்கில், ஆளும் வர்க்கம் 20 சதவீதமான வாக்குகளைப் கூட பொதுவாக பெரும்பான்மை நாடுகளில் பெற முடிவதில்லை. இப்படி இந்த ஜனநாயகம் நிர்வாணமாகி, மக்களுக்கு எதிராகவே நிற்கின்றது.


Friday, October 25, 2013

தி ஹிந்து தமிழ் நாளிதழுக்கு மறுப்பு அனுபியது

சுதந்திரத்தின் காவலர்கள்



அந்த நாள்  ஞாபகம்  என்ற  கட்டுரையில் சுதந்திர போராட்ட வீரர் அஸ்பகுல்லா
கான் பற்றி கட்டுரை மிகவும் பாராட்டகுரியது. சுந்திரத்தின் போராட்ட
வீரர்களை காட்டிக்கொடுக்கும்படிச்  செய்ய ஆங்கிலேயர்கள் எவ்வளவே
முயன்றனர் அவர் மறுத்துவிட்டர் என்பது முஸ்லிம்கள் என்றும் நாட்டுக்காக
உயிர் கொடுப்பவர்களே தவிர கைபர் கனவாய் வழியாக இந்தியாவிற்குள் வந்த
ஆரியர்களை போல காட்டிக்கொடுப்பவர்கள் இல்லை என்பதை இக்கட்டுரை அழகாக
எடுத்துரைக்கிறது.

மன்னின் மைந்தர்களான முஸ்லிம்கள் வரலாறு எங்கும் சுதந்திரத்திற்காக உயிரை
கொடுப்பவர்களில் முதலானவர்கள்  என்பது நிதர்சனமான உண்மை. சுதந்திர
போராட்டத்தில் தூக்கிலிடப்பட்ட முதல் முஸ்லிம் அஸ்பகுல்லா கான் என்ற பதமே
தவறானது. அந்நியர்கள்  நம் நாட்டை  கைப்பற்றினார்களோ அன்றிலிருந்து பல
நூறு மேற்பட்ட சுதந்திர போராட்டத்தில்  இடுபட்ட முஸ்லிம்கள்
தூக்கிலிடப்பட்டடுள்ளார்கள்.

 மக்கான் 1800 ஆகஸ்ட் 25 தேதி, கான்பகதூர்கான் 1857, ஜாபர் அலி 1857,
சதார் கான் 1877. இதை போன்று வரலாறு எங்கும் சொல்லிக் கொண்டே போகலாம்.
வரலாற்று அறிஞர்களிள் முஸ்லிம்கள் தங்கள் விகிதாசாரத்தையும் விட சுதந்திர
போராட்டத்தில் இடுபட்டு  உயிரை நீத்துள்ளர்கள். வரலாறு தெரியாதவன் வரலாறு
படைக்கமுடியாது.

 N.  செய்யது போகலூர்

Tuesday, December 11, 2012

கிளி ஜோசியத்தை பாடத்திட்டம்


இந்து முன்னணி அமைப்பின் பத்திரிக்கையான விஜயபாரதம் வார இதழில் (07.12.2012) வெளிவந்த " பாடத் திட்ட குழுக்களில் விஷமிகள்" என்ற தலையங்கம் எழுதிய நண்பருக்கு ஒரு நினைவூட்டல்......

எல்லாம் சரிதான். ஆனால் 1998 - 2004 வரை மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருந்த பா.ஜ.க. அரசாங்கம் கல்வியை காவி மயமாக்கியதையும். கிளி ஜோசியத்தை பாடத்திட்டத்தில் திணிக்க முயன்றதையும், அதேபோல் வேதக்கல்வி, ஜோதிட விஞ்ஞானம், புரோகிதம் ஆகியவற்றை பாடத்திட்டத்தில் சேர்த்ததையும் தலையங்கம் எழுதிய நண்பர் மறந்து விட்டார் போலிருக்கிறது. கண்ணை மறைக்கும் காவி நிறத்தையும் அவர் நினைவில் கொள்வது சாலப் பொருத்தமாகும்.
அன்புடன் 
வழக்கறிஞர் A. முகமது யூசுப் M.A,B.L.,
மாநில பொதுச்செயலாளர் - NCHRO

மனித உரிமை இயக்ககங்களின் தேசிய கூட்டமைப்பு 
Email: yusuffmadurai@gmail.com

Saturday, August 11, 2012

பாக்யராஜின் பதில்களும் உமர் (ரலி) அவர்களும்






சுமார் 16 வருடங்களுக்கு முன், பாக்யா வார இதழில் கேள்வி-பதில் பகுதியில் படித்து,மனதில் பதிந்து போன விடயம் இது.பாக்யா  இதழில் கேள்வி பதில் பகுதி ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும். ஒவ்வொரு கேள்விகளுக்கும் ஒரு குட்டிக் கதை, அல்லது வரலாற்றிலிருந்து ஒரு சம்பவத்தை எடுத்துக் காட்டி பதில் சொல்லுவது பாக்யராஜ் அவர்களின் ஸ்டைல்.


கேள்வி: அரசியல் என்பது சாக்கடையா?


பதில்: இஸ்லாமிய நாட்டில் உமர் என்று ஒரு ஜானதிபதி இருந்தார். அவர் நோய்வாய்ப்பட்டபோது அங்கிருந்த மருத்துவர்கள் சில மருந்துகளை கொடுத்து இதனை தேனில் குழைத்து சாப்பிடுங்கள் என்றார்கள்.அப்போது அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டத்திலுள்ள தேனை சேகரித்து வைத்திருந்தார்கள். அந்நாட்டின் அதிபரான உமர் நினைந்திருந்தால் அதை எடுத்து அருந்தியிருக்கலாம் அவர் அப்படி செய்யவில்லை. மதியம் வேளை தொழுகைக்காக பள்ளிவாசலில் மக்கள் அனைவரும் கூடியிருந்தபோது உமர் எழுந்து நின்று மக்களை நோக்கி,



"எனக்கு ஒரு வியாதி இருக்கிறது.அதற்கு மருத்துவர் தேன் கலந்து சாப்பிட சொல்லுகிறார். அரசாங்க பொறுப்பிலுள்ள தோட்டத்திலிருந்து ஒரு கரண்டி தேன் எடுத்து பயன்படுத்திக் கொள்ளவா?"  என அனுமதி கேட்கிறார். மக்கள் அனைவரும் "இதற்கெல்லாம் போய் அனுமதி கேட்க வேண்டுமா? தராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்!"  என்று சொன்னார்கள் அதற்கு உமர், "இல்லை (அரசாங்கத்தின்) மக்களின் சொத்தை மக்களின் அனுமதியில்லாமல் பயன்படுத்த யாருக்கும் அனுமதியில்லை" என்று கூறிவிட்டு, அந்த தேனை சாப்பிட்டு நோயை குணப்படுத்தினார்.அந்த  காலக்கட்டத்தில் நீங்கள் வாழ்ந்திருந்தால் அரசியல் சாக்கடையா? என்ற கேள்வியே உங்கள் மனதில் தோன்றியிருக்காது என்று கூறியிருந்தார் பாக்கியராஜ்.


இஸ்லாமிய கலீபா உமர் (ரலி) அவர்களை பற்றி எனக்கு கேள்வி பதிலின் மூலம் முதன் முதலில் அறிமுகப்படுத்தி வைத்தவர்  பாக்யராஜ் அவர்கள் தான்.

அடுத்து தமிழகத்தின் புகழ்பெற்ற நாளிதழ்  நடத்திய அந்த விவாதத்தின் தலைப்பு: அறிஞர்களின் நூல்களை அரசுடைமை ஆக்குவது போல அரசியல்வாதிகளின் -அவர்களின் நேருங்கிய உறவினர்களின் சொத்துக்களையும் அரசுடைமையாக்கும் நாள் எந்தாளோ?



இந்த விவாதத்தில் பங்கு கொண்ட வாசகர் ஒருவர், தேர்தல் மனுதாக்களின் போது என்ன சொத்து காட்டப்படுகிறதோ அதையும், 5 ஆண்டுகள் பதவி முடிந்தபின் என்ன சொத்து உள்ளதோ அதையும் கண்டறிந்து அவற்றை நாட்டுடமை ஆக்கவேண்டும். முடியுமா? அதற்கு நமது ஜனநாயகம் இடம் கொடுக்குமா? இப்படியெல்லாம் கற்பனை செய்து கொள்ளலாம். நல்ல கற்பனை என்றார்.



ஆனால் நல்ல கற்பனை என்று சொல்லப்பட்ட விடயம் வரலாற்றில் உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் இடம்பெற்றது.



கலீஃபா உமர் அவர்களின் ஆட்சிக் காலம். உமர் அவர்கள் பல்வேறு மாநிலங்களுக்கும் (அன்று மாநிலம் என்று சொன்னால் இரான், ஈராக்,சிரியா,பாலஸ்தீன் போன்ற நாடுகள் மாநிலமாக இருந்தன) ஆளுநர்களை நியமித்தார்.அவ்வாறு நியமிக்கும் போது ஆளுநர்களின் சொத்து மதிப்புகளை எழுத்து மூலமாகப் பதிவு செய்யும்படி அரசுக் கருவூல அதிகாரிக்கு ஆணையிட்டார். ஆளுநர்கள் தங்களின் பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெறும் சமயத்தில் தங்கள் சொத்து மதிப்பை மீண்டும் அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.



சில ஆண்டுகள் கழித்து ஆளுநர் ஒருவர் ஓய்வு பெற்ற போது கலீஃபாவைச் சந்தித்து தம் சொத்து விவரங்களை ஒப்படைத்தார். ஆளுநராகப் பதவி ஏற்பதற்கு முன் அவர் வைத்திருந்த சொத்துகளும் இப்பொழுது அவர் சமர்பித்த சொத்துகளும் ஒப்பு நோக்கப்பட்டன. முன்பை விட இரண்டு ஒட்டகங்கள் அவரிடம் அதிகமாக இருந்தன. உடனே அவற்றை அரசுக் கருவூலகத்தில் சேர்க்கும்படி கலீஃபா உத்தரவிட்டார்.

-  நன்றி வலையுகம்