Monday, October 28, 2019

உறங்காத விழிகளாய்


சிறுவன் சுர்ஜித் என்னை மன்னித்துவிடு
என் நாட்டை டிஜிடல் இந்தியா என்றார்கள்
மேக்கின் இந்தியா என்றார்கள்
செவ்வாய்க்கு விண்கலம் அனுப்புகிறேன் என்றார்கள்
அணுகுண்டு வைத்திருக்கும் நாடு என்றார்கள்
நம்பி இருந்துவிட்டேன் என்னை மன்னித்துவிடு
சென்னை கடலில் எண்ணெயை வாளியால் அள்ளியதை
நான் மறந்து விட்டேன் என்னை மன்னித்துவிடு
நான் அப்துல் காலம் பிறந்த மண்ணை சார்ந்தவன்
என்பதை மறந்துவிட்டேன் என்னை மன்னித்துவிடு
இனி இதுபோல் தவறு நடக்காது
உறங்காத விழிகளாய் சாமானியன்

-    சாமானியன் போகலூர்

Friday, October 18, 2019

சாமானியனின் பதில்கள்


மனைவி : மச்சான் மல்லிகை கடைக்கு போனைங்களே  
கணவன் : கடையை மூடி பல வாரங்கள் ஆச்சாம்
மனைவி : என்ன மச்சான் சொல்லுரிக்க
கணவன் : நாடு போர போக்க பாத்தா பிச்சை கூட எடுக்க முடியாது                 போல
மனைவி : அப்படியா மச்சான்
கணவன் : ரேசன் கார்டு, ஆதர் கார்டு, ஒட்டைடி பத்திரமாக இருக்கா
மனைவி : மச்சான் எல்லாம் அடகுகடையில் இருக்கே
கணவன் : போச்சே நம்மை இந்தியன் இல்லைனு சொல்லிடுவன்களே
மனைவி : நல்லவேளை எனக்கு தமிழ் மட்டுமே தெரியும்.                           இல்லேன்னா  என்னை வெளிநாட்டுகாரினு சொல்லி                     இருப்பாங்க
கணவன் : அடியே இந்தி தெரியாதவர்கள் எல்லாம் வெளிநாட்டு                     காரர்கலாம்
மனைவி : நம்ம தலைவர் எங்கே சென்றலும் தமிழில் யாதும் ஊரே                 யாவரும் கேளிர் எல்லாமே சொல்லுறாரு
கணவன் : அவர் எல்லா ஊரையும் சுத்திபார்க்க வரேன்னு தமிழில்                   சொல்லுறாரு
மனைவி : தமிழ்நாடு அவ்வளவுதானா மச்சான்
கணவன் : தமிழ்நாட்டை அடகுவச்சி பல வருடங்கள் ஆய்விட்டது.
-    சாமானியன் போகலூர்

டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பால் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம் ?


    இந்தியா நாடு தற்போது பொருளாதர சரிவில் சென்று கொண்டிருக்கும் வேளையில் பல நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை குறைத்துக் கொண்டிருக்கிறது. கடந்த 45 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு வேலையின்மை கடுமையான அளவிற்கு உயர்ந்து வருகிறது. இந்தியா சந்தித்துவரும் பாதிப்புகள் தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. தமிழகத்தில் வேலைவயிப்பு அலுவலகத்தில் சுமார் 90 லட்சத்திற்கும் மேற்ப்பட்டோர் பதிந்துவைதுள்ளனர். சமிபத்தில் டி.என்.பி.எஸ்.சி 9351 இடங்களுக்கான நடத்திய குரூப் 4 தேர்வில்  20 இலட்சத்து அதிகமானோர் வின்னப்வித்திருந்தனர். தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரம்பேர் கல்வியை முடித்து வெளிவருகின்றனர். தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு  வேலையின்மைனரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது .
     டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, தேர்வில் புதிய பாடதிடத்தின் படி முதல் நிலைத்தேர்வில் மொழித்தாள் நீக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.  டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, பிரிவுக்கான தேர்வில் தமிழ்தாள் (மொழியறிவு) மற்றும் ஆங்கலம்தாள் (மொழியறிவு) கேள்விகளை நீக்கிவிட்டு தமிழ் சமுகத்தின் வரலாறு, அகல்வரயிச்சிகளின் கண்டுபிடிப்பு, சங்ககாலம் வரையிலான தமிழ் இலக்கியம் மற்றும் திருக்குறளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக அறிவித்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, மொழித்தாள் நீக்கப்படுள்ளத்தால் தேர்வில் வினாக்கள் பொதுஅறிவு வகையில் கேள்விகள் கேட்கப்படும் வயிப்புள்ளது. அணைத்து வினாக்களும் தமிழ் மற்றும் ஆங்கலத்தில் இருக்கும். டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, பிரிவுக்கான தேர்வில் புதிய பாடத்திட்டத்தில் படி உள்ள அணைத்து கேள்விகுக்கும் ஆங்கிலத்தில் படித்து தேர்ச்சிபெறலாம். தமிழ்தாள் இருந்த மொழியறிவு மற்றும் இலக்கணம் சார்ந்தவை. தமிழ் இலக்கணத்தில் கேட்கப்படும் கேள்விகவிகளுக்கு    தமிழை தாய் மொழியாக கொண்டவர்களால் மட்டுமே தேர்ச்சி பெறமுடியும் மாறாக தற்போது அறிப்பானது வெளிமாநில சார்ந்த நபர்களை தமிழக அரசு வேலைக்கு அமர்த்த வழிவகைக்கும் அதற்க்கு முன்னோட்டமாக தமிழக அதிமுக அரசால் 2016 ஆண்டு தமிழ்நட்டை சாராத நபர்கள் தமிழக அரசு வேளைகளில் சேரலாம் என்று அறிவித்தது. 2016 ஆண்டிற்கு முன் தமிழக அரசால் நடத்தப்படும் நிறுவனங்களுக்கு வேலைவாயிப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் அரசு வேலை என்று இருந்ததை தமிழக அதிமுக அரசு ரத்து செய்து. வெளிமாநில சார்ந்த நபர்கள் தமிழக அரசால் நடத்தப்படும் தேர்வு எழுத வகை செய்யப்பட்டது.
2014 இல் மத்தில் ஆட்சியில் அமர்ந்த பா.ஜா.க. தமிழகத்தை மற்றான்தாய் மனப்பன்பையுடன் நடத்தி வாருகிறது. ஒரு மாநிலம் சார்ந்த மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாயிப்பில் அந்தந்த மாநில மொழி பேசுபவர்களுக்கு அதிக முன்னுரிமைகள் அளிக்கப்படவேண்டும் என்ற விதி இருக்கிறது. ஆனால்  மோடி தலைமையில் ஆனால் மத்திய அரசு அமைந்தலிருந்து மத்திய அரசு பணிகளுக்கு ஆங்கிலம் மற்றும் இந்தியில் தான் தேர்வு எழுதவேண்டும் என்று தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. இந்தி மொழியை தாய் மொழியாக கொண்ட வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் எளிதில் வெற்றி பெறுகிறார்கள் இதனால் தமிழகத்தில் மத்திய அரசு வேளைகளில் வடமநிலத்வர்கள் அதிகள் சேர்கிறார்கள்.
தமிழகத்தில் மத்திய அரசின் கீழ் உள்ள தபால்துறை, ரயில்வே துறை, வங்கிகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சமுக செயல்பட்டார்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்திய அரசின் தமிழகதிற்கு எதிரான நிலைபாட்டை எதிர்த்து போரடிகொண்டிருக்கிரர்கள். ஆனால் தமிழக மக்களுக்கு எதிராக மத்திய மோடி அரசு கொண்டுவரும் அனைத்து திட்டங்களுக்கும் தனது ஆதரவை வளங்கிகொண்டிருக்கிறது தமிழக அதிமுக அரசு. நீட் தேர்வு, 8 வழிசளைகயாக இருக்கட்டும், புதிய கல்வி கொள்கை, இந்தி திணிப்பு போன்ற திட்டங்களை எந்த எதிர்ப்பு தெரிவிக்காமல் செயல்படுத்துகிறது அதிமுக அரசு.
    1965 இல் மத்திய அரசு தமிழத்தில் இந்தி மொழியை திணிக்க முனைந்தார்கள் முடையவிலை. பல வழிகளிலும் இந்தியை திணிக்க முனைந்தார்கள் தமிழகத்தில் எதிர்த்தது. புதிய யுக்திகை பயன் படுத்தி தமிழ் மொழியை அழிக்க முயல்கிறார்கள். தமிழை வளர்க்கிறோம் என்பது, எங்கு சென்றலும் திருக்குறள் குறுவது அனால் தமிழ் மக்களுக்கு எதிரான  மக்கள் திட்டங்களை கொண்டுவருவது, ஒரு மொழியின்  இலக்கணம்(மொழியறிவு) இருக்கும்வரை அந்த மொழியை அழிக்க முடியாது. இந்தியாவில் நடந்த மக்கள் எழுச்சி போராட்டங்களின் முன்னோடி தமிழகம் என்பதை இந்த ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ளவேண்டும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, தேர்வில் புதிய பாடதிடத்தின் படி முதல் நிலைத்தேர்வில் மொழித்தாள் நீக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பை திரும்ப பெறவேண்டும் என்பதே தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் கல்வியாளர்கள் வேண்டுகோளாக உள்ளது.
  
                                                                                                                           -  சாமானியன்
                                                                                                                                  போகலூர் 

Friday, October 12, 2018

தாடி ஏன்? என்று முஸ்லிமல்லாத அன்பர்களால் கேட்கப்படும் கேள்விக்கு பதிலளிக்கும் சிறுகதை!

தாடி ஏன்? என்று முஸ்லிமல்லாத அன்பர்களால் கேட்கப்படும் கேள்விக்கு பதிலளிக்கும் சிறுகதை!

நேர்முகத் தேர்வுக்காக காத்திருந்த அன்வரின் மொபைல் போன் ஒலித்தது. போனை ஆன் செய்த அன்வர் 'சொல்லுடா..' என்றான்.
'எங்கடா இருக்க... இண்டர்வியூ போனியே என்னாச்சு..' என்றான் எதிர் முனையில் பேசிய அன்வரின் நண்பன் ரமேஷ்.

'மூணு ரவுண்ட் கிளியர் பண்ணிட்டேன்டா.. கடைசி ரவுண்ட் ஹெச்.ஆர். ரவுண்டுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்...' என்றான் அன்வர்.
'ஓ.. ஓ.கே.டா.. நல்லா பண்ணு.. ஆல் தி பெஸ்ட்... நான் அப்பறமா கால் பண்றேன்' என்று ரமேஷ் கூறியதும், 'தேங்க்யூடா..' என்ற பதிலளித்துவிட்டு போனை கட் செய்தான் அன்வர்.

ஹெச்.ஆர். (HR) அறைக்கு வெளியே காத்திருந்த அன்வருக்கு உள்ளே இருந்து அழைப்பு வந்ததும் எழுந்து அறையினுள் சென்றான்.
'மேய் ஐ கம் இன் சார்...'
'எஸ்.. கம் இன்.. ப்ளீஸ் டேக் யுவர் சீட்...'

'தேங்க்யூ சார்...'
'குரூப் டிஸ்கஷன்ல ரொம்ப நல்லா இங்கிலீஷ்ல பேசுனீங்க... இந்த ரவுண்ட்லையும் இங்கிலீஷ்லையே பேசி உங்க இங்கிலீஷ் நாலேஜை டெஸ்ட் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. சோ.. நாம தமிழ்லையே பேசலாம்..' என்றார் ஹெச்.ஆர்.
'சரிங்க சார்...' என்றான் அன்வர்.

'உங்களோட சர்டிபிகேட் எல்லாம் பார்த்தேன்.. நல்ல மார்க் வாங்கியிருக்கீங்க...உங்களோட ப்ராஜக்ட்டும் ரொம்ப நல்லா இருந்தது. கிட்டத்தட்ட உங்களுக்கு இந்த வேலை கிடைச்ச மாதிரிதான். நீங்க எதிர்பார்க்கிற சம்பளமும் கிடைத்துவிடும்..'

'தேங்க்யூ சார்...'
'ஆனால் கம்பெனி ரூல்ஸ் படி *தாடி வைக்கக் கூடாது.* தாடியை எடுக்குறதுக்கு உங்களுக்கு ஓகேன்னா இப்பவே அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை வாங்கிக்கலாம்...' என்றார் ஹெச்.ஆர்.

'சாரி டூ ஆஸ்க்.. எதற்காக சார் தாடியை எடுக்கணும்...' என்றான் அன்வர்.
'இது கம்பெனி ரூல்ஸ்... ஏன் எதற்கு என்றெல்லாம் கேள்வி கேட்க முடியாது...'

'ரூல்ஸா இருந்தாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்குமே சார்... தாடியால என்னோட வேலை ஏதும் தடைப்படுமா..? தாடி வைக்கிறதுனால என்னோட திறமையோ, கற்கும் திறனோ குறையப் போகுதா..? ஏதாவது நியாயமான காரணம் இருந்தால்தானே எதையும் செய்ய முடியும்..?'
'ஓ.. ஓகே.. நீங்க எதற்காக தாடி வச்சுருக்கீங்க.. அதுக்கு என்ன காரணம்...?' என்று ஹெச்.ஆர் கேட்ட கேள்விக்கு,

'தாடி வைக்கிறதுனால நிறைய நன்மை இருக்குது சார்.. அதனாலதான் வச்சுருக்கேன்..' என்று பதிலளித்தான் அன்வர்.

'நன்மையா..? தாடி வைக்கிறதுனாலையா..? சும்மா ஏதாவது சொல்லணும் என்பதற்காக நன்மை அது, இதுனு சொல்லாதீங்க..' என்று நக்கலாய் சிரித்தார் ஹெச்.ஆர்.
'இல்லை சார்.. அப்படி இல்லை..'
'தெரியும் மிஸ்டர் அன்வர்.. நீங்க ஒரு முஸ்லிம், உங்களோட மத வழக்கப்படி தாடி வச்சுருக்கீங்க இதுதானே உண்மை..?'

'இஸ்லாமிய வழக்கப்படி தாடி வைக்க வேண்டும் என்று இருந்தாலும் அது ஏதோ மூட நம்பிக்கையாலோ, அர்த்தமற்றோ சொல்லப்பட்டது இல்லை சார். விஞ்ஞானப் பூர்வமாக பார்த்தால் உடல் ஆரோக்கியத்தில் தாடி முக்கியப் பங்கு வகிக்கிறது. அதன் காரணமாகத்தான் தாடி வைக்கும்படி இஸ்லாம் சொல்லுது...'
'வாட் யூ ஆர் டாக்கிங் அன்வர்.. அழகா ஷேவ் பண்ணி முகத்தை பளபளப்பா வச்சுக்காம அசிங்கமா தாடி வளர்க்கிறதுல என்ன ஆரோக்கியமான விஷயம் இருக்கு..?'

'நிறைய இருக்கு சார்.. தாடி நமது முகத்திற்கு ஒரு கவசம் மாதிரி.. தாடி வைக்கிறதுனால முகம் எப்பொழுதும் குளிர்ச்சியா இருக்கும்.. கன்னமும், தாடையும் பாதிக்காமல் தாடி பாதுகாக்குது... தாடி முகத்துல படர்ந்து இருக்குறதுனால SABACEOUS என்ற சுரப்பி சுரக்கிறது. இந்த சுரப்பி கரும் புள்ளிகள், முகப் பருக்கள் ஏற்படாமல் பாதுகாக்குது. தாடி வளர்க்கிறதுனால சூரிய ஒளிக் கற்றைகள் நேரடியாக சருமத்தை அடைவதை தடுத்து தொண்டை, பற்களின் ஈறுகள் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். பல் வலி வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஒளிக் கற்றைகள் நேரடியாக முக சருமத்தை அடையும் போது தோல் வலுவிழந்து முகத்தில் சுருக்கம் ஏற்பட ஆரம்பிக்கும். தாடி வைத்தால் சின்ன வயதிலேயே முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றம் ஏற்படாது. முக்கியமா சுவாசக் கோளாறுகள் இருக்காது. இது எல்லாமே விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைகள் சார். அதனால் தான் முஸ்லிம்கள் தாடி வைக்திறதுக்கு முக்கியத்துவம் கொடுக்குறாங்க...'

'வாவ்.. தாடி வைக்கிறதுல இவ்வளவு நல்ல விஷயம் இருக்கா.. கிரேட்.. எனக்கு எவ்வளவோ முஸ்லிம் பிரண்ட்ஸ் இருக்காங்க.. அவங்களிடம் ஏன் தாடி வைக்கிறீங்கனு கேட்டா.. சும்மா.. இஸ்லாத்துல தாடி வைக்க சொல்லீருக்கு.. அதனால வச்சுருக்கோம்னு சொல்லுவாங்க.. இந்த அளவுக்கு தாடியைப் பத்தி யாரும் விளக்கிச் சொன்னது இல்ல.. தேங்க்யூ.. எல்லாம் சரிதான்.. ஆனால் தாடி வைக்கிறது பார்க்க அசிங்கமா இருக்குமே...?'

'அது உங்களோட பாய்ண்ட் ஆஃப் வியூ சார்.. உங்களோட தனிப்பட்ட ரசனை. என்னைப் பொறுத்த வரை தாடி வைக்கிறதுதான் எனக்கு அழகா இருக்கு.. உங்களோட ரசனையும், மத்தவங்களோட ரசனையும் ஒண்ணா இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.. எப்படிப் பார்த்தாலும் உங்களோட கருத்து தவறு சார்.. ஆண்களுக்கு தாடிதான் சார் அழகு.. Robert J. Pelligrini என்ற கலிபோர்னிய யுனிவர்சிட்டி மனோதத்துவ நிபுணரின் ஆராய்ச்சியில் தாடி வைத்திருப்பவர்கள் தான் தோற்றத்தில் கம்பீரமாகவும், அழகாகவும், கவர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதாக கண்டுபிடிச்சுருக்காரு.. சொல்லப்போன நிறைய அறிஞர்களும், சாதித்தவர்களும் தாடி வச்சுருக்காங்க.. சாக்ரடீஸ், சார்லஸ் டார்வின், ஆபிரகாம் லிங்கன், தாகூர், பெரியார் இப்படி மற்ற மதத்தினரும், கடவுளே இல்லைனு சொன்னவங்களும் தாடி வச்சுருக்காங்க.. அவங்களெல்லாம் அழகா இல்லையா..? ஏதும் சாதிக்கலையா..? தாடிக்கும், மதத்திற்கும் முடிச்சு போடுவதும், தாடியை அலங்கோலமாகப் பார்ப்பதும் சரியான அணுகுமுறை இல்லை சார்.. மோர் ஓவர் தாடி வைக்கிறது என்னோட தனிப்பட்ட உரிமை.. என்னோட உரிமையை விட்டுக் கொடுத்தால்தான் இந்த வேலை எனக்குக் கிடைக்கும்னா அப்படிப்பட்ட வேலையே எனக்கு தேவையில்லை சார்..'

'எஸ்.. நவ் ஐ அக்ரி.. புரிஞ்சுக்கிட்டேன்.. தாடிக்கு பின்னால் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது இப்பதான் எனக்குத் தெரியுது. தேங்ஸ் அன்வர். உங்களோட தைரியமான பேச்சும், பரந்த அறிவும், நல்ல சிந்தனையும் தான் எங்க கம்பெனிக்குத் தேவை. வேலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, தனி மனித உரிமைதான் முக்கியம் என்று பேசிய உங்களோட மன தைரியமும், துணிச்சலும், கொள்கையும் ரொம்பப் பிடிச்சுருக்கு.. யூ ஆர் செலக்டட்.. இன்னும் ரெண்டு வாரத்தில் வேலையில் ஜாயிண்ட் பண்ணிடுங்க..'

'தேங்க் யூ சார்..' என்ற அன்வரின் முகத்தில் மகிழ்ச்சி நிரம்பியிருந்தது.
இருவரும் கைகுலுக்கி விடை பெற்றனர். வேலை கிடைத்த மகிழ்ச்சி அன்வரின் மனதிலும், தாடியே முகத்திற்கு வசீகரம் சேர்க்கிறது என்ற உண்மையைப் புரிந்து கொண்டதன் மகிழ்ச்சி ஹெச்.ஆரின் மனதிலும் நிரம்பியது.
இரண்டு வாரங்கள் கழித்து அன்வர் வேலையில் ஜாயிண்ட் பண்ண வந்த போது ஹெச்.ஆரின் முகத்தில் தாடி அரும்பத் தொடங்கியிருந்தது. 
- onthisday

Friday, March 6, 2015

விமான பைலட் உரிமம் பெற்றுள்ள முதல் இந்திய முஸ்லிம் பெண்

விமான பைலட் உரிமம் பெற்றுள்ள முதல் இந்திய முஸ்லிம் பெண். இந்த சிறகு முளை
த்த பெண்ணை வாழ்த்துவோம்...
பர்தா எங்கள் உடலுக்கு தான் சிந்தனைக்கு அல்ல என்பதை நிருபித்த சகோதரி செயிதா பாத்திமாவை வாழ்த்துவோம்.







Tuesday, November 11, 2014

மவுலானா எனும் மகத்தான இந்தியர்

4

நவீன இந்தியாவின் சிற்பிகளில் ஒருவரான மவுலானாவைப் பற்றிய நினைவுகூரல்
பிஹாரின் ராம்கர் நகரில் 1940-ல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்துப் பேசிய மவுலானா அபுல் கலாம் ஆஸாத், தனது உரையில் இப்படிக் குறிப்பிட்டார்: “நான் ஒரு முஸ்லிம். அதற்காகப் பெருமைப் படுகிறேன். 1,300 ஆண்டு பாரம்பரியமிக்க செழுமையும் புகழும் கொண்ட மார்க்கத்துக்குச் சொந்தக்காரன் நான். அதில் அணுவளவுகூடப் பங்கம் ஏற்படுவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். நான் ஒரு இந்தியன் என்பதிலும் அதே அளவு பெருமை கொள்கிறேன்.” ஆம், ஆஸாத் ஒரே நேரத்தில் உண்மையான முஸ்லிமாகவும், சிறந்த இந்தியனாகவும் விளங்கினார்.
பள்ளிப் பருவத்திலேயே அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தார் ஆஸாத். 1906-ல் டாக்காவில் நடைபெற்ற முஸ்லிம் லீக் தொடக்க மாநாட்டில் கலந்துகொண்டார். எனினும் முஸ்லிம் லீக்கின் மிதவாதப் போக்கு அவரை ஈர்க்கவில்லை. எனவே, 1907-ல் புரட்சிகரக் கட்சியில் சேர்ந்தார். இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து ஆங்கில ஆட்சிக்கு எதிராகப் போராட வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். 1913-ல் ஹிஸ்புல்லா என்ற அமைப்பைத் தொடங்கினார்.
1920-ல் மகாத்மா காந்தியைச் சந்தித்த பின்னர்தான், காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார். ஒத்துழையாமை இயக்கத்திலும், கிலாபத் இயக்கத்திலும் முகம்மது அலி ஜவுகருடன் இணைந்து செயல்பட்டார். இவ்விரு தலைவர்களும் நாட்டு மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டனர். காங்கிரஸ் இயக்கம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் ஆஸாத் பங்குகொண்டார். ஆறு முறை கைது செய்யப்பட்ட அவர், தன்னுடைய வாழ்நாளில் 10 ஆண்டுகள் 7 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தவர்.
நீதிமன்றத்தில் கர்ஜனை
1922-ல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தின்போது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் மீது அலிப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. 11.01.1922 அன்று அலிப்பூர் நீதித் துறை நடுவர் முன்னிலையில் ஆஜரான அவர், ஆக்ரோஷமான வார்த்தை களில் வாக்குமூலம் அளித்தார். ஆஸாத் பேசியதிலிருந்து சில வரிகள்:
“நீங்கள் எனக்கு உச்சபட்சத் தண்டனை அளியுங்கள். அது எவ்வளவு பெரிய தண்டனையாக இருந்தாலும் நான் பதற மாட்டேன். தீர்ப்பை எழுதும்போது உங்கள் கரங்கள் நடுங்கலாம். ஆனால், உங்கள் தீர்ப்பைச் செவிமடுக்கும்போது எனது இதயம் நடுங்காது. இது உறுதி. எனக்குக் கிடைக்கவிருப்பது சிறைக்கொட்டடி எனில், உங்களுக்கு நீதித் துறையின் உயர் பதவிகளும் மரியாதைகளும் கிடைக்கும். இதே நிலை தொடர என்னை அனுமதியுங்கள்; நீங்கள் நீதிபதியாகவும் நான் குற்றவாளி யாகவும். இந்த நிலை சில காலம் தொடரும். அதன் பிறகு நாம் மற்றொரு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவோம். அங்கே இறைவனே நீதிபதியாக வீற்றிருந்து தீர்ப்பு வழங்குவான். அதுதான் இறுதித் தீர்ப்பாகும்.” அவரது வாக்குமூலத்தைக் கேட்டு நீதித் துறை நடுவர் நடுநடுங்கிப்போனதாகக் கூறப்படுவதில் ஆச்சரியம் இல்லை.
1942-ல் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் கலந்துகொண்டதற்காகக் கைதுசெய்யப்பட்டு, அஹமத் நகர் சிறையில் அடைக்கப்பட்டார் ஆஸாத். அவருடன் நேருவும் இருந்தார். 3 ஆண்டுகள் நீடித்த இந்தச் சிறைவாசத்தின்போது அவரது மனைவி சுலைஹா பீவியும், சகோதரி ஹனீபா பேகமும் அடுத்தடுத்த ஆண்டு களில் மரணமடைந்தார்கள். இந்த இருவரின் இறுதிச் சடங்குகளிலும் கலந்துகொள்ள ஆங்கில அரசு அவருக்கு அனுமதி வழங்கவில்லை. 1945-ல் விடுதலை பெற்ற பின்னரே இருவரின் கல்லறைகளுக்கும் சென்று மலர் தூவி ஃபாத்திஹா ஓதினார் ஆஸாத்.
எழுச்சியூட்டும் எழுத்து
மேடைகளில் எழுச்சியுடன் உரையாற்றும் வல்லமை பெற்றிருந்த ஆஸாத் சிறந்த எழுத்தாளரும்கூட. ‘சமந்தார்’, ‘மதீனா’, ‘முஸ்லிம் கெஜட்’, ‘ஹம்தர்த்’ ஆகிய உருது இதழ்களில் ஆங்கில அரசின் கொள்கைகளைக் கண்டித்துக் காரசாரமாக எழுதினார். பின்னர், ‘அல்ஹிலால்’ என்ற பத்திரிகையைத் தொடங்கி, அதில் கட்டுரைகள் எழுதிவந்தார். இந்த இதழைத் தொடர்ந்து நடத்தவிடாமல் ஆங்கில அரசு அவருக்குக் கடுமையான நெருக்கடிகளைக் கொடுத்தது. பத்திரிகைக்கு அதிகப் பிணைத்தொகை செலுத்துமாறு அரசு அவருக்கு ஆணையிட்டது. இதே காலகட்டத்தில் ‘அல்பலாக்’ என்ற பெயரில் மற்றொரு பத்திரிகையையும் தொடங்கினார் ஆஸாத். அவரது எழுத்தும் பேச்சும் உணர்ச்சிபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் அமைந்திருந்தது.
பிரிவினையை ஏற்காதவர்
1940-ல் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக ஆஸாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் எம்.என்.ராய்) 1946 இறுதி வரை அப்பதவியில் இருந்தார். இறுதி வரை பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்தார். எனினும், காந்தி உள்ளிட்ட தலைவர்களால்கூடப் பிரிவினையைத் தடுக்க முடியாமல் போனபோது, செய்வதறியாது கை பிசைந்து நின்றார்.
பிரிவினைக்குப் பின்னர் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களில் முஸ்லிம்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள். நூற்றுக் கணக்கான முஸ்லிம்கள் அவரது இல்லத்திலேயே தஞ்சம் அடைந்திருந்தார்கள். அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் பட்டேல் இந்தக் கலவரங்களை ஒடுக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என ஆஸாத் கருதினார். இதுபற்றி தனது மனக்குமுறல்களை ‘இந்திய விடுதலை வெற்றி’ என்ற நூலில் பதிவுசெய்திருக்கிறார் ஆஸாத். அந்தப் புத்தகத்தின் சமர்ப்பணத்தில் இப்படி எழுதியிருப்பார்: ‘நண்பரும் தோழருமான ஜவாஹர்லால் நேரு அவர்களுக்கு’.
பாகிஸ்தான் எதிர்ப்பு
சிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞராகத் திகழ்ந்தார் ஆஸாத். ராஞ்சி சிறையில் இருந்தபோது திருக்குர்ஆனை உருது மொழியில் மொழிபெயர்த்தார். பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கையால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, ஜின்னாவின் தலைமையின் கீழ் அணி திரண்டிருந்த பெரும்பான்மையான முஸ்லிம்கள் அவரை முஸ்லிம் விரோதி எனத் தூற்றியபோதிலும் அவர் கலங்கவில்லை. தனது பாகிஸ்தான் எதிர்ப்பு நிலைப்பாட்டில் கடைசி வரை உறுதியாகவே இருந்தார்.
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற ஆஸாத், கல்வி முறையில் பல அடிப்படை சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். கிராமப்புற ஏழை மக்களுக்குக் கட்டாய இலவசக் கல்வி வழங்கிட முன்னுரிமை அளித்தார். முதியோர் கல்விக்கு வித்திட்டார்.
பல்கலைக்கழகக் கல்விக்குழு, இடைநிலைக் கல்விக் குழு, பல்கலைக்கழக மானியக்குழு, இந்திய அறிவியல் கழகம், தொழில்நுட்பக் கல்லூரிகள் ஆகியவை அவரது பதவிக் காலத்தில்தான் உருவாக்கப்பட்டன. கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றைப் பாதுகாத்து ஊக்குவிக்கும் பொருட்டு சாகித்ய அகாடமி, சங்கீத அகாடமி, லலிதகலா அகாடமி, நாடக அகாடமி ஆகிய அமைப்புகளை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார். தேசிய ஆவணக் காப்பகம் உருவாக்கப்பட்டதும் அவரது பதவிக் காலத்தில்தான்.
2.2.1958-ல் அவர் மரணமடைந்தபோது, அரசு கடனில் வாங்கிய கார் ஒன்றைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லும் படியான வேறு எந்தச் சொத்தும் அவரிடம் இல்லை. சொத்துக்கள் என்று அவர் எதையும் விட்டுச் செல்லவில்லை. வங்கிக் கணக்கு இல்லாமல், அசையும், அசையாச் சொத்துக்கள் எதுவும் இல்லாமல் ஆஸாத் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.
இந்து-முஸ்லிம் ஒற்றுமையை நிலைநாட்டுவதில் மிகுந்த அக்கறையும் கவனமும் செலுத்திவந்தவர் ஆஸாத். ‘அல்பலாக்’ இதழில் அவர் இப்படி எழுதினார்: “சுதந்திரம் கிடைப்பதற்குத் தாமதமானாலும் பரவாயில்லை. இந்தியத் தாய்க்கு ஒரு நிமிடம்கூட வேற்றுமையின் பாரத்தைத் தாங்கும் சக்தியில்லை.” சாதி, மத, இன மோதல்கள் இல்லாததும், அறிவில் உயர்ந்து விளங்குவதுமான ஒரு இந்தியாதான் ஆஸாதின் கனவு இந்தியா. அந்த இந்தியாவை நோக்கி நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஆஸாதை நாம் பெருமைப்படுத்துகிறோம்.
- சேயன் இப்ராகிம், அஞ்சல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (ஓய்வு).