Wednesday, September 28, 2011

மத்திய கிழக்கில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் இஸ்ரேல்- ஐ.நா சபையில் எர்டோகன் பேச்சு


ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2011 12:17
அடிப்புகள்: 334

turkey-pm-calls-for-pressur
  • முன்
  • 1 of 2
  • அடுத்தது
மத்திய கிழக்கில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும்காரணம் இஸ்ரேல் தான் என்று .நா சபை கூட்டத்தில்துருக்கி பிரதமர் எர்டோகன் ஆவேசமாக கூறினார்.
இஸ்ரேல்ஃபலஸ்தீன் பிரச்னையை தீர்ப்பதில் உலகநாடுகளுக்கு அக்கறை இருக்குமானால் இஸ்ரேலின்அடாஅவடிப் போக்கை இனியும் கண்டு கொள்ளாமல் இருக்ககூடாது என்று கூறினார்.
இப்பிரச்னையை தீர்க்க எடுக்கும் அனைத்து முயற்சிகளையும்அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் முறியடிப்பதாகவும் குற்றம் சாட்டினார்பலஸ்தீன்பகுதிகளில் அராஜகம் செய்வது முதல் அணு ஆயுதம் வரை உலகின் விருப்பங்களுக்குமாற்றமாக இஸ்ரேல் நடப்பதாகவும் குறை கூறினார்.
.நா சபையின் பல தீர்மானங்களை இஸ்ரேல் மதிக்காமல் மீறியுள்ளதாக குற்றம் சாட்டியஎர்டோகன் தாம் ஒரு பெட்டி தக்காளிகளை பலஸ்தீனத்துக்கு அனுப்ப வேண்டுமென்றால் கூடஇஸ்ரேலிடம் ஒப்புதல் வாங்க வேண்டுமென்பது நிச்சயம் மனிதத்தன்மையாக இருக்க முடியாதுஎன்றும் கூறினார்.

No comments:

Post a Comment