Monday, October 28, 2019

உறங்காத விழிகளாய்


சிறுவன் சுர்ஜித் என்னை மன்னித்துவிடு
என் நாட்டை டிஜிடல் இந்தியா என்றார்கள்
மேக்கின் இந்தியா என்றார்கள்
செவ்வாய்க்கு விண்கலம் அனுப்புகிறேன் என்றார்கள்
அணுகுண்டு வைத்திருக்கும் நாடு என்றார்கள்
நம்பி இருந்துவிட்டேன் என்னை மன்னித்துவிடு
சென்னை கடலில் எண்ணெயை வாளியால் அள்ளியதை
நான் மறந்து விட்டேன் என்னை மன்னித்துவிடு
நான் அப்துல் காலம் பிறந்த மண்ணை சார்ந்தவன்
என்பதை மறந்துவிட்டேன் என்னை மன்னித்துவிடு
இனி இதுபோல் தவறு நடக்காது
உறங்காத விழிகளாய் சாமானியன்

-    சாமானியன் போகலூர்

Friday, October 18, 2019

சாமானியனின் பதில்கள்


மனைவி : மச்சான் மல்லிகை கடைக்கு போனைங்களே  
கணவன் : கடையை மூடி பல வாரங்கள் ஆச்சாம்
மனைவி : என்ன மச்சான் சொல்லுரிக்க
கணவன் : நாடு போர போக்க பாத்தா பிச்சை கூட எடுக்க முடியாது                 போல
மனைவி : அப்படியா மச்சான்
கணவன் : ரேசன் கார்டு, ஆதர் கார்டு, ஒட்டைடி பத்திரமாக இருக்கா
மனைவி : மச்சான் எல்லாம் அடகுகடையில் இருக்கே
கணவன் : போச்சே நம்மை இந்தியன் இல்லைனு சொல்லிடுவன்களே
மனைவி : நல்லவேளை எனக்கு தமிழ் மட்டுமே தெரியும்.                           இல்லேன்னா  என்னை வெளிநாட்டுகாரினு சொல்லி                     இருப்பாங்க
கணவன் : அடியே இந்தி தெரியாதவர்கள் எல்லாம் வெளிநாட்டு                     காரர்கலாம்
மனைவி : நம்ம தலைவர் எங்கே சென்றலும் தமிழில் யாதும் ஊரே                 யாவரும் கேளிர் எல்லாமே சொல்லுறாரு
கணவன் : அவர் எல்லா ஊரையும் சுத்திபார்க்க வரேன்னு தமிழில்                   சொல்லுறாரு
மனைவி : தமிழ்நாடு அவ்வளவுதானா மச்சான்
கணவன் : தமிழ்நாட்டை அடகுவச்சி பல வருடங்கள் ஆய்விட்டது.
-    சாமானியன் போகலூர்

டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பால் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம் ?


    இந்தியா நாடு தற்போது பொருளாதர சரிவில் சென்று கொண்டிருக்கும் வேளையில் பல நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை குறைத்துக் கொண்டிருக்கிறது. கடந்த 45 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு வேலையின்மை கடுமையான அளவிற்கு உயர்ந்து வருகிறது. இந்தியா சந்தித்துவரும் பாதிப்புகள் தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. தமிழகத்தில் வேலைவயிப்பு அலுவலகத்தில் சுமார் 90 லட்சத்திற்கும் மேற்ப்பட்டோர் பதிந்துவைதுள்ளனர். சமிபத்தில் டி.என்.பி.எஸ்.சி 9351 இடங்களுக்கான நடத்திய குரூப் 4 தேர்வில்  20 இலட்சத்து அதிகமானோர் வின்னப்வித்திருந்தனர். தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரம்பேர் கல்வியை முடித்து வெளிவருகின்றனர். தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு  வேலையின்மைனரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது .
     டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, தேர்வில் புதிய பாடதிடத்தின் படி முதல் நிலைத்தேர்வில் மொழித்தாள் நீக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.  டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, பிரிவுக்கான தேர்வில் தமிழ்தாள் (மொழியறிவு) மற்றும் ஆங்கலம்தாள் (மொழியறிவு) கேள்விகளை நீக்கிவிட்டு தமிழ் சமுகத்தின் வரலாறு, அகல்வரயிச்சிகளின் கண்டுபிடிப்பு, சங்ககாலம் வரையிலான தமிழ் இலக்கியம் மற்றும் திருக்குறளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக அறிவித்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, மொழித்தாள் நீக்கப்படுள்ளத்தால் தேர்வில் வினாக்கள் பொதுஅறிவு வகையில் கேள்விகள் கேட்கப்படும் வயிப்புள்ளது. அணைத்து வினாக்களும் தமிழ் மற்றும் ஆங்கலத்தில் இருக்கும். டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, பிரிவுக்கான தேர்வில் புதிய பாடத்திட்டத்தில் படி உள்ள அணைத்து கேள்விகுக்கும் ஆங்கிலத்தில் படித்து தேர்ச்சிபெறலாம். தமிழ்தாள் இருந்த மொழியறிவு மற்றும் இலக்கணம் சார்ந்தவை. தமிழ் இலக்கணத்தில் கேட்கப்படும் கேள்விகவிகளுக்கு    தமிழை தாய் மொழியாக கொண்டவர்களால் மட்டுமே தேர்ச்சி பெறமுடியும் மாறாக தற்போது அறிப்பானது வெளிமாநில சார்ந்த நபர்களை தமிழக அரசு வேலைக்கு அமர்த்த வழிவகைக்கும் அதற்க்கு முன்னோட்டமாக தமிழக அதிமுக அரசால் 2016 ஆண்டு தமிழ்நட்டை சாராத நபர்கள் தமிழக அரசு வேளைகளில் சேரலாம் என்று அறிவித்தது. 2016 ஆண்டிற்கு முன் தமிழக அரசால் நடத்தப்படும் நிறுவனங்களுக்கு வேலைவாயிப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் அரசு வேலை என்று இருந்ததை தமிழக அதிமுக அரசு ரத்து செய்து. வெளிமாநில சார்ந்த நபர்கள் தமிழக அரசால் நடத்தப்படும் தேர்வு எழுத வகை செய்யப்பட்டது.
2014 இல் மத்தில் ஆட்சியில் அமர்ந்த பா.ஜா.க. தமிழகத்தை மற்றான்தாய் மனப்பன்பையுடன் நடத்தி வாருகிறது. ஒரு மாநிலம் சார்ந்த மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாயிப்பில் அந்தந்த மாநில மொழி பேசுபவர்களுக்கு அதிக முன்னுரிமைகள் அளிக்கப்படவேண்டும் என்ற விதி இருக்கிறது. ஆனால்  மோடி தலைமையில் ஆனால் மத்திய அரசு அமைந்தலிருந்து மத்திய அரசு பணிகளுக்கு ஆங்கிலம் மற்றும் இந்தியில் தான் தேர்வு எழுதவேண்டும் என்று தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. இந்தி மொழியை தாய் மொழியாக கொண்ட வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் எளிதில் வெற்றி பெறுகிறார்கள் இதனால் தமிழகத்தில் மத்திய அரசு வேளைகளில் வடமநிலத்வர்கள் அதிகள் சேர்கிறார்கள்.
தமிழகத்தில் மத்திய அரசின் கீழ் உள்ள தபால்துறை, ரயில்வே துறை, வங்கிகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சமுக செயல்பட்டார்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்திய அரசின் தமிழகதிற்கு எதிரான நிலைபாட்டை எதிர்த்து போரடிகொண்டிருக்கிரர்கள். ஆனால் தமிழக மக்களுக்கு எதிராக மத்திய மோடி அரசு கொண்டுவரும் அனைத்து திட்டங்களுக்கும் தனது ஆதரவை வளங்கிகொண்டிருக்கிறது தமிழக அதிமுக அரசு. நீட் தேர்வு, 8 வழிசளைகயாக இருக்கட்டும், புதிய கல்வி கொள்கை, இந்தி திணிப்பு போன்ற திட்டங்களை எந்த எதிர்ப்பு தெரிவிக்காமல் செயல்படுத்துகிறது அதிமுக அரசு.
    1965 இல் மத்திய அரசு தமிழத்தில் இந்தி மொழியை திணிக்க முனைந்தார்கள் முடையவிலை. பல வழிகளிலும் இந்தியை திணிக்க முனைந்தார்கள் தமிழகத்தில் எதிர்த்தது. புதிய யுக்திகை பயன் படுத்தி தமிழ் மொழியை அழிக்க முயல்கிறார்கள். தமிழை வளர்க்கிறோம் என்பது, எங்கு சென்றலும் திருக்குறள் குறுவது அனால் தமிழ் மக்களுக்கு எதிரான  மக்கள் திட்டங்களை கொண்டுவருவது, ஒரு மொழியின்  இலக்கணம்(மொழியறிவு) இருக்கும்வரை அந்த மொழியை அழிக்க முடியாது. இந்தியாவில் நடந்த மக்கள் எழுச்சி போராட்டங்களின் முன்னோடி தமிழகம் என்பதை இந்த ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ளவேண்டும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, தேர்வில் புதிய பாடதிடத்தின் படி முதல் நிலைத்தேர்வில் மொழித்தாள் நீக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பை திரும்ப பெறவேண்டும் என்பதே தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் கல்வியாளர்கள் வேண்டுகோளாக உள்ளது.
  
                                                                                                                           -  சாமானியன்
                                                                                                                                  போகலூர்