Wednesday, April 20, 2022

பாவடி (பாவோடி)

பாவடி என்றவுடன் நமது ஊர் பெரியவர்கள் பசங்கள் எங்கே என்று கேட்டால்  பாவடியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறுவார்கள். 

 நாம் என்றாவது  பாவடி என்றால் என்ன கேள்வி கேட்டது உண்டா. அதற்கு பின்னாடி ஒரு வரலாற்று நிகழ்வு உள்ளது.  1900  காலகட்டத்திற்க்கு முன் அனைத்து  வியாபார தொழிலில்களையும் முஸ்லிம்கள்தான் செய்து கொண்டிருந்தார்கள். அதில் ஒன்றுதான் நெசவுத்தொழில்.  இன்று பனியன்  ஆடை தொழிலை உலகத்துக்கு ஏற்றுமதி செய்யும் திருப்பூர் அதன் முன்னோடிகள் முஸ்லிம்கள்தான். அவர்கள்தான் வெளிநாட்டிலிருந்து இயந்திரங்களை வரவைத்து நவீன முறையில் நெசவு தொழிலை செய்து கொண்டிருப்பது  அனைவரும்  அறிந்த உண்மை.

 எழுத்தாளர் டாக்டர் S.M. கமால் எழுதிய  முஸ்லிம்களும் தமிழகமும் என்ற நூலில் நமது ஊர் போகலூர் இல் 50 தறிகள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். நமது ஊர் முஸ்லிம்கள் நெசவுத் தொழிலை செய்தார்கள் என்ற குறிப்புகளை அடிக்கோடிட்டு எழுதியுள்ளார். அதில் எந்த ஊர்களில் பாவடி என்ற தெரு இருக்கிறதோ அந்த ஊரில் நெசவுத்தொழில் இருந்தது என்று ஆதாரமாக கூறுகிறார். அதற்கு அவர் கூறும் காரணம் பாவடி என்கின்ற தெருதான்.   

 பாவடி என்றால்  நூலுக்கு சாயம் இட்டு  காயவைக்கும் இடம். அந்த இடம் அகலமாகவும் ரொம்ப நீளமாகவும் இருக்கும். நாம் எமனேஸ்வரம் ஊர் சென்று இருந்தால் அங்கே சாயமிடும் காட்சிகளே நாம் காண வாய்ப்புகள் அதிகம் உண்டு.  நெசவு பணியில் இன்னும் நடைபெற்று கொண்டு இருக்கிறது.  அதில் ஒன்றுதான் நாம் புதிய பள்ளிக்கூடத்திற்கு முன்னாடி உள்ள தெரு அகலமாகவும் நீளமாகவும் உள்ளது அதற்கே தான் பாவடி தெரு நமது சிறுவயதிலிருந்து நம்முடன் தொடர்புடைய இந்த பாவடி தெருவை நாம் அதன் பழமை மாறாமல்  பாதுகாப்பது நமது கடமை.


நமது நிருபர் 

சாமானியன்

போகலூர்

நமது பள்ளிக்கூடம்

 நமது பள்ளிக்கூடம் நூருல்லா முஸ்லிம் தொடக்கப்பள்ளி. சுதந்திரம் அடைவதற்கு முன்பே 1938 இல் கல்வியின் மீது பற்றும் சமுதாயம் நலன் கொண்ட மக்களால் ஆரம்பிக்கப்பட்டது. 

பள்ளிக்கூடம்  கட்ட இடம் கொடுத்தவர்களுக்கு நினைவாக அவர்கள் பெயரான நூருல்லா என்ற பெயரை நமது பள்ளிக்கு நூருல்லா முஸ்லிம் தொடக்கப்பள்ளி என்று பெயர் வரக் காரணமாக அமைந்தது.

 நமது பள்ளிக்கூடத்து பின் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள்.  ராமநாதபுரத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் செய்யதம்மாள் உயர்நிலைப்பள்ளி  1965 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஹைரத்துல்  ஜமாலியா உயர்நிலைப்பள்ளி பரமக்குடி 1981 துவங்கப்பட்டது.

 நமது பள்ளிக்கூடம் ஆரம்பகாலத்தில் மண் சுவர்   கட்டடத்தில் இயங்கியது. மக்களின் தொடர் முயற்சியாலும் கடும் உழைப்பாலும் செங்கல் கற்களால்  கட்டப்பட்ட ஓட்டு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. தற்போது பள்ளிவாசலுக்கு பக்கத்தில் உள்ள ஓட்டு கட்டடத்தில் இயங்கி கொண்டிருக்கிறது. நமது நூருல்லா முஸ்லிம் பள்ளிக்கூடம்  மக்களின்  தொடர் முயற்சியால் காங்கிரீட் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. புதிய பள்ளி கட்டிடத்திற்கு கூடிய விரைவில் மாற்றப்பட உள்ளது.

 நமது பள்ளிக்கூடத்தின் படித்த பல நூறு மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் பல துறைகளில் முன்னேறி உள்ளனர். குறிப்பாக டாக்டர்,  இன்ஜினியர், அரசுத் துறைகள் மற்றும் பல துறைகளில் தங்களை பங்களிப்பை சிறப்பாக ஆற்றுகிறார்கள். இப்படிப்பட்ட சாதனையாளர்கள்  உருவாக காரணமாக இருந்தது நமது நூருல்லா முஸ்லிம்  தொடக்கப்பள்ளி தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

 நமது வாழ்க்கையில் பள்ளி வாழ்க்கை என்பது ஒரு இனிமையான காலம் அதில் ஆரம்பப்பள்ளி என்பது தனிச்சிறப்பு அப்படிப்பட்ட சிறப்பு சொந்தமான இருக்கக்கூடிய நமது நூருல்லா முஸ்லிம் தொடக்கப்பள்ளி நாம் என்றும் நினைவில் வைத்திருப்பதுடன். நாம் இன்று இருக்கும் உயர்ந்த அந்தஸ்துக்கு அடிப்படை காரணமாக இருந்த நமது நூருல்லா முஸ்லிம் தொடக்கப் பள்ளிக்கு நாம் ஆற்றிய பங்களிப்பு என்ன என்ற கேள்விக்கு பதிலளிக்க  கடமைப்பட்டுள்ளோம்.

2013 ஆம் ஆண்டு 75 ஆண்டுகள் நிறைவு பெற்றது. அந்த ஆண்டே நாம் நூருல்லா முஸ்லிம் தொடக்கப்பள்ளியில் பவள விழா  கொண்டாடி இருக்க  வேண்டும். என்ன காரணங்கள் நம்மை பவள விழா கொண்டாடுவதை தடுத்தது என்று ஆயிரம் கேள்விகள் எழும். நடந்தவை நல்லவையாக இருக்கட்டும். நமது நூருல்லா முஸ்லிம் தொடக்கப்பள்ளியில் நூற்றாண்டு விழா சிறப்பாக நடத்த அனைத்து முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உறுதியேற்போம்.


  நமது வீட்டை நாம் எப்படி பராமரிப்போம் அதே போன்று நமக்கு கல்வி தந்த நமது பள்ளிக்கூடத்தையும் பராமரிக்கும் பொறுப்பு அங்கு படித்த ஒவ்வொரு மாணவருக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும்  கடமை என்பதை நாம் உணர வேண்டும். நாம் இந்த பள்ளிக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்னென்ன என்பதை நம் கண்முன் நிறுத்தி  பார்க்க வேண்டும். மற்றவர்களை குறை சொல்வதை விட்டுவிட்டு இது எனது பள்ளி எனது கடமை என்ற எண்ணத்துடன் செயல்படும் ஒவ்வொரு முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்  கடமையாகும்.

ஆரம்பம் சரியாக இருந்தால் அனைத்தும் சரியாக இருக்கும். ஒருவரின் ஆரம்பக்கல்வி சரியாக இருந்தால் அவருடைய வாழ்க்கை சிறப்பாகவே அமையும். நமக்கும் நமது பிள்ளைகளுக்கும் கல்வி தந்த நூருல்லா தொடக்கப் பள்ளிக்கு நாம் என்றும் கடமைப்பட்டிருக்கின்றோம் .


நமதுநிருபர்

சாமானியன்

போகலூர்

போகலூர்

 இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் தான் போகலூர். இதன் பெயர் புகலூர் என்ற பெயரிலிருந்து மருவி போகலூர் ஆகியது. 

தென்தமிழ்நாட்டின் பிரிக்கப்படாத பழைய இராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும்பகுதியை ஆண்டவர்கள் சேதுபதிகள். இவர்கள் கி.பி 1501 முதல் இந்தியா விடுதலை பெற்ற காலம் வரை இப்பகுதியின் ஆட்சியாளர்களாகத் திகழ்ந்துள்ளனர். வங்கக்கடற்கரையின் அதிபதியாய் முதலில் புகலூரையும் (போகலூர்) பின்பு இராமநாதபுரத்தையும் தங்கள் தலைநகரமாக கொண்டு ஆட்சி நடத்தியள்ளனர்.

சேதுபதி மன்னர்கள்  கி.பி.1501 முதல் கி.பி.1710 வரை சமார் 210 வருடங்கள்  போகலூரை தலைநகராக கொண்டு ஆட்சிபுரிந்துள்ளனர்.இன்றும் சேதுபதி மன்னர்  அரண்மனையின் சிதிலமடைந்த சுவர்கள்  போகலூரில் காணப்படுகின்றன. 

போகலூர் பரமக்குடி சட்டமன்றத் தொகுதிக்கும் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 9221 ஆகும். இவர்களில் பெண்கள் 4475 பேரும் ஆண்கள் 4746 பேரும் உள்ளனர்.

போகலூர் கிராமம் என்ற முறையில் இருந்தாலும் இன்று 

அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,

அரசு சித்த மருத்துவமையம், 

அரசு கால்நடை மருந்தகம், 


ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, 

நூருல்லா முஸ்லிம் தொடக்கப்பள்ளி


அரசு அலுவலகங்கள்

ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.

வருவாய் ஆய்வாளர் அலுவலகம்

கிராம அலுவலர், ஊராட்சி மன்ற அலுவலகங்கள்,

நூலகம் போன்றவை இந்த ஊரின் சிறப்புகளை பறைசாற்றுகின்றன.

இந்திய தேசம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் இரு வழிச்சாலைக்கு சுங்கச்சாவடி இருப்பது என்றால் அது நமது போகலூரில் உள்ள சுங்கச்சாவடி தான் இந்த சிறப்பு அமையும்.

இவ்வளவு  வரலாற்றுக்கு சொந்தமான நமது போகலூர் கூடிய விரைவில் பேரூராட்சி அந்தஸ்தை பெறும் என்பதை நாம் அனைவரும்  எதிர்பார்ப்பாக உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்கள் மக்கள்  நகரங்களை நோக்கி பயணிக்கிறார்கள். இதில் விதிவிலக்காக நமது போகலூர் மற்ற கிராமங்களைப் போலில்லாமல்    மக்கள் தொகையை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. நமது ஊரில் இருந்து அனைத்து நகரங்களுக்கும் வாகனம் வழியாக பேருந்து வழியாக எந்த நேரத்திலும்  செல்ல முடியும். கிராமம் என்ற முறையில் இருந்தாலும் போக்குவரத்து முறையில் மற்ற நகரங்களுக்கு சமமாக போக்குவரத்து வசதி பெற்றுள்ளது.


நமது ஊரில் சேதுபதி மன்னரின் நினைவாக ஒரு அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும் என்பது இந்த ஊர் மக்களின் ஆவலாக உள்ளது.

நமது கோரிக்கையை ஆட்சியாளர்கள் நிறைவேற்றுவார் என்று நாம் எதிர் பார்ப்போம்.


நமது நிருபர்

சாமானியன்

போகலூர்.