Tuesday, January 31, 2012

Satraps eye easy pickings in Goa


PANAJI: What is it that is getting regional satraps such as Mulayam Singh Yadav's Samajwadi Party (SP), Sharad Yadav's Janata Dal (U) (JD-U), Ram Vilas Paswan's Lok Janshakti Party (LJP), Mamata Banerjee's Trinamool Congress (TC) and the Socialist Democratic Party of India (SDI) backed by the Popular Front of India (PFI), a confederation of Muslim organizations, to field candidates for the Goa assembly elections?
The first to announce that her party will contest the Goa elections was of course Mamata Didi's TC, with the induction of former chief minister and veteran leader Wilfred de Souza as state unit president. Soon, one following the other, parties have pitch-forked to seek a pie in the 40-seat assembly and are desperately searching for candidates to field.
Most of these perhaps want to cash in on the anti-Congress feeling building up in the Goan electorate's mind. Issues such as the controversial Regional Plan 2021, illegal mining, deep-rooted corruption, ineffective governance, infighting amongst Congressmen have reached a crescendo. This will be their best chance to register percentages to their vote bank, if not win an odd seat here.
With the BJP tying up with the Maharashtrawadi Gomantak Party (MGP)-the local regional force-this is the best chance for the alliance to come to power. In the 2007 elections, BJP won 14 seats and the MGP won two seats, when the parties had contested separately. The MGP went on to align with the Congress-NCP alliance, enabling them to come to power with the tally of the Congress-led alliance going up to 21.
The Goan electorate probably for the first time ever will have a bouquet of options when they stand before the electronic voting machine (EVM) on March 3. This time around, the non-Goan regional satraps may eat into the vote bank of the Congress-led alliance, say political analysts.
However, there is always a surprise element that is possible in Goa, since in many seats, individual players matter more than the party.
SP says it will take up Goa's land issues. "Goa is a small place. Its size is not even half that of a district in Maharashtra, Karnataka and Uttar Pradesh. The land of Goa is being destroyed at a fast pace. Our hills are being cut, beaches are disappearing. Soon, there will be nothing left. What have the Congress, NCP and BJP done for Goa-nothing. SP will contest 10 seats and bring about a change in Goa," said state unit president Rohidas Shirodkar.
Asked if it was not too late for the party to make an impact on the political scene, Shirodkar replied, "Yes, we have started late. But, we want to get a feel of the electorate. We are confident that we can challenge the existing political set up."
TC says it will contest all 40 seats in the Goa assembly. De Souza said the reason for bringing the regional political outfit to Goa is because of the Congress' mishandling of Goan issues. "They are killing the environment; the way they are handling the mining scam and even the regional plan," de Souza said.
JD(U) says it has come to bring in change in Goa as the ruling dispensation and the opposition "failed miserably" in the state, which is being run by the real estate lobby and where rampant looting through mining is being carried out.
JD(U) plans to contest 10 seats. "We promise Goa and Goans a change. Whether we win or not, we will continue to fight for social issues in Goa. Our first issue is illegal mining, second is RP 2021 and third is special status for Goa-not in terms of an economic package but in terms of saving Goan land that is now being sold to non-Goans. We have 20 Members of Parliament at the centre so we will fight for a special package for Goa," said state unit president John Phillip Pereira.
SDPI is in the process of finalizing its candidates from the minority communities including the scheduled castes, tribes and dalits, sources said. "SDPI will field candidates in seven or eight constituencies. We want to bring in positive politics in the electoral system. No money or muscle power will be used in our campaign for the election," said state unit president Zia Rickarty.
LJP says it is ready to contest all 40 constituencies in Goa. The party's Gujarat unit president and Goa desk in-charge Mukesh Gujjar said, "The political situation in Goa is fragile. The government doesn't know to run the administration. Chief minister Digambar Kamat is incompetent." The party's candidates will be from a local outfit Gomantak Bahujan Samaj Parishad working for the backward class, SC/ST/OBC and minority communities.
Thanks the times of india mobile

Monday, January 30, 2012

முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும்: சி.பி.எம் !


புதுடெல்லி:நீதிபதி ரங்கநாத் மிஷ்ரா தலைமையிலான மொழி-மத சிறுபான்மையினருக்கான் தேசிய கமிஷனின் சிபாரிசின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு நகல் தீர்மானம் வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில் இந்திய 20-வது மாநாடு

ஆர் ஸ் ஸ் பயங்கரவாதி கோட்சேவை மடக்கி பிடித்த வீரரின் குடும்பம் வறுமையில் !

நாட்டின் தேசத்தந்தை மகாத்மா காந்தியை இதே நாளில் சுட்டுக்கொன்ற ஆர் ஸ் ஸ் பயங்கரவாதி   நாதுராம் கோட்சேவை தீரமுடன் மடக்கிப் பிடித்த ஒரு வீரரின் குடும்பம் இன்று வரை வறுமையால் தீரா சோகத்தில் மூழ்கிக் கிடக்கிறது. 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30-ந் தேதி மகாத்மா காந்தியை டெல்லி பிர்லா மாளிகையில் ஆர் ஸ் ஸ்  பயங்கரவாதி   நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றான். காந்தியை படுகொலை செய்துவிட்டு தப்பியோட முயன்ற கோட்சேவை தீரமுடன் மடக்கிப் பிடித்த வீரரின் பெயர் தேவ் ராஜ் சிங் தாகூர்.

நரேந்திர மோடியை இலங்கைக்கு அழைக்கிறார் ரணில்



எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றபோது, குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியையும் சந்தித்தார்.
அதிகாரப் பகிர்வு, இனப்பிரச்சினை தீர்வு பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வு வழங்குவது தொடர்பான தனது நிலைப்பாட்டைத் தெரிவித்தால், ஐ.தே.க.வும் அதன் நிலைப்பாட்டை முன்வைக்க முடியும் என விக்கிரமசிங்க தெரிவித்தார்.
புடவைக் கைத்தொழில், சுற்றுலாத்துறை என்பவற்றில் இணைந்து செயற்படும் சாத்தியம் குறித்து, முதலமைச்சர் நரேந்திர மோடியுடன் ரணில் ஆராய்ந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குஜராத்தின் அபிவிருத்தியினால் கவரப்பட்ட ரணில், அவரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அபிவிருத்தியும் அரசியலும் என்ற தலைப்பில், ஜயவர்தன பொருளாதார அரசியல் அகடமியில் உரையாற்றுமாறு ரணில் அவரை வேண்டியும் உள்ளார்.
நரோந்திர மோடி குஜராத் முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலையின் முக்கிய பங்காளியாக அறியப்பட்டவர். அவர் இந்திய முஸ்லிம்களின் பரம வைரிகளுள் ஒருவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
நன்றி மீள்பார்வை 

எண்ணெய்க்கு தடை: மனரீதியான போர் – ஈரான்

IRAN
டெஹ்ரான்:ஈரான் மீது ஐரோப்பிய யூனியன் நாடுகள் அறிவித்துள்ள புதிய எண்ணெய் தடை மன ரீதியான போர் என ஈரான் அறிவித்துள்ளது.
ப்ரஸ்ஸல்ஸில் திங்கள் கிழமை நடந்த ஐரோப்பிய யூனியனின் கூட்டத்தில் ஈரான் மீது புதிய எண்ணெய் தடை பிரகடனப்படுத்தப்பட்டது. ஈரானில் இருந்து 20 சதவீத எண்ணெயை ஐரோப்பிய நாடுகள் இறக்குமதிச் செய்கின்றன. சர்வதேச அழுத்தத்தை புறக்கணித்து அணு சக்தி திட்டத்தில் உறுதியாக இருக்கும் ஈரான் தங்கள் வழிக்கு கொண்டுவர புதிய தடையை ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ளன. எண்ணெய் தடையுடன் வங்கித்துறையிலும் கடுமையான தடைக்கு ஐரோப்பிய யூனியன் தீர்மானித்துள்ளது.
இதுக்குறித்து ஈரானின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மெஹ்மான் பெரஸ்த் கூறியது: ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு அடிபணிந்துள்ளன. ஈரானுக்கு நிர்பந்தம் அளிக்கவும், அச்சுறுத்தவும் தடையை ஏற்படுத்திய செயல் அநீதமானது. தடை ஏற்படுத்தும் சவால்களை எதிர்கொள்ள ஈரான் தயார். ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் அடிமைத்தனத்தில் இருந்து வெளியே வரவேண்டும். ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு கட்டுப்படாமல் சொந்தமாக முடிவு எடுக்கவேண்டும். அமெரிக்காவின் விருப்பத்திற்கு இணங்க ஈரானின் எரிசக்தி சந்தையில் இருந்து விலகுபவர்களுக்கு தாமதம் இன்றி பதில் ஆட்கள் வருவதை காண்பதற்கான வாய்ப்பு ஈரானுக்கு உருவாகும் என்று பெரஸ்த் கூறினார்.
அதேவேளையில் ஈரான் மீது தடையை ஏற்படுத்தியதற்கு ஐரோப்பிய யூனியனுக்கு ஒபாமா நன்றி தெரிவித்தார். ஈரானின் அணு சக்தி திட்டம் எழுப்பும் சவால்களை தடுக்க கூடுதல் வலுவான தடைக்கு தயாராகவேண்டும் என ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார். ஈரானின் பொதுத்துறை வங்கிகளான தெஜராத் வங்கி, ட்ரேட் காபிட்டல் வங்கி ஆகியவற்றின் மீது கடுமையான தடையை விதிக்கவேண்டும் என ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.
ஈரானிடமிருந்து அதிக அளவிலான எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகளான இத்தாலி, க்ரீஸ், ஸ்பெயின் ஆகியவற்றின் பொருளாதார நிலையை இத்தடை பெரிதும் பாதிக்கும் என அல்ஜஸீராவின் செய்தியாளர் நிக் ஸ்பைஸர் கூறுகிறார்.
நன்றி தூது ஆன்லைன் 

ஹோர்முஸ் ஜலசந்தியை மூடினால் எண்ணெய்விலை உயரும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை

Hormuz
வாஷிங்டன்:ஈரான் அரசு ஹோர்முஸ் ஜலசந்தியை மூடினால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் என்று சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்.) எச்சரித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 30 அமெரிக்க டாலருக்கும் (ரூ.1500) அதிகமாக உயரும் என்று ஐ.எம்.எப். வியாழக்கிழமை தெரிவித்தது.
இந்தப் பிரச்னை ஏற்கெனவே சுணக்கம் அடைந்துள்ள சர்வதேச பொருளாதாரத்துக்கு ஒரு ஆபத்தாக உருவெடுத்துள்ளது என்று ஐ.எம்.எப். ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
ஈரானின் அணு திட்டங்களை காரணம் காட்டி, அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க மேற்கத்திய நாடுகள் திட்டமிடுகின்றன. அவ்வாறு தடை விதிக்கப்பட்டால் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. இதனால் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் நாளொன்றுக்கு 15 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்கிறது. இந்நிலையில் தேவையான மாற்று ஏற்பாடு இல்லாமல் அந்நாட்டின் மீது தடைவிதித்தால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 20-30 சதவீதம் உயரும் என்று ஐ.எம்.எப். கூறியுள்ளது.
மேலும், ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால், அது வளைகுடா பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளின் எண்ணெய் ஏற்றுமதிக்கும் பிரச்னையை ஏற்படுத்தும் என்றும் ஐ.எம்.எப். தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தி எண்ணெய் வளம்மிக்க வளைகுடா பகுதியை, அரபிக் கடலுடன் இணைக்கிறது. இந்த வழியாகத்தான் உலகின் 40 சதவீத எண்ணெய் வர்த்தகப் போக்குவரத்து நடைபெறுகிறது. ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப் போவதில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் இந்த வாரம் முடிவெடுத்துள்ளது. இதனால் ஈரானின் 6 லட்சம் பீப்பாய் எண்ணெய் வர்த்தகம் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்தியா, சீனா போன்ற நாடுகளும் ஈரானிடம் எண்ணெய் வாங்கக் கூடாது என்று மேற்கத்திய நாடுகள் நிர்பந்தித்தால் நிலைமை இன்னும் மோசமடையும். அதை ஈடுசெய்ய சவூதி அரேபியா தனது உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. எனினும் ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால் சவுதியின் வர்த்தகமும் பாதிக்கப்படும் என்று ஐ.எம்.எப். கூறுகிறது.
மாற்றுப் பாதையை பயன்படுத்தினாலும் அதில் சொற்பமான அளவுக்கே போக்குவரத்து நடைபெற முடியும். மேலும் அதை அமல்படுத்த காலதாமதமாகும். இதனால் போக்குவரத்து செலவு உயரும் என்று ஐ.எம்.எப். தெரிவித்துள்ளது.
நன்றி தூது ஆன்லைன் 

நெதர்லாந்தில் நிகாபிற்கு தடை

நெதர்லாந்தில் நிகாபிற்கு தடை
ஆம்ஸ்டர்டாம்:பிரான்சிற்கு அடுத்து ஐரோப்பிய நாடான நெதர்லாந்தும் முஸ்லிம் பெண்கள் தங்களது கண்ணியத்திற்காக முகத்தை மறைக்கும் நிகாபை அணிவதற்கான தடையை அமுல்படுத்தப் போகிறது. அடுத்த ஆண்டு முதல் தடை
அமுல்படுத்தப்படும் என்பது அரசின் முடிவாகும்.
முகத்தை மறைக்கும் விதமான ஆடைகளை அணிவதை தடுக்கும் சட்டம் பொது இடங்களில் ஹெல்மட் அணிவதையும் தடுக்கும் என துணை பிரதமர் மாக்ஸிம் வெர்ஹாகன் கூறியுள்ளார்.
முகத்தை மறைக்க தடை விதிக்கும் சட்டத்தை மீறுபவர்கள் 510 டாலர்கள் அபராத தொகையை செலுத்த இந்த சட்டம் கூறுகிறது. ஒரு கோடியே 70 லட்சம் மக்கள் தொகையை கொண்ட நெதர்லாந்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 10 லட்சம் ஆகும். ஆனால் இவர்களில் முகத்தை மறைக்கும் ஆடையை(நிகாப்) அணிபவர்கள் வெறும் 400 பேர் மட்டுமே.
பாராளுமன்றத்தில் அரசுக்கு ஆதரவு அளித்துவரும் முஸ்லிம் எதிர்ப்பு கட்சியான ஃப்ரீடம் கட்சியின் வற்புறுத்தலே முஸ்லிம் பெண்கள் நிகாபை அணிவதற்கான தடைக்கு முக்கிய காரணமாகும்.
நன்றி தூது ஆன்லைன் 

தடைக்கு பதில் தடை: ஈரான்

A handout picture obtained from the Iranian president's office shows Iranian President Mahmoud Ahmadinejad
டெஹ்ரான்:ஐரோப்பிய யூனியனின் தடைக்கு பதிலாக தடை விதிப்போம் என ஈரான் எச்சரித்துள்ளது.
அணுசக்தி திட்டத்தை ஈரான் கைவிடாததை கண்டித்து ஈரானில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதிச் செய்வதை வருகிற ஜூலை மாதத்தில் பெருமளவில் குறைக்க ஐரோப்பிய யூனியன் தீர்மானித்தது.
இதற்கு பதிலடியாக ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு கச்சா எண்ணெயை வழங்குவதை முற்றிலும் நிறுத்தும் நடவடிக்கையை உடனடியாக அமுல்படுத்த தயங்கமாட்டோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று நடைபெறும் பாராளுமன்ற கூட்டத்தில் இவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படும் என ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய யூனியனின் தடையின் காரணமாக அதிகமான இழப்பு ஐரோப்பிய நாடுகளுக்குதான் ஏற்படும் என ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் தெரிவித்துள்ளார்.
நன்றி தூது ஆன்லைன் 

காலித் மிஷ்அல் பதவி விலகலாம்?



Khaled-Meshaal
ஹமாஸின் அரசியல் பிரிவுத் தலைவரான காலித் மிஷ்அல் அந்தப் பொறுப்பிலிருந்து விலகலாம் என்ற செய்திகள் வெளிவந்துள்ளன. இவ்வருடம் ஹமாஸ் அமைப்பின் உள்ளே புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இந்நிலையில் இந்த செய்தியை முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை. இது ஊகமாகக் கூட இருக்கலாம்.

புதிய தலைமை ஒன்று வரவேண்டும் என்பதற்காகவே அவர் விலக நாடியுள்ளார் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இறுதி முடிவை ஹமாஸின் மத்திய ஷூறா சபையே மேற்கொள்ளும் என ஹமாஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மிஷ்அல் 1996 இல் ஹமாஸின் அரசியல் பிரிவுத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஜோர்தானில் இருந்த அவர், பின்னர் சிரிய தலைநகரான டமஸ்கஸிற்கு இடம்பெயர்ந்தார்.
சில வாரங்களுக்கு முன்னர், ஹமாஸ் புதிய மூல உபாயமொன்றை மேற்கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக் காட்டினார். அறபுப் புரட்சியின் பின்னர் இஸ்லாமியவாதிகள் தேர்தலில் பெற்றுவரும் வெற்றிகள் காரணமாக, ஆயுதப் போராட்டத்தைவிட அரசியல் போராட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதே காலப் பொருத்தமானது என்பது அவரது கருத்து.
சிரிய அரசாங்கத்தின் கெடுபிடிகளுக்கு ஹமாஸ் ஆதரவளிக்க மறுத்துவருகின்றது. காலித் மிஷ்அலின் குடும்பம் சிரியாவிலிருந்து தற்போது ஜோர்டானின் தலைநகரான அம்மானுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஹமாஸின் பிரதித் தலைவரான மூஸா அபூ மர்ஸூக் கெய்ரோவுக்கு இடம் மாறியுள்ளார். மிஷ்அலுக்கு முன்னர் அபூ மர்ஸூக்கே அரசியல் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கெய்ரோவில் அலுவலகம் ஒன்றைத் திறப்பதற்கு ஹமாஸ் முயன்று வருகிறது.
காலித் மிஷ்அலை இஸ்ரேலியப் படையினர் அம்மானில் வைத்து கொலை செய்ய முயன்றனர். அதில் அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். அப்போதைய ஜோர்தான் மன்னர் ஹுஸைன் அவர் மீது ஏற்றப்பட்ட நச்சு திரவத்திற்கு மாற்று மருந்தை வழங்கவேண்டும் என இஸ்ரேலை நிர்ப்பந்தித்திருந்தார். இஸ்ரேல் பின்னர் இதற்காக மன்னிப்புக் கோரியது.
இதேவேளை காலித் மிஷ்அல் கட்டார் நாட்டு முடிக்குரிய இளவரசர் ஷெய்க் ஹமத் பின் தமீம் அல்தானியுடன் ஜோர்தானுக்கு செல்லவுள்ளார். 1999 இல் அந்நாட்டிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டதன் பின்னர், அங்கு செல்லும் முதல் பயணம் இதுவாகும்.
நன்றி மீள்பார்வை 

பலஸ்தீன சபாநாயகர் அஸீஸ் துவைக் கைது


aziz-dweik
பலஸ்தீன சட்டசபையின் சபாநாயகரான ஹமாஸின் சிரேஷ்ட தலைவர் கலாநிதி அஸீஸ் துவைக் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்குக் கரையில் உள்ள ரமல்லா நகரில் வைத்தே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

இஸ்ரேலிய இராணுவ நீதிமன்றம் ஒன்றே இதற்கான உத்தரவை விடுத்துள்ளது. சிவிலியன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாமல் 6 மாதங்களுக்கு இவர் தடுத்துவைக்கப்படவுள்ளார்.
வழக்கம்போல இவருக்கெதிராகவும் எவ்வித குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை. இஸ்ரேலிற்கு எதிராக செயற்பட்டார் என்பதே பொதுவாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டாகும் என அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வித சட்டபூர்வமான நியாயமும் இன்றி மேற்கொள்ளப்பட்ட அத்துமீறிய தடுத்துவைப்பு இது என சபாநாயகர் அலுவலகம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முழு உலகும் தனது மௌனத்தைக் கலைத்துவிட்டு அவரையும் இஸ்ரேலிய சிறைச்சாலைகளிலுள்ள ஏனைய எம்.பி.க்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கைது நடவடிக்கையை ஹமாஸும் பலஸ்தீன அதிகார சபையும் கண்டித்துள்ளது. அத்துடன் அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவை வேண்டியுள்ளன.
அஸீஸ் துவைக் பலஸ்தீன அரசியல் வட்டாரங்களில் செல்வாக்குமிக்க ஒருவர். 2006 இல், ஹமாஸ் தேர்தலில் வெற்றிபெற்ற சிறிது காலத்தின் பின்னரும், இதேபோன்று அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அப்போது தடைசெய்யப்பட்ட இயக்கம் ஒன்றில் அங்கம் வகித்தார் என்ற குற்றம் சாட்டப்பட்டு 3 வருடங்கள் அவர் சிறைவாசம் அனுபவித்தார்.
அஸீஸ் துவைக்குடன் சேர்த்து கடந்த ஐந்து நாட்களுள் ஹமாஸ் எம்.பி.க்கள் ஐவர் இஸ்ரேலால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி மீள்பார்வை 

Tuesday, January 24, 2012

பாத்ரிபல் போலி என்கவுண்டர்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

fakeencounter
புதுடெல்லி:பத்தாண்டுகளுக்கு முன்பு ஜம்மு-கஷ்மீர் மாநிலம் பாத்ரிபலில் நடந்த போலி என்கவுண்டர் வழக்கு தரைப்படை ராணுவத்தின் நிலைப்பாடு காரணமாக விசாரணை கட்டத்தை எட்டாததற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

மலேகான் குண்டுவெடிப்பு: ஹிந்துத்துவா தீவிரவாதி தேர்தலில் போட்டி

Ramesh Upadhyay
பலியா(உ.பி):2008 மலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதியான முன்னாள் ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய்(வயது 60) உ.பி மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.
மஹாராஷ்ட்ரா மாநிலம், மலேகான்  2008, செப்டம்பர் 29-ம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த வழக்கில் 12 பேரை போலீஸார் கைது செய்தனர். இதில் முதல் எதிரியான லெப்டினென்ட் கலோனல் ஸ்ரீகாந்த் பிரசாத் புரோகித்துடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாக மேஜர் (ஓய்வு) ரமேஷ் உபாத்யாய் (60) குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இப்போது மகாராஷ்டிரத்தின் ராய்கார்க்கில் உள்ள தலோஜா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், உத்தரப் பிரதேச பேரவைத் தேர்தலில் பாய்ரியா தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.
ரமேஷ் உபாத்யாய் சார்பில் அவரது மகன் விஷால், திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார். அகில பாரத ஹிந்து மகா சபா என்ற ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பு சார்பாக அவர் தேர்தலில் போட்டியிட உள்ளார்.
நன்றி தூது ஆன்லைன்