Wednesday, April 20, 2022

பாவடி (பாவோடி)

பாவடி என்றவுடன் நமது ஊர் பெரியவர்கள் பசங்கள் எங்கே என்று கேட்டால்  பாவடியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறுவார்கள். 

 நாம் என்றாவது  பாவடி என்றால் என்ன கேள்வி கேட்டது உண்டா. அதற்கு பின்னாடி ஒரு வரலாற்று நிகழ்வு உள்ளது.  1900  காலகட்டத்திற்க்கு முன் அனைத்து  வியாபார தொழிலில்களையும் முஸ்லிம்கள்தான் செய்து கொண்டிருந்தார்கள். அதில் ஒன்றுதான் நெசவுத்தொழில்.  இன்று பனியன்  ஆடை தொழிலை உலகத்துக்கு ஏற்றுமதி செய்யும் திருப்பூர் அதன் முன்னோடிகள் முஸ்லிம்கள்தான். அவர்கள்தான் வெளிநாட்டிலிருந்து இயந்திரங்களை வரவைத்து நவீன முறையில் நெசவு தொழிலை செய்து கொண்டிருப்பது  அனைவரும்  அறிந்த உண்மை.

 எழுத்தாளர் டாக்டர் S.M. கமால் எழுதிய  முஸ்லிம்களும் தமிழகமும் என்ற நூலில் நமது ஊர் போகலூர் இல் 50 தறிகள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். நமது ஊர் முஸ்லிம்கள் நெசவுத் தொழிலை செய்தார்கள் என்ற குறிப்புகளை அடிக்கோடிட்டு எழுதியுள்ளார். அதில் எந்த ஊர்களில் பாவடி என்ற தெரு இருக்கிறதோ அந்த ஊரில் நெசவுத்தொழில் இருந்தது என்று ஆதாரமாக கூறுகிறார். அதற்கு அவர் கூறும் காரணம் பாவடி என்கின்ற தெருதான்.   

 பாவடி என்றால்  நூலுக்கு சாயம் இட்டு  காயவைக்கும் இடம். அந்த இடம் அகலமாகவும் ரொம்ப நீளமாகவும் இருக்கும். நாம் எமனேஸ்வரம் ஊர் சென்று இருந்தால் அங்கே சாயமிடும் காட்சிகளே நாம் காண வாய்ப்புகள் அதிகம் உண்டு.  நெசவு பணியில் இன்னும் நடைபெற்று கொண்டு இருக்கிறது.  அதில் ஒன்றுதான் நாம் புதிய பள்ளிக்கூடத்திற்கு முன்னாடி உள்ள தெரு அகலமாகவும் நீளமாகவும் உள்ளது அதற்கே தான் பாவடி தெரு நமது சிறுவயதிலிருந்து நம்முடன் தொடர்புடைய இந்த பாவடி தெருவை நாம் அதன் பழமை மாறாமல்  பாதுகாப்பது நமது கடமை.


நமது நிருபர் 

சாமானியன்

போகலூர்

நமது பள்ளிக்கூடம்

 நமது பள்ளிக்கூடம் நூருல்லா முஸ்லிம் தொடக்கப்பள்ளி. சுதந்திரம் அடைவதற்கு முன்பே 1938 இல் கல்வியின் மீது பற்றும் சமுதாயம் நலன் கொண்ட மக்களால் ஆரம்பிக்கப்பட்டது. 

பள்ளிக்கூடம்  கட்ட இடம் கொடுத்தவர்களுக்கு நினைவாக அவர்கள் பெயரான நூருல்லா என்ற பெயரை நமது பள்ளிக்கு நூருல்லா முஸ்லிம் தொடக்கப்பள்ளி என்று பெயர் வரக் காரணமாக அமைந்தது.

 நமது பள்ளிக்கூடத்து பின் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள்.  ராமநாதபுரத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் செய்யதம்மாள் உயர்நிலைப்பள்ளி  1965 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஹைரத்துல்  ஜமாலியா உயர்நிலைப்பள்ளி பரமக்குடி 1981 துவங்கப்பட்டது.

 நமது பள்ளிக்கூடம் ஆரம்பகாலத்தில் மண் சுவர்   கட்டடத்தில் இயங்கியது. மக்களின் தொடர் முயற்சியாலும் கடும் உழைப்பாலும் செங்கல் கற்களால்  கட்டப்பட்ட ஓட்டு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. தற்போது பள்ளிவாசலுக்கு பக்கத்தில் உள்ள ஓட்டு கட்டடத்தில் இயங்கி கொண்டிருக்கிறது. நமது நூருல்லா முஸ்லிம் பள்ளிக்கூடம்  மக்களின்  தொடர் முயற்சியால் காங்கிரீட் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. புதிய பள்ளி கட்டிடத்திற்கு கூடிய விரைவில் மாற்றப்பட உள்ளது.

 நமது பள்ளிக்கூடத்தின் படித்த பல நூறு மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் பல துறைகளில் முன்னேறி உள்ளனர். குறிப்பாக டாக்டர்,  இன்ஜினியர், அரசுத் துறைகள் மற்றும் பல துறைகளில் தங்களை பங்களிப்பை சிறப்பாக ஆற்றுகிறார்கள். இப்படிப்பட்ட சாதனையாளர்கள்  உருவாக காரணமாக இருந்தது நமது நூருல்லா முஸ்லிம்  தொடக்கப்பள்ளி தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

 நமது வாழ்க்கையில் பள்ளி வாழ்க்கை என்பது ஒரு இனிமையான காலம் அதில் ஆரம்பப்பள்ளி என்பது தனிச்சிறப்பு அப்படிப்பட்ட சிறப்பு சொந்தமான இருக்கக்கூடிய நமது நூருல்லா முஸ்லிம் தொடக்கப்பள்ளி நாம் என்றும் நினைவில் வைத்திருப்பதுடன். நாம் இன்று இருக்கும் உயர்ந்த அந்தஸ்துக்கு அடிப்படை காரணமாக இருந்த நமது நூருல்லா முஸ்லிம் தொடக்கப் பள்ளிக்கு நாம் ஆற்றிய பங்களிப்பு என்ன என்ற கேள்விக்கு பதிலளிக்க  கடமைப்பட்டுள்ளோம்.

2013 ஆம் ஆண்டு 75 ஆண்டுகள் நிறைவு பெற்றது. அந்த ஆண்டே நாம் நூருல்லா முஸ்லிம் தொடக்கப்பள்ளியில் பவள விழா  கொண்டாடி இருக்க  வேண்டும். என்ன காரணங்கள் நம்மை பவள விழா கொண்டாடுவதை தடுத்தது என்று ஆயிரம் கேள்விகள் எழும். நடந்தவை நல்லவையாக இருக்கட்டும். நமது நூருல்லா முஸ்லிம் தொடக்கப்பள்ளியில் நூற்றாண்டு விழா சிறப்பாக நடத்த அனைத்து முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உறுதியேற்போம்.


  நமது வீட்டை நாம் எப்படி பராமரிப்போம் அதே போன்று நமக்கு கல்வி தந்த நமது பள்ளிக்கூடத்தையும் பராமரிக்கும் பொறுப்பு அங்கு படித்த ஒவ்வொரு மாணவருக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும்  கடமை என்பதை நாம் உணர வேண்டும். நாம் இந்த பள்ளிக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்னென்ன என்பதை நம் கண்முன் நிறுத்தி  பார்க்க வேண்டும். மற்றவர்களை குறை சொல்வதை விட்டுவிட்டு இது எனது பள்ளி எனது கடமை என்ற எண்ணத்துடன் செயல்படும் ஒவ்வொரு முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்  கடமையாகும்.

ஆரம்பம் சரியாக இருந்தால் அனைத்தும் சரியாக இருக்கும். ஒருவரின் ஆரம்பக்கல்வி சரியாக இருந்தால் அவருடைய வாழ்க்கை சிறப்பாகவே அமையும். நமக்கும் நமது பிள்ளைகளுக்கும் கல்வி தந்த நூருல்லா தொடக்கப் பள்ளிக்கு நாம் என்றும் கடமைப்பட்டிருக்கின்றோம் .


நமதுநிருபர்

சாமானியன்

போகலூர்

போகலூர்

 இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் தான் போகலூர். இதன் பெயர் புகலூர் என்ற பெயரிலிருந்து மருவி போகலூர் ஆகியது. 

தென்தமிழ்நாட்டின் பிரிக்கப்படாத பழைய இராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும்பகுதியை ஆண்டவர்கள் சேதுபதிகள். இவர்கள் கி.பி 1501 முதல் இந்தியா விடுதலை பெற்ற காலம் வரை இப்பகுதியின் ஆட்சியாளர்களாகத் திகழ்ந்துள்ளனர். வங்கக்கடற்கரையின் அதிபதியாய் முதலில் புகலூரையும் (போகலூர்) பின்பு இராமநாதபுரத்தையும் தங்கள் தலைநகரமாக கொண்டு ஆட்சி நடத்தியள்ளனர்.

சேதுபதி மன்னர்கள்  கி.பி.1501 முதல் கி.பி.1710 வரை சமார் 210 வருடங்கள்  போகலூரை தலைநகராக கொண்டு ஆட்சிபுரிந்துள்ளனர்.இன்றும் சேதுபதி மன்னர்  அரண்மனையின் சிதிலமடைந்த சுவர்கள்  போகலூரில் காணப்படுகின்றன. 

போகலூர் பரமக்குடி சட்டமன்றத் தொகுதிக்கும் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 9221 ஆகும். இவர்களில் பெண்கள் 4475 பேரும் ஆண்கள் 4746 பேரும் உள்ளனர்.

போகலூர் கிராமம் என்ற முறையில் இருந்தாலும் இன்று 

அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,

அரசு சித்த மருத்துவமையம், 

அரசு கால்நடை மருந்தகம், 


ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, 

நூருல்லா முஸ்லிம் தொடக்கப்பள்ளி


அரசு அலுவலகங்கள்

ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.

வருவாய் ஆய்வாளர் அலுவலகம்

கிராம அலுவலர், ஊராட்சி மன்ற அலுவலகங்கள்,

நூலகம் போன்றவை இந்த ஊரின் சிறப்புகளை பறைசாற்றுகின்றன.

இந்திய தேசம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் இரு வழிச்சாலைக்கு சுங்கச்சாவடி இருப்பது என்றால் அது நமது போகலூரில் உள்ள சுங்கச்சாவடி தான் இந்த சிறப்பு அமையும்.

இவ்வளவு  வரலாற்றுக்கு சொந்தமான நமது போகலூர் கூடிய விரைவில் பேரூராட்சி அந்தஸ்தை பெறும் என்பதை நாம் அனைவரும்  எதிர்பார்ப்பாக உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்கள் மக்கள்  நகரங்களை நோக்கி பயணிக்கிறார்கள். இதில் விதிவிலக்காக நமது போகலூர் மற்ற கிராமங்களைப் போலில்லாமல்    மக்கள் தொகையை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. நமது ஊரில் இருந்து அனைத்து நகரங்களுக்கும் வாகனம் வழியாக பேருந்து வழியாக எந்த நேரத்திலும்  செல்ல முடியும். கிராமம் என்ற முறையில் இருந்தாலும் போக்குவரத்து முறையில் மற்ற நகரங்களுக்கு சமமாக போக்குவரத்து வசதி பெற்றுள்ளது.


நமது ஊரில் சேதுபதி மன்னரின் நினைவாக ஒரு அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும் என்பது இந்த ஊர் மக்களின் ஆவலாக உள்ளது.

நமது கோரிக்கையை ஆட்சியாளர்கள் நிறைவேற்றுவார் என்று நாம் எதிர் பார்ப்போம்.


நமது நிருபர்

சாமானியன்

போகலூர்.

Tuesday, March 22, 2022

நமது சமூகத்தின் முன்னேற்றம்

 நமது ஊரில் 1980 களுக்கு முன் விவசாயமே பிரதான தொழிலாக இருந்தது. 1980களில் நமது மக்களின் கல்வி  என்று பார்த்தால் ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு இதற்கு இடைப்பட்ட பகுதியில் இடைநிறுத்தம் ஆக இருந்தது.  ஒரு சிலரே மட்டுமே  பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, இளநிலை பட்டம் கல்வி பயின்றார்கள் .  இன்றைக்கு வெளிநாட்டு வேலை என்றால் நமது நினைவுக்கு வருவது துபாய் தான்.  அதேபோன்று அந்த காலகட்டத்தில் கல்வியில் இடைநிறுத்தம் செய்யப்பட்ட மாணவர்கள் ஆந்திராவுக்கு சென்று மளிகைக்கடையில் வேலை செய்தார்கள்.

1990 பின் கல்வியில் இடைநிறுத்த செய்யப்பட்ட மாணவர்கள் ராமநாதபுரம் கடைகளில் வேலைக்கு சேர்ந்தார்கள். 1990களில் படித்த மாணவர்கள்  டிப்ளோமா,  ஐடிஐ போன்ற தொழில் கல்வி பயின்றார்கள்.  தொழில் கல்வியின்  பயனாக வெளிநாடு சென்று வேலை செய்ய ஆரம்பித்தார்கள்.  

சமூகத்தில் பொருளாதாரம் முன்னேற ஆரம்பித்த காலகட்டம் 2000 பின்  மாணவர்களின் கல்வித்தரம் டிகிரி என்ற அளவுக்கு உயர்ந்தது. என்னதான் இளநிலை பட்டம் படித்தாலும் வெளிநாட்டு வேலைகளுக்கு செல்ல வேண்டியதாயிற்று. தற்போது நமது ஊர் இளைஞர்கள் அரசு வேலையில் பணிபுரிய தூங்கி விட்டார்கள். குறிப்பாக காவல் துறை மற்றும் அரசு துறைகளில் பணி புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

 தற்போதுள்ள சூழ்நிலையில் அரசு வேலை வாய்ப்புகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும் அதைத் தவிர்த்து விட்டு வெளிநாட்டு வேலை போன்ற விஷயங்களில் நாம் ஈடுபட்டோம் என்றால் நாம் அதிகமாக வேலை செய்யும் துபாய், சவுதி போன்ற நாடுகளில் ஏதாவது  உள்நாட்டு யுத்தம் ஏற்பட்டால் நமக்கு வேலை இழக்க நேரிடும் இங்கே வந்து நாம் வேலையை தேடுவோம் என்றால் நமக்கு ஏற்ற சரியான வேலை கிடைக்காது. இந்த  சூழ்நிலை வரக்கூடிய தலைமுறைகளுக்கு ஏற்படாமல் இருக்க  நமது பிள்ளைகளுக்கு குறைந்தது டிகிரி முடித்தபின் இரண்டு ஆண்டுகளாவது அரசு வேலைக்கு முயற்சி செய்ய உறுதுணையாக பெற்றோர் இருக்க வேண்டும்.

 மாற்றம் ஒன்றே மாறாதது அது நமக்காக இருக்கட்டும். நமது சமூகத்தின் முன்னேற்றம் ஒரு பகுதியாக கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உள்ளது.  அதனை செயல்படுத்தி வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.


                   நமது நிருபர்

                   சாமானியன்

                   போகலூர்

ஜனநாயகம்

 ஜனநாயகம் நான்கு தூண்களால்  அமைந்தது.

1. சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம்

2. நிர்வாகத்துறை

3. நீதித்துறை

4. ஊடகத்துறை



இந்திய அரசியலமைப்பு சட்டம் மூன்று தூண்களாக 

1. சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம்

 2.நிர்வாகத்துறை 

3. நீதித்துறை

மக்களால் நான்காவது துறையாக ஊடகத்துறை நடைமுறையிலுள்ளது.

1. மக்களுக்கான  திட்டங்களை இயற்றுவதற்கு சட்டமன்றமும் பாராளுமன்றமும் உள்ளது 

2. சட்டமன்றம் பாராளுமன்றம் இயற்றிய சட்டங்களை செயல்படுத்த நிர்வாகத்துறை உள்ளது.

3. கண்காணிப்பு மற்றும் நீதி வழங்க  நீதித்துறை உள்ளது  

4. மேற்கண்ட துறைகளில் செயல்பாடுகளை மக்களுக்கு கொண்டு செல்ல ஊடகத்துறை உள்ளது.

இந்திய தேசத்தில் 3% குறைவாக உள்ள உயர் ஜாதி சமூகம் இந்தியாவை ஆட்சி செய்கிறது அது எப்படி ஜனநாயகத்தின் தூண்களாக போற்றப்படுகின்ற நான்கு தூண்களிலும் இந்த ஆதிக்க ஜாதியினர் தங்கள் பங்களிப்பை ஆதிகமாக ஆற்றுகிறார்கள்.

மற்றொரு சமூகமான தலித் சமூகம் இந்திய தேசத்தில் ஏறக்குறைய 35 விழுக்காடு மேலாக உள்ளனர். அவர்களால் கல்வி வேலைவாய்ப்பில் மட்டுமே தற்போது முன்னேற முடிய உள்ளது நீதித்துறை, ஊடகத்துறை,அரசியல் அதிகாரத்தில் மற்ற கட்சிகளை நம்பி உள்ளது. இதன் காரணமாக அந்த சமூகம் பின்தங்கியுள்ள சமூகமாகவே உள்ளது.

நமது சமூகத்தைப் பொறுத்தவரையில் மேற்கூறப்பட்ட அனைத்து ஜனநாயக தூண்களிலும் சச்சார் கமிட்டி அறிக்கையின் படி தலித் சமூகத்தை விட பின்தங்கி தான் உள்ளது. அரசுத் துறையில் எந்த அளவுக்கு கவனம் செலுத்த வேண்டுமோ அதேபோன்று அரசியலிலும் நம் சமூகம் தன்னிறைவு பெற வேண்டும் நீதித்துறையும் நமது பங்களிப்பை அளிக்க வேண்டும் ஊடகத்துறையில் நமது பங்களிப்பை அளிக்க வேண்டும்.

இதனை கவனம் செலுத்தவில்லை என்றால் ஆட்சியாளர்கள் இஸ்லாத்துக்கு எதிரான சட்டத்தை கொண்டு வருவார்கள். நிர்வாகத்தில் உள்ள நபர்களோ அதனை தங்குதடையின்றி செயல்படுத்துவார்கள். நீதிமன்றத்திற்கு நாம் சென்றோம் என்றால் நமக்கு எதிரான தீர்ப்புகளை வரும். ஊடகத்துறையில் மேற்கண்ட அனைத்து துறையினரும்  செய்த தவறுகளை சரி என்று பிரச்சாரம் செய்வார்கள். மற்ற துறையின் முயற்சி செய்பவர்களை குறை சொல்வதை விட்டுவிட்டு என்னால் இந்த துறையில் நமது சமூகத்தை முன்னேற்றம் என்று சபதம் ஏற்க வேண்டும். யார் யாருக்கு என்ன துறை பிடிக்கிறதோ அந்த துறையில் சமுதாயத்தை முன்னேற்ற உழைத்தாலே போதும் சமூகம் அனைத்து துறையிலும் முன்னேறும். ஒருவன் அரசுத்துறை மட்டும் தான் சிறந்தது அல்லது அரசியல் மட்டும் தான் சிறந்தது என்று யாரோ ஒருவர் கூறுகிறார் என்றால் உரல் உடலிலுள்ள ஒரு கை ஒரு கால் ஊனமா இருந்தால் அந்த மனிதன் எப்படி நான் பார்ப்போமா  அதே போன்று தான் இந்த சமூகமும் பாதிக்கப்படும். அல்லாஹ் ஒரு மனிதனின் உள்ளத்தை மட்டும் தான் பார்க்கின்றான் செயலை பார்க்கவில்லை அதனால் தங்களின் செயலை நல்லது செய்தால் இம்மியும் அந்நிய மறுமையிலும் வெற்றி பெறலாம்.


நமது நிருபர்

சாமானியன்

போகலூர்

நமது ஊர் கடைசி விவசாயி

முஸ்லிம்கள் விவசாயம் செய்வார்களா என்று சமூக வலைத்தளத்தில் ஒரு நபர் கேள்வி  கேட்டிருந்தார். இந்தக் கேள்வி நம்மை பொருத்தவரை ஒரு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் நகர்ப்புற மக்களுக்கு விவசாயம் பற்றியோ விவசாயி பற்றியோ எந்த ஒரு புரிதலும் இல்லை. அதனால் அவர்கள் பெருவாரியாக திரைப்படங்களில் விவசாயம் விவசாயிகள் பற்றி தெரிந்து கொண்டிருக்கிறார்கள். எந்த திரைப்படங்களிலும் இஸ்லாமியர்களை ஒரு விவசாயிகளாக காண்பிப்பதில்லை. அதனால்தான் இப்படி ஒரு கேள்வியை எழுப்பப்படுகிறது.

 நமது ஊர் பெரியவர்கள் கூறுவார்கள் அந்த காலத்தில் பல வீடுகளில் ஒவ்வொரு வீடுகளும் 50க்கும் மேற்பட்ட எருமை மாடுகளும் ஒரு சில பசு மாடுகள் இருந்தன. இந்தக் கூற்றை கேட்கும்போது நமக்கு ஆச்சரியமாக இருக்கும் ஏனென்றால் நமது காலகட்டத்தில் நமது போகலூர்  ஒன்றியத்தில் எருமை மாடுகள் என்று ஒன்று இல்லை.  தற்போது நமது சமுதாயத்தில்  ஒரு சில வீடுகளில் பசுமாடுகளை காணமுடிகிறது. ஆனால் அந்த காலத்தில் உள்ள மக்கள் எருமை  மாட்டு பாலை வியாபாரம் செய்து உள்ளார்கள். எருமை மாடுகளைப் பராமரிப்பதற்கு என்றே வேலையாட்களை வைத்து இருந்தார்கள்.  அதுமட்டுமில்லாமல் அப்போது உள்ள மக்கள் விவசாயம் சார்ந்த தொழிலை செய்துள்ளார்கள்.

 விவசாய நிலங்களை வைத்துக் கொண்டு விவசாயம் செய்வார்கள் மற்றும்  விவசாய தொழிலாளிகளாக இருப்பார்கள். இன்று குறிப்பிட்ட  நபர்களிடம் மட்டுமே விவசாய நிலங்கள் உள்ளது. ஒரு சில நபர்கள் விவசாய கூலிகளாக இருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால் யாதவ குடியிருப்பு பகுதியில் இருந்த நமது அனைத்து விவசாய  நிலங்களும் ஏறக்குறைய விற்பனை செய்துவிட்டார்கள். அதேபோன்று தோட்டகாட்டில் உள்ள விவசாய நிலங்களை விற்க ஆரம்பித்து விட்டார்கள். 

 தற்போது நமது வீடுகள் இருக்கக்கூடிய பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். நமது பகுதியில் உள்ள நிலங்களில் ஆவது நமது மக்களுக்கு விற்பனை செய்வார்கள் என்றால் அதில் ஒரு நடைமுறைச் சிக்கல் உள்ளது. நமது சொத்தில் உள்ள இடத்தை  முதலில் நமது சொந்தம் பந்ததற்கு தான் விற்பனை செய்வோம்  அல்லது மற்றவரிடம் விற்பனை செய்வோம் . ஆனால் விவசாய நிலங்கள்  பொருத்தவரையில் அப்படியல்ல இது ஒரு எழுதப்படாத ஒரு சட்டம் நடைமுறையில் உள்ளது. யார் நமது நிலத்தை ஒத்தி  அல்லது பங்குக்கு வாங்கி விவசாயம் செய்கிறார்களோ  அவரிடம்தான் விற்பனை செய்ய வேண்டும் மாறாக எந்த காரணத்தை கொண்டும் சொந்தம் பந்தது கூட விற்பனை செய்ய முடியாது. இதன் காரணமாக நமது நிலங்கள் மற்ற மாற்றுமத சகோதர்களுக்கு செல்லக் கூடிய அவல நிலை ஏற்படுகிறது.

 ஒரு சில நபர்களை விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பின் அந்த விவசாய நிலங்களை அவர்களுடைய சந்ததியினர் விவசாயம் செய்ய எந்த ஒரு முயற்சியும் தற்போது எடுப்பதில்லை. நெல், மிளகாய், பருத்தி போன்ற விவசாயம் செய்யத் தெரியவில்லையா அதற்கு மாற்றாக மாற்று விவசாயத்தை கையாளலாம். இதனை தவிர்த்து விட்டு விவசாய நிலத்தை விற்றாள். முஸ்லிம் சமூகம் விவசாயிகள் செய்தார்களா என்ற கேள்விக்கு நமது ஊரே எடுத்துக்காட்டாக அமைந்துவிடும். விவசாயத்தை காப்போம் பாரம்பரியத்தை பாதுகாப்போம்.


                                                                                   நபது நிருபர்

                                                                                    சாமானியன்

                                                                                  போகலூர்

Monday, October 28, 2019

உறங்காத விழிகளாய்


சிறுவன் சுர்ஜித் என்னை மன்னித்துவிடு
என் நாட்டை டிஜிடல் இந்தியா என்றார்கள்
மேக்கின் இந்தியா என்றார்கள்
செவ்வாய்க்கு விண்கலம் அனுப்புகிறேன் என்றார்கள்
அணுகுண்டு வைத்திருக்கும் நாடு என்றார்கள்
நம்பி இருந்துவிட்டேன் என்னை மன்னித்துவிடு
சென்னை கடலில் எண்ணெயை வாளியால் அள்ளியதை
நான் மறந்து விட்டேன் என்னை மன்னித்துவிடு
நான் அப்துல் காலம் பிறந்த மண்ணை சார்ந்தவன்
என்பதை மறந்துவிட்டேன் என்னை மன்னித்துவிடு
இனி இதுபோல் தவறு நடக்காது
உறங்காத விழிகளாய் சாமானியன்

-    சாமானியன் போகலூர்