Wednesday, November 30, 2011

அமெரிக்கா உறவு: பாகிஸ்தான் மறு பரிசீலனை!

li-pakistan-coffin-620-ap16
இஸ்லாமாபாத்:நேட்டோ தாக்குதலில் 24 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொலைச் செய்யப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தானில் எதிர்ப்பு பரவி வரும் சூழலில், அமெரிக்கா உடனான உறவை பாகிஸ்தான் மறு பரிசீலனை செய்ய உள்ளது.
பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானிற்கு சரக்குகளை கொண்டு செல்வதை தடை செய்வது, தூதரக, அரசியல், ராணுவ, ரகசிய புலனாய்வு ஆகிய துறைகள் உள்பட அமெரிக்கா மற்றும் நேட்டோவுடன் தொடர்பு கொண்டிருக்கும் உறவை மறு பரிசீலனை செய்ய பாக்.பிரதமர் யூசுஃப் ராஸா கிலானி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
ஆளில்லா விமானத்தாக்குதலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள ஷம்ஸி விமானநிலையத்திலிருந்து 15 தினங்களுக்குள் வெளியேற அமெரிக்காவிடம் கோரிக்கை விடுக்கவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விபரங்கள் கூறப்பட்டுள்ளன. தாக்குதல் நடந்த உடனேயே ஆப்கானிஸ்தானிற்கு பாகிஸ்தான் வழியாக சரக்கு கொண்டு செல்லப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இதனிடையே, பாக்.ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நேட்டோ தலைவர் ஆண்டேர்ஸ் ஃபோக் ரஸ்மூஸன் அனுதாபம் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் பாக்.பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். தாக்குதலை குறித்து அதிகமாக துக்கப்படுவதாகவும், இச்சம்பவத்தை குறித்து விசாரணை நடத்திவருவதாகவும் கடிதத்தில் ரஸ்மூஸன் குறிப்பிட்டுள்ளார். ஆனால்,நேட்டோ நடத்திய தாக்குதலை அங்கீகரிக்க இயலாது என பாக்.வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளிண்டனிடம் தெரிவித்துள்ளார். நேட்டோவின் நடவடிக்கை மனித உயிர்களை அவமானப்படுத்துவதாகும் என அவர் ஹிலாரியை தொலைபேசியில் அழைத்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லியோன் பனேட்டா, வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் நேட்டோ தாக்குதலில் கொல்லப்பட்ட பாக்.வீரர்களுக்கு அனுதாப அஞ்சலி செலுத்தியுள்ளனர். இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா-பாக்.உறவின் முக்கியத்துவத்தை தெரிவித்து இரு நாடுகளும் உறவை தொடர்ந்து பேணவேண்டும் என்றும், இத்தாக்குதலை குறித்த நேட்டோவின் விசாரணைக்கு பூரண ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸலாலா செக்போஸ்ட் மீது நேட்டோ ராணுவம் அக்கிரமமான முறையில் தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதல் நடக்கும் வேளையில் தூக்கத்திலிருந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 24 பேர் கொல்லப்பட்டனர். 13பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த செக்போஸ்ட் குறித்து நேட்டோ படையினருக்கு தெளிவாக தெரிந்த பிறகும் வேண்டுமென்றே தாக்குதலை நடத்தியுள்ளனர் என பாகிஸ்தான் கூறியுள்ளது.
கொல்லப்பட்ட பாக்.ராணுவ வீரர்களின் உடல்கள் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சட்டங்கில் பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டனர். பாக்.ராணுவ தலைமை தளபதி அஷ்பாக் ஃபர்வேஸ் கயானி உள்பட உயர் ராணுவ அதிகாரிகள் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர். ராணுவத்தினரின் மரணத்தை தொடர்ந்து கராச்சியில் அமெரிக்க தூதரகத்தை நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி நடத்தினர்.

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்



imagesCAH12VU1
பெய்ரூத்:தெற்கு லெபனானில் ஐதா ஷஆப் நகரத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. வடக்கு இஸ்ரேலை நோக்கி பல தடவை லெபனானில் இருந்து ராக்கெட் தாக்குதல் நடந்ததாக குற்றம் சாட்டி ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது இஸ்ரேல். தாக்குதலில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது என்றும், ஆட்களுக்கு அபாயமில்லை எனவும் லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில், இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தொடர்பில்லை என ஹிஸ்புல்லாஹ் அறிவித்துள்ளது. 2006-ஆம் ஆண்டு 34 தினங்கள் நீண்ட ஹிஸ்புல்லாஹ்-இஸ்ரேல் போருக்கு பிறகு இரு நாடுகளின் எல்லைப் பகுதிகள் தற்பொழுது அமைதியாக இருந்தாலும் அறிக்கைப் போர்கள் அடிக்கடி நடைபெற்றுவருகிறது.

எகிப்தில் தீவிர வாக்குப்பதிவு



_56996909_gettyvote
கெய்ரோ:ராணுவ ஆட்சிக்கு எதிராக தஹ்ரீர் சதுக்கத்தில் போராட்டம் தொடரும் வேளையில் எகிப்தில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் துவங்கியுள்ளது.ஜனநாயகரீதியிலான போராட்டத்தை தொடர்ந்து ஹுஸ்னி முபாரக் பதவி விலகியதை தொடர்ந்து நடக்கும் முதல் பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்டமான நேற்று அதிகமாக வாக்குகள் பதிவானதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முடிவுகள் வருகிற புதன்கிழமை வெளியாகும்.
வாக்குச்சீட்டுகள் உரிய நேரத்தில் சில இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு கால தாமதம் ஆகியதை தொடர்ந்து வாக்குப்பதிவு சற்று தாமதமாக துவங்கினாலும் பின்னர் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்றது.வாக்குப்பதிவு தாமதமாக துவங்கிய பகுதிகளில் வாக்குப்பதிவிற்கான கால அளவு நீட்டப்பட்டது. சில வாக்குச்சாவடிகளில் தடையை மீறி நோட்டீஸ் வழங்கியதால் மோதல் உருவானது.
ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடந்துவரும் வேளையில் வாக்குப்பதிவிற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 2012-ஆம் ஆண்டு மார்ச் வரை 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். ஏறத்தாழ 50 பதிவுச்செய்த கட்சிகள் போட்டியிடும் தேர்தலில் முதல் கட்டமாக 168 பேர் தேர்வுச்செய்யப்படுவர். மீதமுள்ளவர்கள் அடுத்த கட்ட தேர்தல்களில் தேர்வுச்செய்யப்படுவர். இதற்கிடையே எகிப்தில் நடந்துவரும் மோதல்களின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் செயல்படுவதாக எகிப்தின் ராணுவ தலைவர் ஹுஸைன் தன்தாவி குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 10 தினங்களாக தஹ்ரீர் சதுக்கத்தை மையமாக கொண்டு நடக்கும் போராட்டத்தில் 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். தன்தாவி பதவி விலக எதிர்ப்பாளர்கள் கோரிக்கை எழுப்பி போராட்டம் நடைபெறுகிறது.

Monday, November 21, 2011

பார பட்சம் : பலியானவர்கள் முஸ்லிம்களாக இருந்தால்


மழை, வெள்ளத்தால் பலியான 6 பேரின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம்: ஜெயலலிதா
சென்னை, நவ.9:
மழை, வெள்ளப் பாதிப்பினால் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் பெய்துவரும் வடகிழக்குப் பருவமழை காரணமாக நவம்பர் 8-ம் தேதி, கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் தொளார் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜின் மகள் சத்தியதேவி, திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமியின் மகன் சதாசிவம் (எ) மணி, சங்கிலிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசனின் மகன் சண்முகம், ஈரோடு மாவட்டம் துய்யம்பூந்தரை கிராமத்தைச் சேர்ந்த இருளப்ப நாடாரின் மகன் அங்கப்ப நாடார் ஆகியோர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த பண்டார நாடாரின் மனைவி ராஜேஸ்வரி மின்சாரம் தாக்கியும், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் வடமலையனூர் கிராமத்தைச் சேர்ந்த சன்னியாசியின் மனைவி சின்னபிள்ளை மழையினால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததாலும் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.
இந்த 6 நபர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தத் துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ. 2 லட்சம் உதவித்தொகையை உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

பார பட்சம் : பலியானவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் ரூ 1 லட்சம் தான் !

சென்னை, நவ.9:
புழல் ஏரியில் மூழ்கி இறந்த 3 நபர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
திருவள்ளூர் மாவட்டம் புழல் ஏரியில் நவம்பர் 8-ம் தேதி மூழ்கி இறந்த சென்னை கிழக்கு அண்ணா நகரைச் சேர்ந்த சத்தாரின் மகள் சர்மிளா, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த காதர் பாட்சாவின் மகன் முகமது ரிஸ்வான், சூரப்பட்டு சண்முகபுரத்தைச் சேர்ந்த முகமது நசீரின் மகன் முகமது ஆஷிக் ஆகிய மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்று செய்து அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.
அகால மரணமடைந்த அவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 1 லட்சம் உதவித்தொகை வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
குறிப்பு :
ஒரே கால கட்டம் - ஒரே நாளில் நடந்த உயிரழப்புகள், ஆனால் நிவாரணமோ அனைவருக்கும் தலா 2 லட்சம் வழங்கிய முதல்வர், முஸ்லிம் குடும்பங்களுக்கு மட்டும் 1 லட்சம் வழங்கியிருப்பது, அந்த குடும்பங்களை மேலும் வேதனையடைய செய்துள்ளது.

குஜராத் கூட்டு படுகொலை


வி.ஹெச்.பி., மாநில செயலாளர் திலீப் திரிவேதி : அரசு வழக்கறிஞர்

ஸர்தார்புரா சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில், 11 பேர் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களாவர்.
இதனை, அவர்களது உறவினரான அய்யூப் மியா ரஸூல் கூறுகையில், சம்பவம் நிகழ்வதற்கு முந்தைய தினம், மசாலப்பொடி வாங்க தயாபாய் வனபாய் என்ற நபரின் கடைக்கு சென்ற, தனது மாமாவிடம், இது இவருடைய கடைசி பஜ்ஜியை தின்பதற்கான மசாலா, என கடை உரிமையாளர் இன்னொரு நபரிடம் கூறியதாக தெரிவித்தார்.
இனப்படுகொலை சம்பவம் நடப்பதற்கு மூன்று தினங்களுக்கு முன்பு, முஸ்லிம்களுக்கு எதிரான என்ன செய்தாலும் யாரும் தண்டிக்கப்படமாட்டார்கள்.
நமது அரசு அவர்களை காப்பாற்றும் என, நரன் லாலு பட்டேல் என்ற உள்ளூர் எம்.எல்.ஏ, கூறியதாக ஸர்தார்புரா கூட்டுப் படுகொலையில் தனது மூன்று குடும்ப உறுப்பினர்களை இழந்த, நாஸிர் அக்பர் ஷேக் பின்னர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்திருந்தார்.
கலவரத்திற்கு முன்னோடியாக, சங்க்பரிவார தீவிரவாதிகள் முஸ்லிம்கள் நெருக்கமாக வசித்த, ஷேக் முஹல்லாவில் ஹாலோஜன் விளக்குகளை நிறுவிய பொழுது, இது எதற்கு? என வினவிய பொழுது “முஸ்லிம்களை கொலைச் செய்ய” என பதிலளித்ததாக, பிக்குமியா ஷேக் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த தகவலை போலீசாருக்கு தெரிவித்த போதிலும், அதனை செவிக்கொடுத்து கேட்க போலீஸ் தயாராகவில்லை.
துவக்கத்தில் இவ்வழக்கை விசாரித்த போலீஸ், உள்ளூர் பிரமுகர்கள் பலரையும் தவிர்த்துவிட்டு, முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்) தயார் செய்தனர் என குற்றச்சாட்டு முன்னரே எழுந்தது.
ஸர்தார்புரா கூட்டுப் படுகொலைக்கு தலைமை வகித்த, முன்னாள் பா.ஜ.க அமைச்சர், நரன் லாலு பட்டேல் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில் ஒருவராவார்.
துவக்கத்தில் இவ்வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞராக பணியாற்றியவர் வி.ஹெச்.பியின் குஜராத் மாநில செயலாளரான திலீப் திரிவேதி ஆவார்.
குற்றவாளிகளின் ஜாமீன் மனுவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய இவர், ஜாமீனுக்கு ஆதரவான முடிவை மேற்கொண்டு, குற்றவாளிகள் தப்பிப்பதற்கு உதவினார்.
உச்சநீதிமன்றம் தலையிட்டதைத் தொடர்ந்து, அரசு தரப்பு வழக்கறிஞர் பதவியிலிருந்து திலீப் திரிவேதி நீக்கப்பட்டார்.
தீபக் ஸ்வரூப் (1977பாட்ச்):-

2002-ஆம் ஆண்டு வதோதரா ரேஞ்ச் ஆபீஸர்.
வதோதரா ரூரல், கோத்ரா, தாஹோத், நர்மதா ஆகிய மாவட்டங்கள் இவருடைய அதிகார வரம்பிற்குள் இருந்தன.
இவையெல்லாம் இனப்படுகொலையின் வேளையில், முஸ்லிம்களை ஹிந்துத்துவா பயங்கரவாதிகள், கூட்டுப் படுகொலைச் செய்த இடங்களாகும்.
2005-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வதோதரா நகர போலீஸ் கமிஷனராக பதவியேற்றார். பெஸ்ட் பேக்கரி கூட்டுப்படுகொலையில் இவருக்கு நேரடி தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
வழக்கிலிருந்து கஷ்டப்பட்டு தப்பினார்.
பின்னர், சூரத் போலீஸ் கமிஷனராக பதவி வகித்தார்.
தற்பொழுது, 13 ஆம் பட்டாலியனின் கூடுதல் டி.ஜி.பி பதவி வகிக்கிறார்........
எ.கெ.பார்கவா(1967பாட்ச்) :-
2002-ஆம் ஆண்டு கலவர வழக்குகளை மீளாய்வு செய்து, தள்ளுபடிச் செய்ய முயற்சி மேற்கொண்டார்.
2004 பிப்ரவரியில் குஜராத் மாநில டி.ஜி.பி. பதவி வழங்கப்பட்டது.
ஜி.சி.ராய்கார் (1972பாட்ச்):-
இனப்படுகொலை நடந்த2002 பிப்ரவரிக்கும் மார்ச்சுக்கும் இடையே, குஜராத் உளவுத்துறையின் கூடுதல் டி.ஜி.பி., ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு உதவுவதற்காக, அரசு நடத்திய ரகசிய கூட்டங்களில் பங்கேற்றார்.
இந்த கூட்டங்களின் மினிட்ஸ்(நிகழ்ச்சி நிரல் பதிவேடு)காணாமல் போயின.
ஓய்வு பெற்ற பிறகு, பல பதவிகளும் வழங்கப்பட்டன.
எம்.கே.ராண்டன் (1976பாட்ச்):-
இனப்படுகொலை நடக்கும் வேளையில், அஹ்மதாபாத் மாநகர போலீஸ் துணை கமிஷனர்.
குல்பர்க் சொச்சைட்டியிலும், நரோடா பாட்டியாவிலும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கூட்டுப் படுகொலையும், பாலியல் வன்புணர்வு நடத்துவதற்கு வசதிகளை செய்துக் கொடுத்தார்.
பின்னர் சூரத் ஐ.ஜியாக இட மாற்றம்.
2005 ஜூலை மாதம் காந்திநகர் கூடுதல் டி.ஜி.பியாக பதவி உயர்வு.

குஜராத் கூட்டு படுகொலை


கெ.நித்யானந்தன் IPS (1977பாட்ச்) :-

2001-2005 காலக்கட்டத்தில் உள்துறை செயலாளர்.
2005-ஆம் ஆண்டு ராஜ்கோட் நகர போலீஸ் கமிஷனர் ஆனார்.
நடந்த சம்பவங்கள் குறித்து, தவறான அறிக்கைகளை மத்திய தேர்தல் கமிஷன், தேசிய மனித உரிமை கமிஷன் மற்றும் நீதிமன்றங்களுக்கு அளித்தார்.
தற்போது, கூடுதல் டி.ஜி.பியாக பதவி உயர்வு.
ஏ .கே.ஷர்மா IPS (1987பாட்ச்) :-

இன படுகொலையின் போது, ஏராளமான குற்றங்களில் நேரடியாக பங்குபெற்றார்.
இவரை மாற்றாமல் தேர்தலை நடத்தமுடியாது, என மத்திய தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, எஸ்.பி பதவியிலிருந்து மாற்றப்பட்டார்.
தேர்தலுக்கு பிறகு, மோடி இவரை மீண்டும் எஸ்.பியாக நியமித்தார்.
சிவானந்த ஜா IPS (1983பாட்ச்) :-

2002-ஆம் ஆண்டு அஹ்மதாபாத் மாநகர கூடுதல் கமிஷனராக நியமனம்.
நானாவதி கமிஷனின் முன்பு மோடியை தப்பவைக்க வாக்குமூலம் அளித்தவர்.
2005 பிப்ரவரியில் உள்துறை செயலாளர் ஆனார்.
இவரின் நியமனத்தை உச்சநீதிமன்றம் ரத்துச்செய்தது.
இதனைத் தொடர்ந்து சூரத் ரேஞ்ச் டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டார்.
சுதீர் கெ.சின்ஹா IPS (1976பாட்ச்) :-

2003 ஆம் ஆண்டு முதல் வதோதரா நகர போலீஸ் கமிஷனர்.
பெஸ்ட் பேக்கரி வழக்கில், ஷாஹிரா ஷேக்கிற்கு பணம் அளித்தும், மிரட்டியும் வாக்குமூலத்தை மாற்றச் செய்தததன் பின்னணியில் சின்ஹாவின் கரங்கள் உள்ளன.
2005 பிப்ரவரியில் சூரத் நகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
தற்பொழுது, சட்ட-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.
பி.பி.பாண்டே IPS (1980பாட்ச்) :-
இனப்படுகொலை நிகழ்ந்த உடனேயே, அஹ்மதாபாத் மாநகர க்ரைம் ப்ராஞ்ச் பொறுப்பை ஏற்றார்.வழக்குகளை மூடி மறைப்பதிலும், சாட்சிகளை மிரட்டுவதிலும் முக்கிய பங்கு வகித்தார்.

குல்பர்க்,நரோடாபாட்டியா வழக்குகளில் தில்லு முல்லு செய்தார்.
அஹ்மதாபாத் மாநகர க்ரைம்ப்ராஞ்ச் தலைவராக பதவி வகிக்கும் வேளையில்தான், பெரும்பாலான போலி என்கவுண்டர்கள் நிகழ்ந்தன.
பின்னர் உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டார்.
ஆஷிஷ் பாட்டியா(1985பாட்ச்):-

பி.பி.பாண்டேவுக்கு பிறகு, அஹ்மதாபாத் மாநகர க்ரைம் ப்ராஞ்ச் தலைவராக பதவியேற்றார்.
டி.ஜி.வன்சாராவுடன் ஏராளமான தாக்குதல்களில் பங்காளியானார்.
உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழுவின், ஆதாரங்களை அழித்த அதிகாரிகளை காப்பாற்ற முயன்றார்.
தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் பல வழக்குகளும் மூடப்பட்டதன் பின்னணியில் பங்கு வகித்தார்.

குஜராத் கூட்டு படுகொலை


குஜராத் கூட்டு படுகொலை: சங் பரிவார் பயங்கரவாதத்தின் நேரடி சாட்சி


















ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலைச் செய்யப்பட்ட குஜராத் இனப்படுகொலை வழக்குகளில், அதிகமாக விவாதிக்கப்படாத சம்பவம்தான் ஸர்தார்புரா கூட்டுப் படுகொலை வழக்கு.
மோடி அரசின் ஒத்துழைப்புடன் குஜராத் முழுவதும் சங்க்பரிவார பயங்கரவாதிகள், வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு கோரத்தாண்டவம் ஆடிய வேளையில், தப்பி பிழைத்தவர்கள், ஸர்தார்புராவில் உள்ள இப்ராஹீம் ஷேக்கின் வீட்டில் அடைக்கலம் தேடினர்.
அபயம் தேடியவர்களை விடாது துரத்திய ஹிந்துத்துவா பயங்கரவாதிகள், இப்ராஹீமின் வீட்டை பூட்டி உள்ளே பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொளுத்தினர்.
உடலில் தீ பற்றிய பொழுது, தப்பிக்க கூட வழிதெரியாமல், தீயில் வெந்து அந்த அப்பாவிகள் மரணித்தார்கள், என இச்சம்பவத்தில் தப்பிப்பிழைத்தவர் வாக்குமூலம் அளித்திருந்தார்.
கொல்லப்பட்ட33 பேர்களில் 22 பேர் பெண்களாவர்.
மீதமுள்ளவர்கள் குழந்தைகள்.
எட்டுமாதமே ஆன, பச்சிளம் குழந்தையும் இந்த பாதகர்களின் கொடூரத்திற்கு பலியானது.
கொல்லப்பட்டவர்களில் 11 பேர் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களாவர்.
இதனை அவர்களது உறவினரான அய்யூப் மியா, ரஸூல் மியா ஷேக், வாரப்பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தனர்.


குஜராத் : இன​ப்படுகொலைக்​கு உதவியதன் மூ​லம் மோடியிடம் ஆதாயம் பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகள் !

















குஜராத்தில், முஸ்லிம் இனப்படுகொலை நடைபெற்ற வேளையிலும், அதனைத் தொடர்ந்தும், மோடியின் கட்டளைகளை தவறாமல் நிறைவேற்றி ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு உதவிய, ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு மோடி அரசு, பதவி உயர்வும், ஓய்வுப்பெற்ற பிறகும் தொடர்ந்து பல பதவிகளை வழங்கி வருகிறது.
பி.சி.பாண்டே(1970பாட்ச்):-....
இனப்படுகொலை நடைபெற்ற வேளையில், அஹ்மதாபாத் மாநகர போலீஸ் கமிஷனர்.
ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கூட்டுப் படுகொலை நிகழ்த்துவதற்கு, உதவும் விதமாக போலீஸை செயலற்றதாக்கினார்.
அவர், 1000 முஸ்லிம்கள், அஹ்மதாபாத்தில் கொல்லப்பட்ட வழக்கில் ஆதாரங்களை அழித்ததும், தொடர்ந்து நடந்த போலி என்கவுண்டர்களில் பங்கு வகித்ததும் நிரூபணமானது.
2004-ஆம் ஆண்டு மார்ச் மாதம், அன்றைய பா.ஜ.க அரசு, இவரை சி.பி.ஐ கூடுதல் இயக்குநராக நியமித்தது.
இதற்கு எதிராக, மனித உரிமை ஆர்வலர், டீஸ்டா ஸெடல்வாட் உயர்நீதிமன்றத்தை அணுகினார்.
குஜராத் வழக்குகளின் விசாரணை பொறுப்புகளிலிருந்து, நீதிமன்றம் பாண்டேவை நீக்கியது.
2009ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பாண்டே, குஜராத் மாநில போலீஸ் வீட்டுவசதி வாரியத்தின் சேர்மனாக நியமிக்கப்பட்டார்.

தினமலர் செய்திக்கு, பேரூராட்சி தலைவர் அயூப் அலிகான் மறுப்பு அறிக்கை மற்றும் வக்கீல் நோட்டிஸ்:



கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பேரூராட்சி முஸ்லிம் தலைவர்










சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சி தலைவர் (சுயேச்சை) அயூப் அலி கான், தனது வேண்டுதல் நிறைவேறியதற்காக தாயமங்கலம் முத்துமாரியம்மனுக்கு, நேர்த்திக்கடனாக மூன்று கிடா வெட்டி பக்தர்களுக்கு வழங்கினார்.
உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட, அயூப் அலி கான் சீட் கேட்டிருந்தார்.
ஆனால், அ.தி.மு.க. தலைம, சீட் தரவில்லை.
அதிருப்தி அடைந்த அயூப் அலி கான், தலைவர் பதவிக்கு சுயேச்சையாக, களத்தில் இறங்கினார்.
அயூப் அலி கான் ஆதரவாளர்கள் தீவிரமாக வேலை செய்து, அயூப் அலி கானை வெற்றி பெறச்செய்தனர்.
இந்நிலையில், தலைவராக வெற்றி பெற்ற அயூப் அலி கான், தேர்தலில் தனது வேண்டுதல் நிறைவேறியதற்காக, அருகில் உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நேர்த்தி கடனாக மூன்று கிடா வெட்டி, தனது வெற்றிக்கு பாடுபட்டவர்கள் மற்றும் கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் சக்தி வாய்ந்தது.
எனது வேண்டுதலை நிறைவேற்றினால், அம்மனுக்கு கிடா வெட்டி நேர்த்தி கடன் செய்வதாக வேண்டியிருந்தேன்.
எனது வேண்டுதல் நிறைவேறியதால், அம்மனுக்கு கிடா வெட்டி அன்னதானம் செய்தேன், என்றார்.


இளையான்குடி பேருராட்சி தலைவர் அயூப் அலிகான், தினமலருக்கு வக்கீல் நோட்டிஸ்!

தினமலர் செய்திக்கு, பேரூராட்சி தலைவர் அயூப் அலிகான் மறுப்பு அறிக்கை மற்றும் வக்கீல் நோட்டிஸ்:-
15.11.2011 ஆம் தேதியிட்ட தினமலர் நாளிதழில், கிடா வெட்டி நேர்த்திகடன் செலுத்திய இளையான்குடி பேருராட்சி முஸ்லிம் தலைவர், என்ற தலைப்பில் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், என்னிடம் எவ்வித பேட்டியும் எடுக்காமல், பேட்டி எடுத்தது போல் பொய்யான மற்றும் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மாற்று மதத்தினை சேர்ந்த, எனது ஒரு சில நண்பர்கள், எனக்கு வாக்களித்த கிராமபுற மக்களுக்கு விருந்து வைத்தனர்.
பேருராட்சி தலைவர், என்ற முறையில் எனக்கு கொடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று, மதநல்லிணக்கத்துடன், அவ்விருந்தில் நானும் கலந்து கொண்டேன்.
எனவே, துவேச மனப்பான்மையுடன் தினமலர் நாளிதழில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தியை, யாரும் நம்ப வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், அவதூரான இச்செய்தியை வெளியிட்ட, தினமலர் நாளிதழின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க, வக்கீல் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அன்புடன்,
A.அயூப் அலி கான்
பேருராட்சி தலைவர்,
இளையான்குடி.


ஆர்.எஸ்.எஸ்-ற்கு பல்லக்கு தூக்கும் தினமலரின் மற்றுறொரு செய்தி

சென்னை: திருப்பூரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது எத்துனையோ சமூக, சமுதாய அமைப்புகள் களம் இறங்கி நிவாரணப்பணிகளில் ஈடுபட்டது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் என்ற ஒரு இயக்கம் மட்டுமே மீட்புப் பணிகளில் ஈடுபட்டது போன்ற செய்தியை வெளியிட்டிருக்கிறது தினம் மலர்  என்ற ஃபாசிஸ பத்திரிக்கை.

சமீபத்தில் திருப்பூரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும்பாலான மக்கள் அவதிப்பட்டு வீடுகளை இழந்து, உடமைகளை இழந்து மிகவும் சிறமப்பட்டனர். வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட அடுத்த நாள் முதலே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஈத் பெருநாள் என்று கூட பொருட்படுத்தாமல் களத்தில் இறங்கி மக்களுக்கான் நிவாரணப்பணிகளின் ஜாதி, மத பேதமின்றி பணியாற்றினர். சமீபத்தில் வெளியான புதிய தலைமுறை பத்திரிக்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் கூறும் போது "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவினர் தான் தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாது நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு எங்களை காப்பாற்றினார்கள்" என்று கூறியுள்ளார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மட்டுமல்லாது எண்ணற்ற சமூக இயக்கங்கள் இதிலே ஈடுபட்டு பணியாற்றினர். ஆனால் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத தினமலர் நாளிதழ் தனது தீவிரவாத முகத்திரையை மறைப்பதற்காக ஆர்.எஸ்.எஸ். போடும் வேஷங்களை வெளியிட்டு ஆர்.எஸ்.எஸ்-யை மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அமைப்பாக காட்ட முயல்கிறது தினமலர் பத்திரிக்கை. 

அரசாங்கம் என்னவோ தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றாலும் ஆர்.எஸ்.எஸ் என்ற ஒரு இயக்கம் மட்டுமே மக்களுக்காக சேவை செய்தது என்று கூறுகிறது தினமலர் பத்திரிக்கை.

வெள்ளம் புகுந்த அடுத்த நாள் காலை முதலே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள் அங்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்திற்கு குடி அமர்த்தும் வகையில் மண்டபம் ஒன்றை ஏற்பாடு செய்து அங்கே அவர்களை தங்க வைத்தது. அடுத்தபடியாக பல்லாயிரக்கணக்கான மக்களின் பசியை முதலில் போக்கும் வகையில் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆர்.எஸ்.எஸ் பண்டாரங்கள் அங்கே வந்து முஸ்லிம்கள் கொடுக்கும் உணவை வாங்காதீர்கள் என்று கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அம்மக்கள் ஒழுங்கு மரியாதையாக இந்த இடத்தை விட்டு செல்லுங்கள் என்று மிரட்டி, காரி உமிழ்ந்து அனுப்பியிருக்கின்றனர்.

அதே போன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உணவுகளை வழங்கும்போஒது ஜாதி, மத பேதமின்றி அனைவருக்கும் சேவையை புரிந்தது. ஆனால் இந்த ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் மதச்சாயம் பூசும் படியாக இந்துக்களுக்கு மட்டுமே சிறிதளவில் நிவாரணத்தை வழங்கி அதை பெருமிதத்துடன் தன்னுடைய தளத்தில் வெளியிட்டிருக்கிறது.

நாம் தினமலருக்கு கேட்கும் கேள்வி என்னவெனில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த வெள்ளிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் ஜும்மா தொழுகை நிறைவேற்றி விட்டு வந்தவர்களிடம் நிவாரணத்தொகை வசூலித்ததே! அந்த செய்திகள் உங்களுக்கு தெரியாதோ?

வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட அன்று ஈதுப்பெருநாளாக இருந்தும் திருப்பூர் முஸ்லிம்கள் பெருநாளை ரத்து செய்துவிட்ட அடுத்த நாள் கொண்டாடினார்களே! இந்த செய்தியும் உங்களுக்கு கிடைக்கவில்லையோ?

இப்படி ஆர்.எஸ்.எஸ்ற்காக பல்லக்கு தூக்கும் தினமலர் பத்திரிக்கையே! சமீபகாலமாக இந்தியாவில் நடக்கும் அனைத்து குண்டுவெடிப்புகளுக்கும் காரணம் ஆர்.எஸ்.எஸ் தான் என்ற உண்மை வெளிவந்து கொண்டிருக்கிறதே! அவற்றையெல்லாம் பத்திரிக்கை நடத்திக்கொண்டிருக்கும் உங்களுக்கு தெரியாமலா போய்விட்டது?

சமுதாய சொந்தங்களே! நடு நிலையானவர்களே! தினமலரின் இந்த அயோக்கியத்தனத்தை புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

செய்தி: முத்து





இந்துக்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்கும் ஆர்.எஸ்.எஸ்

Monday, November 14, 2011

அத்வானியின் ரதயாத்திரையில் அழுகிய முட்டை வீச்சு





புதுடெல்லி:பஞ்சாபில் எல்.கே.அத்வானியின் ஜனசேதனா ரத 

யாத்திரையை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் அழுகிய முட்டையை
 வீசினர். கறுப்புக் கொடியும் காட்டப்பட்டது. பஞ்சாபில் சங்கேரா 
கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.

சிரோமணி அகாலிதள்(அமிர்தரஸ்) மற்றும் சில முஸ்லிம் 

அமைப்புகள் ரதயாத்திரைக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
 இதனைத் தொடர்ந்து அத்வானியின் ரதயாத்திரை வாகனங்கள்
 செல்வது சிறிது நேரம் தடைப்பட்டது. அழுகிய முட்டை வீசப்பட்டதால்
 அசுத்தமான அத்வானி பயணித்த வாகனத்தை சுத்தப்படுத்திய பிறகு
 யாத்திரை தொடர்ந்தது.

பதிந்தா, ஸாங்க்ரூர் ஆகிய மாவட்டங்களிலும் அத்வானியின்

 ரதயாத்திரைக்கு எதிராக போராட்டம் நடந்தது.

Sunday, November 13, 2011

சட்டவிரோத சிறைக்கெதிரான போராட்டம் வலுக்கட்டும்!


இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய முஸ்லிம் இனப்படுகொலைக்கு தலைமை தாங்கிய நரேந்திரமோடிக்கு அமெரிக்காவிற்கு செல்ல விசா தர மறுத்தது ஜார்ஜ் w புஷ்ஷின் அரசாகும். மனித குல விரோதியான மோடிக்கு அமெரிக்கா தனது மண்ணில் கால்வைக்க அனுமதிக்காததில் தவறேதுமில்லை.

ஆனால் மனித உரிமைகளின் அப்போஸ்தலராக தன்னை காட்டிக்கொண்டு ஈராக், ஆப்கானிஸ்தான் மீது அநியாயமாக தாக்குதல்களை நடத்தி ஆயிரக்கணக்கானோரை கொலைச்செய்த புஷ்ஷின் கபட நாடகம் நகைப்பிற்கிடமானது என்பதில் இருவேறு கருத்து இல்லை.

இன்று மோடியை சுற்றிலும் சுருக்கு கயிறுகள் இறுகி வருகின்ற சூழலில் இன்னொரு நல்ல செய்தியும் மேற்கத்திய உலகிலிருந்து வருகிறது. ஜார்ஜ் w புஷ் என்ற உலகமகா பயங்கரவாதி செல்லுமிடமெல்லாம் அவரை கைதுச்செய்யக்கோரி மனித உரிமை அமைப்புகள் களமிறங்கியுள்ளன என்பதுதான் அந்த நல்லசெய்தி.

2002 ஜனவரி 11-ஆம் தேதி 20 கைதிகளைக்கொண்ட முதல் குழுவை அமெரிக்கா குவாண்டனாமோ என்ற காலக்கிரகத்திற்கு அனுப்பிவைத்தது. வருகிற ஜனவரி மாதம் இந்த மனித குல விரோத சிறைச்சாலைக்கும் அங்கு நடந்துவரும் கொடுமைகளுக்கும் 10 ஆண்டுகள் நிறைவுறுகின்றது.இந்த 10 ஆண்டுகளாக குவாண்டனாமோ சிறைக்கொட்டகையை இழுத்து மூடவேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுத்தான் வருகிறது.

மனித உரிமை அமைப்புகளும், பல்வேறு நாடுகளும் இந்த சித்திரவதை மையத்தை இழுத்து மூடவேண்டும் என கோரிக்கை வைத்தவேளையில் அதனை ஒப்புக்கொண்டு குவாண்டானோமோ சிறையை மூடுவேன் என வாக்களித்த பாரக் ஒபாமா பின்னர் அதிபராக பதவியேற்றவுடன் சந்தடிசாக்கில் கொடுத்த வாக்கை மறந்துபோனார்.

கடந்த வாரம் கனடாவில் நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொள்ள வந்த புஷ்ஷின் மீது அங்குள்ள மனித உரிமை வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தார்.கடந்த பெப்ருவரி மாதம் ஜெனீவாவிற்கு புஷ் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், அங்கு வழக்கு மிரட்டல் வந்ததைத்தொடர்ந்து தாம் கைதுச்செய்யப்படுவோம் என அஞ்சி அப்பயணத்தையே ரத்துச்செய்தார்.
தற்பொழுடு கனடா நாட்டில் பதிவுச்செய்யப்பட்டுள்ள வழக்கு வருகிற ஜனவரி மாதம் 9-ஆம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது.நான்கு பேரை கைதுச்செய்து அநியாயமாக கொடுமை இழைத்ததாக புஷ்ஷின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனித நேயத்திற்கு புறம்பான கொடூரங்களை கட்டவிழ்த்துவிட்ட புஷ்ஷின் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள மனித உரிமை அமைப்புகளின் சர்வதேச கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

கோட் பிங்க், ஆம்னஸ்டி யு.எஸ்.ஏ, வார் க்ரிமினல்ஸ் வாட்ச், வேல்ட் காண்ட் வெயிட் உள்பட ஒரு டஜன் அமைப்புகள் இணைந்து பிரச்சாரங்களை துவங்கியுள்ளன.சட்டவிரோதமாக சிறையில் அடைத்து சித்திரவதை செய்வதற்கு காரணமானவர்களை தண்டிக்கவேண்டும், குவாண்டனாமோவை மூடவேண்டும், அமெரிக்கா கைதுச்செய்த கைதிகளை மனித உரிமைகளை மதிக்கும் நாடுகளுக்கு அனுப்பி நீதியான விசாரணையை உறுதிச்செய்யவேண்டும் ஆகிய கோரிக்கைகளை மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்திவருகின்றன.

குவாண்டனாமோவும், அமெரிக்காவும், ஜார்ஜ் புஷ்ஷும் மட்டுமல்ல அமெரிக்காவின் பாணியை பின்பற்றும் இந்தியாவிலும் ரகசிய சிறைகளில் அப்பாவிகள் அநியாயமாக அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்படுவதும் உலகின் கவனத்திற்கு கொண்டுவரப்படவேண்டும்.சில ஆண்டுகளுக்கு முன்பு த வீக் பத்திரிகை இந்தியாவில் செயல்படும் ரகசிய சிறைகளைப்பற்றிய அதிர்ச்சியூட்டும் செய்தியை வெளியிட்டது.

ஆனால், அதனைக்குறித்து பேசுவதற்கு இந்தியாவின் அரசியல் கட்சிகளோ, ஊழலுக்கு எதிராக மல்லுக்கட்டிக்கொண்டு நிற்கும் காந்தீயவாத வேடம் புனைந்தவர்களோ முன்வரவில்லை.தற்பொழுது கூட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச்சார்ந்த செல்வி மாயாவதி ஆளும் உ.பி. மாநிலத்தில் அநியாயமாக கைதுச்செய்யப்பட்ட முஸ்லிம் சிறுவர்கள் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள செய்தி நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.

அதுமட்டுமல்ல குண்டுவெடிப்புகளின் பெயரால் கைதுச்செய்து சிறையிலடைக்கப்பட்டு வாழ்க்கையின் பல பகுதிகளை வீணாக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் நீதி மறுக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் வாழ்ந்துவருகின்றனர். குற்றம் புரிந்தவர்கள் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கும் வேளையில் அப்பாவிகள் தண்டனையை அனுபவிப்பதுதான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவில் நிகழும் அவலமாகும். ஆகவே இந்தியாவிலும் இத்தகைய மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உரத்த குரல்கள் எழவேண்டும்.

பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைகளை அனுபவித்துவரும் மனிதர்களுக்கு நீதி கிடைக்கவும், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படவும் சமூகத்தை விழிப்புணர்வு ஊட்டுவது அவசியமாகும். அதற்கான நல்லதொரு வாய்ப்பாக குவாண்டனாமோ பத்தாண்டு நிறைவு தினமான 2012 ஜனவரி 11-ஆம் தேதி வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக மாறட்டும்!


அ.செய்யது அலீ.

நன்றி: தூதுஆன்லைன்

பல விதமான இராமாயணக் கதைகள்...!


சமீபத்தில் அக்டோபர் 11 ஆம் தேதி அன்று டெல்லி பல்கழைக்கழகம் பி.ஏ பட்டாதாரிகளுக்கான பாடப்பிரிவில் இருந்து ஏ.கே. ராமானுஜம் என்பவர் எழுதிய "முன்னூறு விதமான இராமாயண கதைகள்" என்ற கட்டுரையை நீக்க முடிவெடுத்தது. இந்தியக்கலாச்சாரம் என்ற பாடத்தில் இடம்பெற்ற இந்த கட்டுரையில் இந்துக்கள் கடவுளாக வணங்கும் அவதாறப்புருஷணான இராமணுக்கு பல கதைகள் இருப்பதாக கூறுகிறது. பல்கழைகழகத்தின் நான்கு நிர்வாகிகள் ஒன்று கூடி விவாதித்த போது இறுதியாக இளநிலை பட்டாதாரி மாணவர்களால் கடவுளாகக் கருதப்படும் இராமனுக்கு இத்தகைய கதைகள் இருப்பதை மனதளவில் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே அதனை நீக்கி விடலாம் என்று முடிவெடுத்திருக்கின்றனர்.



 
பாடத்திட்டத்தில் இந்த கட்டுரை சேர்த்ததிலிருந்தே ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவ அமைப்பான ஏ.பி.வி.பி (அகில பாரதீய வித்யார்த்த பரிஷத்) மாணவர்களைக்கொண்டு கடந்த 2008ஆம் ஆண்டுகளில் போராட்டங்களிலும் வன்முறைகளிலும் ஈடுப்பட்டிருக்கிறது.

வரலாற்று ஆசிரியரான ஏ.கே. ராமானுஜம் எழுதிய "ராமானுஜம் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு" (ஆக்ஸ்ஃபோர்டு 1999) என்ற புத்தகத்தில் இருந்து இக்கட்டுரை எடுக்கப்பட்டது. 1993ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு ஒரு மாதம் கழித்து புனே நகரில் ஆர்.எஸ்.எஸ் குண்டர்களால் ஷாஹத் கண்காட்சி அடித்து நொறுக்கப்பட்டது. காரணம் இராமாயணம் பற்றிய விதவிதமான கதைகளை கொண்ட புத்தகங்கள் இடம்பெற்றிருந்ததால் ஆர்.எஸ். எஸ் குண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள். "ஜதகா" என்ற புத்த மத பதிப்புகளின் இராமனும் சீதையும் சகோதர சகோதரிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாம். இது அவர்களுடைய நம்பிக்கைக்கு அவமரியாதை ஏற்படுத்துகிறது என்று கூறி ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் அந்த பதிப்பகத்தையும் அடித்து நொறுக்கியுள்ளார்கள். ராமானுஜம் எழுதிய கட்டுரைகளில் இராமனுக்கு பலவிதாமான கதைகள் இருப்பதாக கூறுகிறார். அவைகளைப்பற்றி சிறிது பார்ப்போம்.!


பல்வேறு வகையான இராமாயணக்கதைகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு புத்த இராமாயணம், ஜெய்ன இராமாயணம், வால்மிகி எழுதிய இராமாயணம் என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. பவுலா ரிச்மான் என்ற பெண் எழுதிய "பல்வேறு விதமான இராமாயணங்கள்" என்ற புத்தக்கத்திலும் இவற்றைப்பற்றி விரிவாக கூறியுள்ளார். வால்மிகி எழுதிய இராமாயணத்தில் கூட பல்வேறு  விதமான விளக்கங்கள் கூறப்பட்டுள்ளது. பொதுவாக இந்த அரசியல் வாதிகள் தங்களது அரசியல் செல்வாக்கை உயர்த்திக்கொள்வதற்காக அத்தகைய விளக்கங்களை ஏற்றுக்கொள்வதில்லை. மத நம்பிக்கை என்று வெறுமனே வாய்வார்த்தையில் கூறுவிட்டு அரசியல் செல்வாக்கிற்காகவும், இந்துக்கள் மத்தியில் மத துவேஷத்தை ஏற்படுத்துவதற்காக மட்டுமே இராமன் என்கிற கதாபாத்திரத்தை உபயோகப்படுத்தி வருகிறார்கள். இந்து மதத்தில் மட்டுமே சகிப்புத்தன்மை இருப்பதாகவும் மற்ற மதங்களில் அதை காண முடியாது என்று வெற்றுப்பிரச்சாரங்களை செய்து வருகின்றனர்.


இராமாயணத்தை பற்றி கூறும் ஒவ்வொருவரின் விளக்கங்களையும் படித்து ஆராய்ந்து பார்த்தால் இராமாயணம் என்ற கதை எந்தளவிற்கு உண்மை என்பது தெரிந்துவிடும். வால்மிகி எழுதிய இராமாயணமாகட்டும், துலசிதாஸ் எழுதிய இராமாயணமாகட்டும் அல்லது தொலைக்காட்சி சேனல்களில் ராமானந்த் சாகர் தயாரிப்பில் ஒளிப்பரப்பப்படும் இராமாயணம் ஆகட்டும் இப்படி ஒவ்வொன்றும் மற்றொன்றோடு ஒப்பிட்டு பார்க்கும்போது பெருமளவில் வித்யாசப்படுகின்றன. இராமாயணக்கதைகள் இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு பெங்காளி, காஷ்மீரி, தாய், சின்ஹாலா, தமிழ், திபத்தியன், இது போக இன்னும் எண்ணற்ற மேற்கத்திய மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியம் தரும் செய்தி என்னவென்றால் இதில் ஒன்று கூட மற்றொன்றோடு பொருந்தவில்லை.


மற்ற மொழிபெயர்ப்புகளை ஏற்க மறுக்கும் இவர்கள் வால்மிகி எழுதிய இராமாயணத்தை மட்டுமே உண்மை என்று தங்களது அரசியல் இலாபத்திற்காக நம்புகின்றனர். அன்றைய கால ஜாதிமுறையையும், வர்ணாசிரமக்கொள்கையையும் மீண்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கும் இவர்கள் வால்மிகி எழுதிய இராமாயணத்தை மட்டும் ஏற்றுக்கொள்வதற்கான முக்கிய காரணமாகும்.


இராமாயணக்கதைகளில் உள்ள வித்தியாசங்களை ஒருவர் படிக்கும்போது சுவாரஸ்யமாகவும் அதே சமயம் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது. "தசரத ஜதகா" என்ற புத்த இராமாயணத்தை படிக்கும்போது அதில் இராமனுக்கு சீதா மனைவியாகவும் அதே சமயம் சகோதரியாகவும் இருந்திருக்கிறார் என்று கூறுகிறது. மேலும் இராமனின் தந்தையான தசரதன் அயோத்தியின் மன்னர் இல்லை என்றும் வாரனாசியின் மன்னர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சத்திரிய பாரம்பரியத்தில் தங்களது குலத்தூய்மையை பராமரிப்பதற்காகவும், தூய்மை படுத்துவதற்காகவும் சகோதரனும், சகோதரியும் திருமணம் செய்துகொள்வது பழக்கத்தில் இருந்து வந்ததாகவும் கூறுகிறது இந்த இராமாயணம். மேலும் இராமன் புத்தரை பின்பற்றினார் என்றும் கூறுகிறது.

அதே போன்று ஜெயின மத இராமாயணத்தில் இராமன் ஜெயின மத போதகராக இருந்தார் என்றும், அஹிம்சையை போதித்தார் என்றும் கூறுகிறது. புத்த மத இராமாயணத்திற்கும் ஜெயின மத இராமாயணத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமையானது இரு இராமாயணங்களும் இராவணனை யோக்கியவன் என்றும், ஆன்மீக முனிவராக இருந்தார் என்றும், நியாயமாக நடந்து கொண்ட ஒரு அரசர் என்றும், அறிவுள்ள கம்பீரமான அரசர் என்றும் கூறுகிறது.

தெலுங்கு பிராமணர்களின் பிரபல "இராமாயண பாடல்கள்" ஒன்றில் சூர்பனகை  இராமனை பழிவாங்கியதாக கூறுகிறது. தாய் மொழியில் உள்ள இராமாயணத்தில் சீத்தாவினால் அவமானம் இழந்த சூர்ப்பனைக்காக அவளது மகள் இராமனை பழிவாங்குவதாக கூறப்படுகிறது. இதில் ஆச்சரியத்தக்க செய்தி என்னவெனில் ஹனுமனை பற்றிக்கூறும்போது அவர் பிரம்மச்சாரி அல்ல என்றும், பயபக்தி கொண்டவன் அல்ல என்றும் ஆணாகவும் இல்லாமல், பெண்ணாகவும் இல்லாமல் இரண்டு கலந்த ஒரு படைப்பாக இருந்தான் என்றும் கூறுகிறது. அத்தோடு நிற்கவில்லை, இலங்கையில் உள்ள வீடுகளில் திருட்டுத்தனமாக படுக்கை அறையை உற்று நோக்குபவனாக இருந்தான் என்றும் கூறுகிறது. வால்மிகி, கம்பர் மற்றும் தமிழ் இதிகாசங்களில் வருகின்ற இராமாயணத்தை பொறுத்தவரை இன்னொருவரின் மனைவி தூங்கிக்கொண்டிருக்கும்போது கூட அவளை பார்ப்பது ஹனுமனை பொறுத்தவரை பாவச்செயலாகு. ஆனால் தாய் மொழியில் இருக்கின்ற இராமாயணத்தில் கதை வேறு விதமாக உள்ளது. அவ்வாறிருந்தும் ஹனுமன் இன்று வரை தாயை பொறுத்தவரை சிறந்த கதாநாயகனாக கருதப்படுகிறான். ஜெயின் இராமாயணத்தை போன்றே தாய் இராமாயணத்திலும் இராவணனின் வம்சாவழியே குறிப்பிடப்பட்டுள்ளது இராமனின் வம்சாவழியை அல்ல.
இராமாயணம் என்பது உயர் ஜாதியினரான பிராமணர்களுக்கும் கீழ் ஜாதியினர்களான ராக்ஷ்ர்களுக்கும் நடக்கும் யுத்தமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலாதிக்கத்தை உயர்த்தவே இவ்வாறான கதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

டாக்டர் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் வால்மிகி எழுதிய இராமயணத்தையே படித்திருந்தனர். இராமன் தலித்தாக இருந்த சம்புகனை கொன்றதே அம்பேத்கருக்கு இந்து மதத்தின் மீதும் இராமாயணத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியது. இராமாயணம் பற்றி அம்பேத்கர் கேள்வி எழுப்பும் போது சீதை கற்பமடைந்தபோது அவளுக்கு எதிராக வந்த வதந்திகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்ற ரீதியில் அவளை அக்னிபரிட்சை செய்ய சொன்னது எந்த வகையில் நியாயம்? என்று கேட்டுள்ளார். இராவனனை ஒழித்து சீதையை மீட்டுக்கொண்டு வந்ததது சீதைக்காக அல்லாமல் தன்னுடைய கவுரவத்திற்காகத்தான் என்று இராமன் கூறுகிறான்.

இராமாயணத்தை பற்றி தந்தை பெரியார் கூறும் போது வட இந்திய ஆரியர்களுக்கும் தென் இந்திய திராவிடர்களுக்கும் இடையே நடந்த போரை இராமாயணம் என்கிற பெயரில் ஏற்படுத்தியிருக்கிறார்கள். திராவிடர்களை கீழ் ஜாதியினர் என்றும் ஆரியர்களை உயர் ஜாதியினர் என்று விவரிக்கும் இராமாயணத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். சுய மரியாதை இயக்கத்தை தொடங்கிய தந்தை பெரியார் தீண்டாமை கொள்கையை விதைக்க நினைக்கும் இராமாயணத்திற்கு எதிராக தமிழகத்தில் கடுமையான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.


மனுஸ்மிதியை எதிர்த்த அம்பேத்கர் ஒரு முறை இராமனின் புகைப்படத்தை தீயிட்டு கொழுத்த முயன்றார். அம்பேத்கரை பொறுத்தவரை இராமன் என்ற கதாபாத்திரம் தலித் மக்களை அடிமைபடுத்த நினைக்கும் உயர் ஜாதி இந்து என்றே எண்ணினார். பெரியார் இராமாயணத்தை பற்றி மேலும் கூறுகையில் இராவணம் ஒரு திராவிடன் என்றும் தனது தங்கை சூர்பனகை இராமனால் அவமானத்திற்கு ஆளாக்கப்பட்டதன் விளைவே இராமனை பலிவாங்குவதற்காக சிதையை கடத்தினான். மற்றபடி இராவணன் நல்லவன் என்றும், சிறந்த ஆட்சியாளனாக விளங்கினான் என்றும் கூறுகிறார்.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதனோடு தொடர்புகொண்ட அரசியல் வாதிகளின் தலையீட்டால் தான் இராமாயணம் பற்றிய இந்த செய்திகள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

இராமன் என்பவன் யார்? எத்துனை ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவன்? அவன் வாழ்ந்ததற்கான வரலாற்றுச்சான்றுகள் எதாவது உள்ளதா? என்று பார்க்கும் போதும், இராமாயணம் பற்றிய வெவ்வேறு கதைகளை பார்க்கும்போதும் இது வெறும் கட்டுக்கதையே என்பது தெளிவாகிறது. வெறும் நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு  ஒரு சமூகத்திற்கு எதிராக இவர்கள் தொடுத்து வரும் போர் இவர்களுக்கே கேடாக அமையும் என்பதை வெகு சீக்கிரமே உணர்ந்து கொள்வார்கள்.


இராமன் தான் எனது கடவுள், அவர் ஒரு அவதாரப்புருஷன், இராமர் கோயிலை அயோத்தியில் கட்டியே தீருவோம் எனறு ரதயாத்திரை நடத்தி 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு காரணமாயிருந்த அத்வானியின் வீட்டு பூஜை அறையில் இராமர் சிலையே கிடையாதாம்! என்பது கூடுதல் தகவல்.


நன்றி : டூசர்கில்ஸ்
தமிழில்: முத்து