Monday, November 21, 2011

தினமலர் செய்திக்கு, பேரூராட்சி தலைவர் அயூப் அலிகான் மறுப்பு அறிக்கை மற்றும் வக்கீல் நோட்டிஸ்:



கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பேரூராட்சி முஸ்லிம் தலைவர்










சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சி தலைவர் (சுயேச்சை) அயூப் அலி கான், தனது வேண்டுதல் நிறைவேறியதற்காக தாயமங்கலம் முத்துமாரியம்மனுக்கு, நேர்த்திக்கடனாக மூன்று கிடா வெட்டி பக்தர்களுக்கு வழங்கினார்.
உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட, அயூப் அலி கான் சீட் கேட்டிருந்தார்.
ஆனால், அ.தி.மு.க. தலைம, சீட் தரவில்லை.
அதிருப்தி அடைந்த அயூப் அலி கான், தலைவர் பதவிக்கு சுயேச்சையாக, களத்தில் இறங்கினார்.
அயூப் அலி கான் ஆதரவாளர்கள் தீவிரமாக வேலை செய்து, அயூப் அலி கானை வெற்றி பெறச்செய்தனர்.
இந்நிலையில், தலைவராக வெற்றி பெற்ற அயூப் அலி கான், தேர்தலில் தனது வேண்டுதல் நிறைவேறியதற்காக, அருகில் உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நேர்த்தி கடனாக மூன்று கிடா வெட்டி, தனது வெற்றிக்கு பாடுபட்டவர்கள் மற்றும் கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் சக்தி வாய்ந்தது.
எனது வேண்டுதலை நிறைவேற்றினால், அம்மனுக்கு கிடா வெட்டி நேர்த்தி கடன் செய்வதாக வேண்டியிருந்தேன்.
எனது வேண்டுதல் நிறைவேறியதால், அம்மனுக்கு கிடா வெட்டி அன்னதானம் செய்தேன், என்றார்.


இளையான்குடி பேருராட்சி தலைவர் அயூப் அலிகான், தினமலருக்கு வக்கீல் நோட்டிஸ்!

தினமலர் செய்திக்கு, பேரூராட்சி தலைவர் அயூப் அலிகான் மறுப்பு அறிக்கை மற்றும் வக்கீல் நோட்டிஸ்:-
15.11.2011 ஆம் தேதியிட்ட தினமலர் நாளிதழில், கிடா வெட்டி நேர்த்திகடன் செலுத்திய இளையான்குடி பேருராட்சி முஸ்லிம் தலைவர், என்ற தலைப்பில் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், என்னிடம் எவ்வித பேட்டியும் எடுக்காமல், பேட்டி எடுத்தது போல் பொய்யான மற்றும் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மாற்று மதத்தினை சேர்ந்த, எனது ஒரு சில நண்பர்கள், எனக்கு வாக்களித்த கிராமபுற மக்களுக்கு விருந்து வைத்தனர்.
பேருராட்சி தலைவர், என்ற முறையில் எனக்கு கொடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று, மதநல்லிணக்கத்துடன், அவ்விருந்தில் நானும் கலந்து கொண்டேன்.
எனவே, துவேச மனப்பான்மையுடன் தினமலர் நாளிதழில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தியை, யாரும் நம்ப வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், அவதூரான இச்செய்தியை வெளியிட்ட, தினமலர் நாளிதழின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க, வக்கீல் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அன்புடன்,
A.அயூப் அலி கான்
பேருராட்சி தலைவர்,
இளையான்குடி.


No comments:

Post a Comment