Tuesday, February 28, 2012
குஜராத் குல்பர்கா சொசைட்டி விரைவில் நினைவுச் சின்னமாக!
28 Feb 2012
அஹமதாபாத்:’ககன் சேதி’ எனும் சமூக நீதி மையம் அஹ்மதாபாத்தில் ஆர்.சி. தொழில்நுட்பக் கல்லூரியின் எதிரில் குஜராத்தில் படுகொலை செய்யப்பட்டவர்கள் மற்றும் இதுவரை நடந்துள்ள மோதல்கள் குறித்த அரங்கம்(conflictorium) ஒன்று துவங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் இதற்கு தனது பல கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாவை அளித்த பார்சி பெண்மணிக்கு தாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
கிழக்கு ஜெருசலத்தில் யூத மயமாக்கல்: ஐ.நா விசாரிக்க கத்தர் கோரிக்கை!
28 Feb 2012
தோஹா:கிழக்கு ஜெருசலத்தை யூத மயமாக்குவதை குறித்து ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்தவேண்டும் என்று கத்தர் கோரிக்கை விடுத்துள்ளது. கத்தர் நாட்டின் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஆப்கான்:விமானநிலையம் அருகே குண்டுவெடிப்பு: ஒன்பது பேர் மரணம்!
28 Feb 2012
காபூல்:நேட்டோ ராணுவ வீரர்களை குறிவைத்து கிழக்கு ஆப்கானிஸ்தான் விமானநிலையம் அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலிய சிறையில் பலஸ்தீனப் பெண் உண்ணாவிரதம்
30 வயதான ஹனா ஷலபி 12 நாட்களாக சாப்பிடுவதற்கு மறுப்புத் தெரிவித்து வருகிறார். இஸ்ரேலிய சிறையில் தடுத்துவைக்கப்பட்டு உண்ணாவிரதம் இருக்கும் இரண்டாவது கைதி இவர் என அவரது சட்டத்தரணியும், பலஸ்தீன சிறைக் கைதிகளது அமைப்பும் தெரிவித்துள்ளமை கவனிக்கத்தக்கது.
காஸ்ஸாவில் ஊடுருவும் இஸ்ரேலிய போர் விமானம்
28 Feb 2012
காஸ்ஸா:கடந்த வாரம் மட்டும் மூன்று முறை இஸ்ரேல் போர் விமானம் காஸ்ஸாவில் ஊடுருவியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது.
Monday, February 27, 2012
அமெரிக்க தன்னார்வ தொண்டு உறுப்பினர்கள் மீதான விசாரணை துவங்கியது!
27 Feb 2012
கெய்ரோ:வெளிநாட்டு பணத்தை உபயோகித்து எகிப்தில் பிரச்சனையை உருவாக்க முயன்றதாக குற்றம் சாட்டி போலீஸ் கைது செய்த 19 அமெரிக்கர்கள் உள்பட 43 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்கள் மீதான விசாரணை துவங்கியுள்ளது.
ஆப்கான்:அமெரிக்க ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்றவர் போலீஸ் அதிகாரி?
27 Feb 2012
காபூல்:ஆப்கானிஸ்தானில் உள்துறை அமைச்சகத்தில் 2 அமெரிக்க ராணுவ வீரர்களை சுட்டுக்கொலை செய்தவர் போலீஸ் இண்டலிஜன்ஸ் அதிகாரி என்று சந்தேகிப்பதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு 80 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு ஐக்கிய அமெரிக்க இராணுவ வீரர் தற்கொலை
27 Feb 2012
வாஷிங்டன்:வாஷிங்டன்னில் ‘தி ஹப்பிங்டன் போஸ்ட்’ என்ற பத்திரிகையில் ‘ராணுவத்தில் தற்கொலை சவால்: போரில் தோல்வி’ என்ற தலைப்பில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
திருக்குர்ஆன் எரிப்பு தாலிபானுடனான பேச்சு வார்த்தையை பாதிக்கும் – ஈரான் தூதர்
27 Feb 2012
காபூல்:அமெரிக்க இராணுவ படையினரால் முஸ்லிம்களின் புனித திருமறையான திருக்குர்ஆன் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து உருவான கொந்தளிப்பு வாஷிங்டன்-தாலிபான் சமாதான பேச்சுவார்த்தையை பாதிக்கும் என்று ஈரான் தூதர் காபூல் பதா ஹூசைன் மாலேகி தெரிவித்துள்ளார்.
திருக்குர்ஆன் எரிப்பு தாலிபானுடனான பேச்சு வார்த்தையை பாதிக்கும் – ஈரான் தூதர்
27 Feb 2012
காபூல்:அமெரிக்க இராணுவ படையினரால் முஸ்லிம்களின் புனித திருமறையான திருக்குர்ஆன் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து உருவான கொந்தளிப்பு வாஷிங்டன்-தாலிபான் சமாதான பேச்சுவார்த்தையை பாதிக்கும் என்று ஈரான் தூதர் காபூல் பதா ஹூசைன் மாலேகி தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களுக்கு எதிரான இந்த அத்துமீறலுக்கு அவர் கண்டனம் தெரிவித்ததோடு, இவர்களின் இந்த செயலால் அமெரிக்கா மிகுந்த பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களை அவமதிப்பது அமெரிக்காவுக்கு புதிதல்ல என்றாலும், இந்த சம்பம்வம் பெரும் எதிர் வினைகளை விளைவிக்க கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அத்துமீறல் கத்தாரில் நடக்கவிருக்கும் அமெரிக்கா மற்றும் தாலிபானின் பேச்சுவார்த்தையில் பாதிப்பை ஏற்ப்படுத்தும் என்றும் ஈரான் தூதர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவத்திற்கு ஆஃப்கன் பிரதமர் ஹமீத் ஹர்சாய்க்கு மன்னிப்பு கடிதம் அனுப்பிய அமெரிக்க பிரதமர் பராக் ஒபாமா, அதில் இந்த சம்பவம் எந்த உள்நோக்கதுடனும் நடக்கவில்லை என்றும், அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளுக்கும் ஏற்ப்பட்ட கோபத்தின் காரணமாகவே நடந்துள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனால் அவரது மன்னிப்பை ஏற்காத ஆஃப்கன், உடனடியாக அனைத்து வெளிநாட்டு படைகளையும் ஆஃப்கனிலிருந்து திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
நன்றி தூது ஆன்லைன்
எகிப்து:பாராளுமன்ற துணை சபைக்கான தேர்தலிலும் இஃவான்களுக்கு மகத்தான வெற்றி!
27 Feb 2012
கெய்ரோ:எகிப்து பாராளுமன்ற கீழ் சபைக்கான தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய இஃவானுல் முஸ்லிமீனின் அரசியல் பிரிவான ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் பார்டி பாராளுமன்ற துணைச் சபையான ஷூரா(ஆலோசனை) கவுன்சில் தேர்தலிலும் மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. மேலும் இன்னொரு இஸ்லாமிய கட்சியான அந்நூர் 2-வது இடத்தை பிடித்துள்ளது.
துருக்கி மேலாக பறக்கும் இஸ்ரேலிய விமானங்கள் வெடிக்குமா?
இஸ்ரேலிய கார்கோ விமானங்கள் தமது நாட்டு வான்பரப்பை உபயோகிப்பதை தடுக்கத் தொடங்கியுள்ளது துருக்கி. இஸ்ரேலிய கார்கோ விமானங்களில் அபாயகரமான பொருட்கள் (dangerous materials) ஏற்றிச் செல்வதால், தமது வான் பரப்பை உபயோகிப்பதை தடை செய்வதாக காரணம் தெரிவித்துள்ளது.
துருக்கியின் இந்தத் தடை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல், இஸ்ரேலிய விமான நிறுவனங்களான எல்-அல் இஸ்ரேலி ஏர்லைன்ஸ், மற்றும் சி.ஏ.எல். கார்கோ ஏர்வேஸ் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
முஹம்மது நபியை குறித்து இயேசு முன்னறிவிப்புச் செய்யும் பைபிள் கண்டுபிடிப்பு!
27 Feb 2012
அங்காரா:இஸ்லாத்தின் இறுதி தூதரான முஹம்மது நபியை குறித்து இயேசு(ஈஸா நபி) முன்னறிவிப்புச் செய்யும் 15 நூற்றாண்டுகள் பழமையான பைபிள் துருக்கியில் கண்டெடுக்கப்பட்டது.
பர்ணபாஸின் சுவிசேஷம் என்று அழைக்கப்படும் இந்த நூல் 12 ஆண்டுகளாக துருக்கியில் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. பைபிளில் கூறப்படும் பர்ணபாஸ் இயேசுவின் முக்கிய சீடராவார்.
சென்னை என்கவுன்டரில் சந்தேகம்… விசாரணைக்கு உத்தரவிட்டார் நிதீஷ் குமார்!
பாட்னா: சென்னையில் வியாழக்கிழமை நடந்த என்கவுன்டரில் கொல்லப்பட்ட 4 பீகார் இளைஞர்கள் விவகாரத்தில், தமிழக போலீசார் சொல்லும் தகவல்கள் முரணாக இருப்பதாலும், கொல்லப்பட்டதாக கூறப்படுபவர்கள் பீகாரில் உயிருடன் இருப்பதாலும் முறையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் பீகார் முதல்வர் நிதீஷ் குமார்.
இந்த விசாரணையை பீகார் மாநில டிஜிபி தலைமையிலான போலீசார் மேற்கொள்வார்கள்.
சென்னை வேளச்சேரியில் என்கவுன்டர் செய்யப்பட்ட 5 வங்கிக் கொள்ளையர்களில் 4 பேர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தமிழக காவல்துறை அறிவித்தது.
Thursday, February 23, 2012
கோவா கடற்கரை இஸ்ரேலியர்கள்-ரஷ்யர்களால் ஆக்கிரமிப்பு !
பனாஜி : இந்தியாவின் புகழ் பெற்ற சுற்றுலா தலமான கோவாவின் கடற்கரை கிராமங்களை இஸ்ரேலியர்கள் மற்றும் ரஷ்யர்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும் இந்நிலை தொடர்வது அபாயகரமானது என்றும் இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் ராஜ்யசபா உறுப்பினர் சாந்தாராம் நாயக் கூறினார்.
”கோவாவின் சில கடற்கரை கிராமங்களை ரஷ்யர்களும் இஸ்ரேலியர்களும் முழுமையாய் ஆக்கிரமித்துள்ளனர் இது ஆரோக்கியமான சுற்றுலா அல்ல. ஏனென்றால் அப்பகுதி முழுவதையும் அவர்கள் பெரும் பணம் கொடுத்து தங்கள் வயப்படுத்தியுள்ளதோடு நம் நாட்டின் சட்டங்களுக்கு முரணாக பல்வேறு பண பரிவர்த்தனைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்” என்றார் சாந்தாராம் நாயக்.
கோவாவின் விலை மதிப்பில்லா இடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறிய நாயக் எந்த கோவாவின் கிராமமும் இந்திய கிராமமாக இருக்க வேண்டுமே தவிர இஸ்ரேலிய கிராமம் அல்லது ரஷ்யன் கிராமம் என்று அழைக்கப்படும் நிலை உருவாக கூடாது என்றார்.
at 6:55:00 PM
Posted by Kuwait India Fraternity Forum Labels: இந்தியா
ஹரியானா குண்டுவெடிப்பு: கண்காணிப்பில் 2 சன்னியாசி ஆசிரமங்கள்!
23 Feb 2012
புதுடெல்லி:ஹரியானா மாநிலம் ஜிந்தில் முஸ்லிம்களை கூட்டாக படுகொலைச் செய்யும் சதித் திட்டத்துடன் குண்டுவெடிப்பை நிகழ்த்திய ஆஸாத் சங்காடன் என்று ஹிந்துத்துவா பயங்கரவாத கும்பலை கைது செய்ததன் பின்னணியில் மேவாத் நூஹ் மெஹ்ஸில் ஆசிரமத்தை நடத்திவரும் சுவாமி தயானந்தை போலீஸ் கண்காணித்து வருகிறது.
முஸ்லிம் மஸ்ஜிதுகளிலும், மத்ரஸாக்களிலும் குண்டுவெடிப்பை நிகழ்த்த தங்களுக்கு பணத்தை அளித்து தூண்டியது தயானந்தா என்று இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீஸார் இந்த ஆசிரமத்தை கண்காணித்து வருகின்றனர். அத்துடன் ஆசிரமத்தில் நடக்கும் நிகழ்வுகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தயானந்தாவின் ஆசிரமத்துடன் ஜிந்தில் உள்ள உச்சனாவில் சுவாமி கோரக்ஷானந்தின் ஆசிரமத்தையும் போலீஸ் கண்காணித்து வருகிறது. கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கோரக்ஷானாந்தின் ஆசிரமத்தில் நிரந்தரமாக சென்றுவந்தார்கள் என்று போலீஸ் கூறுகிறது.
சாகர்,காலா என்ற பெயர்களில் அழைக்கப்படும் ஆஸாத் என்பவன் தான் இந்த ஹிந்துத்துவா தீவிரவாத கும்பலின் தலைவன் ஆவான். பிரவீன் சர்மா, ராம்நிவாஸ், குர்ணாம்சிங், ராகேஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருடர்கள் என சந்தேகித்து இவர்களை கைது செய்து விசாரணை நடத்திய பொழுது ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் என்பது தெரியவந்தது. இவர்களை தவிர கிஸ்மத் சுரேந்தர், அஜய், பவன், ஸோனு ஆகியோருக்கும் இந்த ஹிந்துத்துவா தீவிரவாத குழுவுடன் தொடர்பிருப்பதாக போலீஸ் கண்டுபிடித்துள்ளது.
நன்றி தூது ஆன்லைன்
பணிப் பெண்ணிடம் பாலியல் வன்புணர்வு முயற்சி: சிவில் நீதிபதிக்கு போலீஸ் வலை!
23 Feb 2012
ஹைதராபாத்:வேலியே பயிரை மேய்ந்த கதைகளுக்கு இந்தியாவில் பஞ்சம் ஏது? காவல்நிலையங்களில் கொலைகளும், பாலியல் வன்புணர்வுகளும் நடந்த செய்திகள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் வீட்டு பணிப் பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு முயன்ற சிவில் நீதிமன்ற நீதிபதியை போலீஸ் தேடி வருகிறதாம்.
ஆந்திர மாநிலம் மெகபூப் நகர் மாவட்டம் கிங்கின் ஜமெட்ல தன்டா பகுதியைச் சேர்ந்தவர் குரவத் பாலசந்தர். அவர் சட்டபள்ளி நகரில் உள்ள நீதிமன்றத்தில் சிவில் நீதிபதியாக உள்ளார்.
அவரது வீட்டில் வேலை பார்க்கும் பெண் 24 வயதாகும் கலா (பெயர் மாற்றம்). அவர் பார்க்க அழகாக இருப்பதால் அவர் மீது நீதிபதிக்கு மோகம் ஏற்பட்டது. அவரை எப்படியும் அடைந்தே தீர வேண்டும் என்று நீதிபதி நினைத்தார். ஆனால் வீட்டில் அனைவரும் இருப்பதால் தனது திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் இருந்தது.
இந்நிலையில் நீதிபதியின் குடும்பத்தார் அவரை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு வெளியூர் சென்றனர். இது தான் சமயம் என்று நீதிபதி வேலைக்காரப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார். இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். நீதிபதியிடம் இருந்து தப்பித்து வீட்டை விட்டு வெளியே ஓடிவிட்டார். உடனே இது குறித்து கம்மம் டி.எஸ்.பி. ரங்கன் கௌடிடம் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீசார் 354வது பிரிவின் கீழ் நீதிபதி பாலச்சந்தர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே பாலசந்தர் நேற்று மதியம் முதல் ஒரு வாரம் விடுமுறை எடுத்துக் கொண்டு வெளியூர் சென்றுவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நன்றி தூது ஆன்லைன்
புனித திருக்குர்ஆன் பிரதி எரிப்பு: ஆப்கான் கொந்தளிக்கிறது – 5 பேர் பலி!
23 Feb 2012
காபூல்:நேட்டோ ராணுவத்தினர் உலக மனித சமூகத்திற்கு நல்லுபதேசமாக திகழும் புனித திருக்குர்ஆனின் பிரதியை எரித்த சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆப்கானின் பல்வேறு பகுதிகளில் ஐந்து பேர் பலியானார்கள்.
போராட்டம் தொடரும் இரண்டாவது தினமான நேற்று காபூலில் அமெரிக்க கேம்ப் ஃபீனிக்ஸிற்கு செல்லும் ஹைவேயில் பொதுமக்கள் தடை ஏற்படுத்தினர். போலீசார் மீது கல்வீசி தாக்கிய மக்கள் கார்களின் கண்ணாடிகளை உடைத்தனர்.
இன ரீதியான பாகுபாடு: இந்திய மருத்துவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு
23 Feb 2012
ஹூஸ்டன்:அமெரிக்காவில் இனரீதியான அவமதிப்பை சந்தித்த இந்திய மருத்துவர்களுக்கு டெக்ஸாஸ் நீதிமன்றம் ஆதரவான தீர்ப்பை வழங்கியுள்ளது. அமெரிக்காவில் மெடிக்கல் சென்டர் சி.இ.ஒ, இந்திய மருத்துவர்களை 2-ம் தர குடிமக்களாக நடத்தியதாக குற்றம்சாட்டி வழக்கு தொடரப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)