Thursday, March 20, 2014

அரசியலில் இஸ்லாமியர்களின் நிலை என்ன?


    2014இல்   இந்தயாவின் 16வது பாராளுமன்ற தேர்தல் உலகமே  இந்தியாவை பார்த்துகொண்டிருடிருக்கிறது அடுத்து பிரதமர் யார் என்று ?

   கடந்த காலங்களில் இஸ்லாமிய சமூகம் தங்களுக்கு எதிரியான் பா.ஜ.க வந்துவிட கூடாது என்ற காரணத்தால் காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களித்து வந்தார்கள். ஆனால் 1992 பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது ஆட்சியில் காங்கிரஸ்தான் இருந்தது. காங்கிரஸ் நினைத்திருந்தால் பாபரி மஸ்ஜிட்தை இடிப்பதிலிருந்து தடுத்திருக்கலாம். இடிக்கப்பட்ட பின் பாபரி மஸ்ஜித் பள்ளியை கட்டித்தருவதாக வாக்களித்து இதுவரைக்கும் தனது வாக்குறுதியை நிலைநாட்டவில்லை .

      முஸ்லிம்கள் கல்வி, வேலை வாயய்ப்பு  போன்ற நிலைகளை ஆராய அமைத்த சச்சார் கமிட்டி அளித்த  பரிந்துரைகளில்  முஸ்லிம் இடஒதிக்கீடு தொடர்பான  பரிந்துரைகளை  பாராளுமன்றத்தில் அணனத்து கட்சிகளும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே நிறைவேற்றுவதாக காங்கிரஸ் கூறுகிறது. பா.ஜ.க போன்ற கட்சிகள் இருக்கும்போது எப்படி ஆதரவு கிடைக்கும். ஆனால் தனக்கு தேவை என்றுள் அவசர சட்டம் கொண்டுவந்து நிரைவேற்றும் அனைத்து கட்சிகள் எதிர்த்தாலும் கூட நிறைவேற்றியே தீரும் .
     
      இது ஒரு புறம் இருக்க முஸ்லிம்களை அழித்தொழிப்பதையே குறிக்கோளாக செயல் பட்டுக்கொண்டிருக்கும் பா.ஜ.கவை பொறுத்தவரை தனது முதல் தேர்தலில் 1980 ல்  ஒரு பாராளுமன்ற  உறுப்பினர் கூட வெற்றிபெறவில்லை. அடுத்தடுத்து தேர்தல்கள் முறையே 2,85,120,161,182,144,116 இடங்களை பிடித்தது. 1998,1999 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்தது. அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி 2002 இல் குஜராத் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு இனப் படுகொலையை அரங்கேற்றியது. 2000 த்திற்கும் மேற்ப்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டர்கள். பல ஆயிரம் கோடி மதிபிப்லான சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன. நூறுக்கும் மேற்ப்பட்ட பெண்கள் கர்ப்பளிக்கப்பட்டனர்.
    
     இதனை தெஹல்கா பத்திரிகையின் ஆசிரியர் குற்றவாளிகள் தங்கள் வாயினாலே உண்மையை கூறிய வீடியோ வெளியிட்டும், அவர்கள் சுதந்திரமாக உலாவிகொண்டிருக்கிறர்கள். இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அழிக்க அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் போது அநீதியால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவதை கடமையாக கொண்ட முஸ்லிம் சமுகம் தனது வரலாறு தெரியாமல் சிறுமையடைந்தது .                                                                                                                                                          
   வருகின்ற பாராளுமன்ற தேர்தல் உலகமே  இந்தியாவை பர்த்துகொண்டிருடிருக்கிறது அடுத்து பிரதமர் யார்? என்று பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் நமது இஸ்லாமிய சமுகத்தின் நிலைமையை சற்று பார்க்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு போன்ற விகிதாச்சாரத்தில் தலித்களை விட பின்தங்கியுள்ளதாக நீதியரசர் சச்சார் அறிக்கையில் குறிப்பிடுகிறார். இந்திய பாராளுமன்றத் தேர்தலில் மிகவும் பின்தங்கிய நிலையில் 1,2  பாராளுமன்ற  உறுப்பினர்கள் தான் முஸ்லிம் உறுப்பினர் உள்ளனர். அதற்கு மேல் முஸ்லிம் பெயர் தாங்கீகலாகத்தான்  உள்ளனர்.

       இந்திய மக்கள் தொகையில் 13% அரசு கணக்கின் படி மொத்தம் உள்ள 543 முஸ்லிம்கள் தங்கள் விகிதாச்சாரம்  71 பாராளுமன்ற  உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இது ஒரு புறம் இருக்க மக்கள் செறிவு மற்றும் தலித், பிற்படுத்தப்பட்டோர் ஆதரவுடன் 120  பாராளுமன்ற  உறுப்பினர்களை பெற முடியும். மேற்கு வங்கத்தில் 25%, உ.பி 18%, அஸ்ஸாம்  30%, லச்சதிவு  95%, கேரளத்தில் 24%, பீகார் 16% போன்ற மாநிலங்களில் ஆட்சியை கூட பிடிக்கமுடியும். ஆனால் முஸ்லிம் சமுகம் தனது பலம் தெரியாமல் சிறுபான்மை என்ற எண் ணத்துடன் சிருமையடைந்துள்ளது.

        1998 பா.ஜ.க  அதிமுக  கட்சி 18 பாராளுமன்ற  உறுப்பினர் ஆதரவு பெற்று ஆட்சி அமைத்தது. 13 நாட்களே ஆன நிலையில்   அதிமுக தனது ஆதரவை வாபஸ் வாங்கியது.  இதனால் பா.ஜ.க ஆட்சி இழந்தது. 2004,2009 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆதரவு கொடுத்து முறையே 16,18 இடங்களை பெற்ற திமுக கட்சி தனக்கு தேவையான துறைகளை மந்தரிகளாக தனது பாராளுமன்ற  உறுப்பினர் இடம் பெற செய்தது. 


      இப்படி இருக்கையில் முஸ்லிம்கள் 71க்கும் மேற்பட்ட பாராளுமன்ற  உறுப்பினர் முஸ்லிம்கள் பெற்றால் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் தலித், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் எதிராக நடைபெறும் அனிதிகளை தடுப்பது மட்டுமல்லாமல் அன்னத்து மக்களுக்கும் சமநீதியை பெற்று தரமுடியும்.  

   காந்தியடிகள் இந்தியாவில் உமர்(ரலி) போன்று ஆட்சியாலார்த்தான் தேவை என்று கூறியுள்ளார். உமர்(ரலி) போன்று ஆட்சி செய்ய வேண்டும் என்றால் உமர்(ரலி) போன்று இஸ்லாத்தை கடைபிடிக்கும் முஸ்லிம்கள் மட்டும்தான் அதனை செய்யமுடியும். 

    முஸ்லிம் சமுகம் தனது சக்தியை உணர்ந்து செயல்படும் காலகட்டத்தில் உள்ளது. 
                                                                                                                                                                                                                                                                          - சாமானியன்