புதன்கிழமை, 07 டிசம்பர் 2011 14:11 வாசிப்புக்கள்: 62 பகுதி: செய்திகள் - உலக செய்திகள்
வளைகுடா நாடான குவைத்தின் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச தொலைக்காட்சி அறிவித்துள்ளது. தேசிய நலன்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பதைக் காரணம்காட்டியே குவைத் அமீர் ஷெய்க் ஸபாஹ் அல்-அஹ்மத் அல்-ஸபாஹ் இதற்கான பணிப்புரையை விடுத்துள்ளார்.
ஆறு வருடங்களுள் நான்காவது முறையாக குவைத் பாராளுமன்றம் கலைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் குவைத்தின் அமைச்சரவை அரசியல் நெருக்கடி காரணமாக ராஜினாமாச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் அந்நாட்டுப் பிரதமரும் ராஜினாமாச் செய்திருந்தார்.
குவைத்தின் பிரதமர் பதவி விலக வேண்டும் என மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றும் இதற்கு முன்னர் இடம்பெற்றிருந்தது.
No comments:
Post a Comment