Wednesday, August 8, 2012

மேட்டுப்பாளையம் இராணுவ வாகனம் விபத்து மீட்புபணியில் பாப்புலர் ப்ரண்ட்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அரவன்காட்டில் உள்ள ராணுவ மையத்தை சேர்ந்த சரவணன் -32 என்பவர் மேகாலய  மாநிலத்தில் மரணமடைந்தார் .அவரின் உடல் கோவை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. அவரின் உடலை வாங்கி சென்ற ராணுவ வாகனம் மேட்டுப்பாளையம் அன்னூர் ரோட்டில் நாலு ரோடு அருகில் இன்று மாலை ( 8 - 08 -2012 )   விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராணுவ வாகனத்தில் இருந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் என்ற ராணுவ வீரரும் ,ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரெட்டி என்ற ராணுவ வீரரும் ,சிவிலியன் ஒருவரும் என மூன்று பேர் மரணமடைந்தனர்.



விபத்து பற்றி கேள்விப்பட்ட மேட்டுப்பாளையம் பாப்புலர் ப்ரண்ட் செயல் வீரர்கள் மாவட்ட தலைவர் ரசூல் தலைமையில் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.கடும் மழைக்கு மத்தியில் விபத்திற்குள்ளான வாகனத்தில் சிக்கி கிடந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட பாப்புலர் ப்ரண்ட் தொணடர்கள் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு விரைந்து அனுப்பிவைக்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன்,இறந்தவர்களின் உடலை மேட்டுப்பாளையம் மருத்துவ மனையில் இருந்து பெற்று மீண்டும் குன்னூரில் கொண்டுபோய் ஒப்படைத்தனர் .

நன்றி http://www.popularfronttn.org - அன்புடன் புதியவானம் 

No comments:

Post a Comment