Monday, December 19, 2011

ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படை வெளியேற்றம் - பலூஜாவில் மக்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டம்









ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படையினர் வெளியேறியதை அடுத்து ஈராக்கின் பல்வேறு நகரங்களிலும் மக்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக அமெரிக்க ஆக்கிரமிப்பு படைக்கு எதிராக எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி வந்த பலூஜா நகர் மக்கள் ஆயிரக் கணக்கில் அணிதிரண்டு தமது வெற்றியைக் கொண்டாடுகின்றனர். 2003 மார்ச் மாதம் ஈராக்கை அமெரிக்கப் படையினர் ஆக்கிரமித்ததோடு முன்னாள் ஆட்சியாளர் சதாம் ஹுஸைன் பதவி கவிழ்க்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
கடந்த 9 ஆண்டுகளாக ஒரு இலட்சத்தி எழுபது ஆயிரம் அமெரிக்கப் படையினர் ஈராக்கில் நிலை கொண்டிருந்தபோது பல்வேறுபட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுவந்தனர்.
சுமார் ஒரு மில்லியன் ஈராக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டதோடு விஞ்ஞானிகள் மற்றும் புத்திஜீவிகள் பல்லாயிரக் கணக்கானோர் அமெரிக்கப் படையினரால் குறிவைத்து கொல்லப்பட்டனர்.
ஜோர்ஜ் புஷ்ஷினால் மேற்கொள்ளப்பட்ட ஈராக் மீதான ஆக்கிரமிப்புக்கு முன்னாள் பிரிட்டன் பிரமர் டொனி பிளேயர் ஆதரவளித்திருந்தார்.
2004 இல் ஈராக் மீதான போரை பிரச்சார மேடைகளில் ஈடுமையாக விமர்சித்து வந்த ஒபாமா தற்போது ஈராக்கில் இருந்து வெளியேறியுள்ள அமெரிக்க இராணுவத்தை வட கரோலினாவில் உள்ள படை முகாமில் வரவேற்றுள்ளார்.
ஈராக்கின் கீழ் கட்டுமானத்தை முற்றாகவே தாக்கி அழித்த அமெரிக்கப் படையினர் பாலியல் வல்லுறவு, சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள், கடத்தல், சித்திரவதை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 9 ஆண்டுகால மெரிக்க ஆக்கிரமிப்பின்போது ஈராக்கின் எண்ணை வளம் தனியார் மயப்படுத்தப்பட்டு அமெரிக்கக் கம்பனிகளின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
அமெரிக்க இராணுவம் வெளியேறும் இத்தறுவாயில் பிரதமர் நூரி மாலிகி ஜனாதிபதி ஒபாமாவுடன் நடத்திவரும் பேச்சுவார்த்தைகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படை வெளியேறியமை ஓர் அசாதாரண சாதனை என ஒபாமா தெரிவித்துள்ளார்.
2003 மார்ச்சில் ஈராக் ஆக்கிரமிக்கப்பட்டபோது நிலவிய பரபரப்பு அமெரிக்கப் படை வெளியேறிய போது ஏற்படவில்லை.
சுமார் 5000 அமெரிக்கப் படையினர் இதில் கொல்லப்பட்டுள்ளனர் என அமெரிக்க தரப்பில் கூறப்பட்டாலும் கொலையுன்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது.
ஈராக் ஆக்கிரமிப்பில் தோற்றுப்போன நிலையிலேயே அமெரிக்கப்படை வெளியேறியுள்ளது. படை இழப்பு மட்டுமன்றி வகை தொகையற்ற நிதியையும் அமெரிக்கா இந்த யுத்தத்தின் மூலம் இழந்துள்ளது. அமெரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய நிதி நெருக்கடியின் எதிரொலியே இப்படை வெளியேற்றம் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதற்கிடையில் கோலாலம்பூர் குற்றவியல் நீதிமன்றம் ஈராக் யுத்தத்தின் இரு முக்கிய சூத்திரதாரிகளான ஜோர்ஜ் புஷ், டொனி பிளேயர் ஆகியோரை போர்க் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது.
இவர்கள் இருவரும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தூக்கில் இடப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளது.
நன்றி http://meelparvai.net

No comments:

Post a Comment